Tuesday, February 20, 2024

எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை

 எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை



கடந்த சில நாட்களுக்கும் முன் நண்பர்களுக்காக மருந்து என்ற தலைப்பில் சில கருத்துகளை பதிவு செய்திருந்தேன். அவை யாவும் புதியதல்ல. நம் நடைமுறையில் ஏற்கெனவே உள்ளவைதான். அது பற்றி மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் வலை தளம் மூலம் பல ஆண்டுகளுக்கும் முன்பே நான் பகிர்ந்தவைதாம்.


அன்றைய பதிவில் சில விடுபட்டவை:

1. வாய்வுத் தொல்லை அதிகம் உள்ளோர் காலை எழுந்தவுடன் பழைய நீராகாரம் அருந்திய பின் பச்சை உருளைக்கிழங்குச் சாறு ( ஜூஸ்) ஒரு டம்ப்ளர் அருந்தி வர தினமும் வாய்வுத் தொல்லை இராது.

பொதுவாக உருளைக்கிழங்கு சார்ந்த உணவு வகை வாய்வுதான். ஆனால் இங்கு கணிதம் போல மைனஸ் இன்டு மைனஸ் ப்ளஸ் ஆகிறது.


2. கற்றாழை சோற்றுக் கற்றாழை மிக அரிய தாவரம். இது நல்ல மலமிளக்கி. நோய் எதிர்ப்புத் தன்மை உள்ளது

தினமும் கூட உண்டு வரலாம். சர்க்கரை + தேன் கலந்து. அல்லது அப்படியே...இது பற்றி நான் எனது யூ ட்யூப் வலையத்தில் கூட வெளியிட்டதுண்டு. இன்றைய பிரதமர் நமோ அன்றைய முதல்வர் ஜெவுக்கு இதை பரிந்துரை செய்ததாகக் கூட நான் கேள்விப் பட்டதுண்டு. நண்பர் பாலு ஆகாஷ் உடனே இதிலும் அரசியல் இருக்கிறது என கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன். மேலும் பெண்களுக்கு பெரிதும் பயனாகும் அழகு சாதனப் பொருட்களில் பதனப் படுத்தும் முறைகளில் இந்த கற்றாழை பெரிதும் பயனாகிறது.


3. சுண்டைக் காய் / சுண்டை வத்தல்: என்பார் மோரில் கலந்து காய வைத்தது. வாரம் ஒரு முறையாவது வறுத்து உணவுடன் உண்டு வர உணவால் ஏற்பட்ட நச்சு வெளியேறும்.(புட் பாய்சன்)


4. சளி பிடித்தார்க்கு: கொள், ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் நல்ல மருந்து. இரசம் வைத்து உணவுடன் உண்ண நல்ல குணம் இருக்கும்.


5. பிரண்டைக் கொடி, ஓமவள்ளி அதிலும் கற்பூரவள்ளி போன்றவை மிளகு சீரகத்துடன் சளி போன்றவைக்கு நல்ல மருந்து.


6. ஆவாரை, வெந்தயம் போன்றவை சர்க்கரை அல்லது நீரிழிவு வியாதிக்கு நல்ல மருந்து.


7. சிறியா நங்கை விஷ முறிவு


8. வேம்பு, மஞ்சள்,, இஞ்சி, மிளகு,சீரகம் போன்றவை  உடல் நலத்துக்கான அருமருந்து...


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால் இதை எல்லாம் அவரவர் உடலுக்கு உகந்தால் நீடித்த காலம் பயன்படுத்தலாம் அல்லது பின் விளைவு வேறுபடின் நிறுத்தி ஆராய வேண்டும். ஏன் எனில் மிகுதியான சூடு கூட உடலுக்கு கேடாய் முடியும்.


தினம் 2, வாரம் 2, மாதம் 2, ஆண்டுக்கு 2 பற்றி எல்லாம் உங்களுக்கும் தெரியும் ஆனால் இவை எல்லாம் எந்த எந்த குடும்பங்களில் கடை பிடிக்கிறீர்கள் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.


நல்லா தண்ணீர் குடியுங்கள், உகந்த பழம் சேர்த்துக் கொள்ளுங்கள் கோடை வந்து விட்டது.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment