Sunday, December 31, 2023

சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை

 சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை



திருப்பதியில் : விளையாட்டுப் பையனாகவே இருக்கிறீயேடா?...


பழநீ: செல்வம் சேரும்...வேறொரு வாய் வழி வந்த வார்த்தைகள்...5 ரூபாய் இனாம், அவ்வளவுதானா? மேலும் ஒரு 5 ரூபாய் கொடுத்தது...


திருவண்ணாமலை: இப்படி வர்ரதா இருந்தா வராத....நல்ல அறிவுரை பிறரைப் போல தாமும் நினைத்து சட்டையைக் கழட்டி விட்டு நீண்ட வரிசையில் நின்றபடி அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்த போது...

திருவரங்கத்தில்: மூதாட்டி சிறுவனாக இருந்தவனை இஞ்சினியர் ஆவான், என வாழ்த்தி யாசகம் பெற்றார். ஆனான்.


மாரியம்மன் கோயில்: போயிடு, போடா, போயிடுடா...அதன் பின் அங்கிருந்து அகன்று சென்ற பின் அடிதடிக் கைலப்பு. சிக்கல் தவிர்க்கப் பட்டது...


காளியம்மன் கோயில்: அவனை விட்டுடு தொந்தரவு பண்ணாதே...அண்டை வீட்டுக்காரனை தப்பிக்க வைக்க என்னிடம் வேண்டல் அல்லது கோரிக்கை அல்லது அது அவர்கள் சார்பான ஆவியா?!


முனியப்பன் கோயில்: அடுத்தவர் வாயிலிருந்து வரும் வார்த்தை முன் தெரிந்தது மேலும் நிறைய சிக்கல்களின் போதெல்லாம் விடுவிப்பு...


 வீட்டுள் நிறைய :


இரவில் வெளியே படுத்துக்கிட்டா  சரியாகிடும்...இல்லை செய்ய வில்லை திருடன் தனியாக வெளியில் வீட்டில் இருந்து தொடர்பின்றி இருந்த சிறு அறைக்குள் சென்று தேடல் செய்திருக்கிறான்...எல்லாம் கலைத்து போட்டு பூட்டை உடைத்து...இன்ன பிற....


தேர்தல்லியா நிக்கற முதல்ல அம்மா புட்டுக்கிட்டு போப் போறா பாரு அதை முதல்ல பாரு...இப்படி நிறைய அவள் இறந்தாள் தவிர்க்கவே முடியா சோகம்...நீண்ட...


அடுத்த ஆண்டு அவ இருக்க மாட்டா...அவ(ள்) இல்லைதான் அது அம்மா


40 ஆண்டு கால தியான வாழ்வு


ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் பின் இந்த மூன்றாம் கண், ஆன்மா விழிப்பு, தியான வழி ஒளி: 


"காதுகள்' எம்.வி. வெங்கட் ராம்  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் ஆனால் அந்த நூல் அவரது அனுபவப் பூர்வமான தொல்லைகளை விளக்கி இருக்கும் நுட்பம்...ஆனால் கூச்சமின்றி எப்படித்தான் பதிவு செய்தாரோ அவரக் கேட்க வேண்டும் அது அவரது சுய சரிதைதான்.


ஏனென்றால் தியானத்தில் நிறைய கவிதைகளை, வார்த்தைகள் இழப்பதாக கால நீட்டுதல் இருக்க...


மகாத்மாவும் தனது உள் குரலுக்கு மதிப்பளித்தார் என்கிற குறிப்புகள் உண்டு


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி எல்லாம் பேசியதாக படித்ததாக நினைவில் இல்லை

ரமண மஹரிஷி: இவர் ஒருவர் தாம் நானறிந்த வரையில் ஞானிகளில் "நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்றவர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

திருமூலர்: 

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...



நேரம் காலம் எல்லாம் கவனிக்கப் பட வேண்டியதாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியதாக...


நவ கிரகங்களை எல்லாம் ஆசான் ஜீ  இறையின் புழுக்கை என்கிறார்


பேரண்டம் பெருவெளி பிரபஞ்ச நோக்கு என்ற பார்வையில் அது சரியாகவும் இருக்கக் கூடும்.


ஒன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது

இரண்டு அது நமது ஆன்மாவாக இருப்பது


மூன்று இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு: நம்முள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிடைப்பதை தெரிந்து கொண்டதாக சொல்ல முடியும் என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த  மருத்துவ நண்பரிடம்... ஆனால் அவரும் நானும் பார்த்து கிட்டத் தட்ட 26 ஆண்டுக்கும் மேலாகி விட்டது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment