Monday, December 4, 2023

அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை

 அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை



1. செயற்கைச் சூரியன்: ஜப்பான் ஐரோப்பிய யூனியன் இணைந்து ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து ஆய்வு நடத்தி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் போவதாக செய்தி. சூரியனில் இப்படித்தான் ஹீலியம் வாயு உருவாகி எரிந்து வருவதாகவும் இது வரை புவியில் அணுக்களை பிளவு படுத்தியே அறிவியல் செயல்பாடுகள் இருந்ததாகவும் இதுவே அணுக்களை இணைத்துச் செய்யும்( First) ஆய்வு என்பதும் குறிப்பிடத் தக்கது.2024 அக்டோபர் வரை நமது சூரிய மண்டலத்தின் மையமான சூரிய எரிதலின் உச்சம் நிகழும் என்று அறிவியல் கணித்துள்ளது.


2. இப்போது விண்ணில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் பழசாகிப் போன விண்வெளி ஆய்வுக் கூடத்தை இழுத்து செயல்படாமல் பசிபிக் கடலில் தள்ளும் முயற்சிக்கு பல ட்ரில்லியன் யூ. எஸ் டாலர் (சுமார் 6 முதல் 9 வரை யூ.எஸ் ட்ரில்லியன் டாலர்கள்) செலவாகும்  அதற்கான முயற்சிகளை யூ.எஸ்ஸின் நாசா செய்து வருவதாகவும் அமெரிக்கன் விண்வெளித் துறையான நாசா அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக புதிய ஆய்வுக் கூடம் அமைக்கவும் ஏற்பாடுகள் உள்ளன.

3. 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சூரிய மண்டலத்தை கண்டறிந்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி. அதில் 6 கிரகங்கள் புவியை விட இரண்டு மடங்கு பெரிதாக உள்ளதாகவும், நமது சூரிய மண்டலத்தில் நடந்தது போன்ற இடித்தல், சிதறல் போன்ற நடவடிக்கை ஏதுமின்றி இவை உருவாகி உள்ளதால் கிரகங்களைப் பற்றி அதன் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்புகள் நன்கமைந்துள்ளன என்றும் நாசா செய்தி.


(நினைவுக்கு: ஒளியின் வேகம் சுமார் 3இலட்சம் கி.மீ /1,86,000 மைல்கள் ஒரு நொடிக்கு அது போல ஒளி ஓராண்டு பயணம் செய்யும் தொலைவையே அறிவியல் ஒர் ஒளியாண்டு என்று கணக்கிடுகிறது.)


4.2021 செவ்வாயில் இறக்கிய ஹெலிகாப்டர் மாடலை அடிப்படையாக வைத்து புவியில் இறங்கும் ஹெலிகாப்டர் விசையையும் மேம்படுத்த நாசா ஆராய்ச்சி


5. செவ்வாயில் உள்ள நீரிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்க சீனா செய்யும் முயற்சிக்கு நாசா ஒத்துழைப்பு செய்யும் என்றும், விண்வெளியில் தாவர வளர்ச்சி பற்றி ஆய்வுகள் உள்ளன என்றும் செய்திகள் உள்ளன.


பி.கு: நாசாவைச் சார்ந்த செய்திகளே இவை என ஏன் என்று கேட்கிறீர்களா? என்ன தான் இருந்தாலும்(US) நாசா,ஜப்பான், ரசியா,ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, சீனா, நமது இஸ்ரோ ஆகியவற்றில் எப்போதுமே நாசாவே முன் நிற்பதால் அதை சொல்வதன்றி வேறு வழியில்லை.

மிக்ஜாம் புயல், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் என்று செய்தி ஊடகங்கள் அசை போட்டுக் கொண்டிருக்க இதெல்லாம் எங்கே கவனிக்க நேரம் என்கிறீர்களா? 

என்ன தான் அறிவியல் கீறல்கள் மனித முயற்சிகள் இருந்த போதும், ஆகாயம், நெருப்பு, காற்று,நிலம் , நீர் இந்த  இயற்கையின் ஐந்து கூறுகள் அடிப்படையை எவ்வித மனித முயற்சிகளும் நெருங்கவும் முடியாது எப்போதுமே நாயகம் இவை மட்டுமே...


அறிவியல் அவசியம்தான் இயற்கை அதை விட பெரும் அதிசயம் அல்லவா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


டிசம்பர் 4 1997 என்றதொரு நாள் என் வாழ்வில் வந்து இன்றுடன் 26 ஆண்டுகள்  அந்த அர்ப்பணிப்புக்கான‌ பதிவு இது. இரு வேறு துருவங்கள் இருப்பதால்தாம் புவி சுழல் புவி பயணம்... தன்னைத் தானே 24 மணி நேரத்துள் சுழற்றிக் கொண்டு மணிக்கு 67,000 மைல்கள் வேகத்தில் செல்லும் புவியில் நமது இருப்பே நமக்குத் தெரிவதில்லை. இல்லாதது பற்றி ஏங்கிக் கொண்டு இருப்பதை போற்ற மறந்து நிற்கிறோம்.


No comments:

Post a Comment