செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை
மேலை நாட்டுக்கு சென்று விட்ட ஒரு ஜென்டில்மேனும் அவருடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த தோழரும் எனது நண்பர்களானார்கள்.
செந்தில் குமார் என்னும் செந்தில் எப்படி என்னுடன் நெருங்கினார் என்பதே என் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய் செயல்பாடுகளும் அளவான சொற்களும் அவரை ஒரு இனிய நபராகவே என்னுள் வைத்திருக்கிறது இனி(யன்), கனி (மொழி) என்ற தீந்தமிழ் சாற்றுப் பெயர் பாரம்பரியப் பெயர் தொடர்ச்சிகளுடன்...
எனது திருமண நாளும் இவருடைய திருமண நாளும் ஒன்றாகும் ஒவ்வொரு ஆண்டும் தவறாத வாழ்த்தை கோர்ப்பது அவரது இயல்புக்கு சான்றாகும். அவர் வாங்கிக் கொடுத்த 2 தொப்பிகள் நினைவு பறை சாற்ற
ஒரு முறை முடக்கு அறுத்தான் கீரையை தொடர்ந்து உண்ண (பச்சையாகவே) உடலில் சிறு கொப்புளங்கள் ஊசி முனை அளவு உண்டானதை கிள்ளியதால் அவை பெருத்தன பிரச்சனை உண்டு பண்ண அறுவை சிகிச்ச்சை செய்யுமளவு சென்று அவற்றை மருத்துவம் பார்க்க உடன் இருந்து இவர் செய்தது உதவி.
மூத்த இனியனை இலண்டனில் முதிர் நிலை கல்வி பயிலவும், இளைய கனியை விருப்பம்போல படிக்க வைப்பதும் அவரின் தகுதி . எல்லோருடனும் நல்நட்பு பாராட்டியே உயர்ந்தோரில் இவரையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். நாங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய் ஆட்களா? எங்களைப் பற்றி எல்லாம் எழுதுவீர்களா? என்றார் பதிலாக எமது கணக்கில் நல்லவர், கெட்டவர் தாம் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியதால் விளைந்த பதிவு இது...
இவர்தாம் தமது சீனியர் என செந்தில் முருகன் என்னும் சமூக ஆர்வலரை தமது கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினார். அது முதல் இவரை பல நிகழ்வுகளில் இவரை சந்தித்தேன். இவர் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கு கொண்டேன்.
கெட்டதே பார்க்கத் தெரியாத மனிதம். எல்லாத் தரப்பு மனிதரிடையேயும் சென்று நல்லதை முன் மொழிந்து இருக்கும் இடத்தை இனியதாக்கத் தெரிந்த மானிடம்.
இவர்கள் இருவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment