Friday, September 15, 2023

GOD OF MUSIC: A.R.RAHMAN: கவிஞர் தணிகை

 காட் ஆப் மியூசிக்: ஏ .ஆர்.ரஹ்மான்: கவிஞர் தணிகை



சென்னையில் நடந்த மறக்க முடியுமா? மறக்குமா நெஞ்சம்: நிகழ்வின் குளறுபடிகளுக்கு எந்த வகையிலும் காரணமில்லாத போதும் பொறுப்பேற்றுக் கொண்டு கட்டணத்தை திருப்பி அளிக்க ஆரம்பித்த எல்லாப் புகழும் கடவுளுக்கே என்று சற்றும் தலைக்கனம் இல்லாத ஏ.ஆர் ரஹ்மானை எப்படிப் பாராட்டினாலும் தகும்.யாரால் நிகழ்ந்திருந்தாலும் நாம் தாம் பொறுப்பு என தமது மகனிடமும் அறிவுறுத்திய பெருந்தன்மை பற்றி செய்திகள் பகிர்ந்திருந்தன.


நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சுமார் 20,000 பேர் வர அனுமதிச் சீட்டு கொடுக்கப் பட்டுள்ளது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்ததே முதற்காரணமாக கருதப்படுகிறது. ஆனால் 41 ஆயிரம் பேர் அமர இட வசதி உள்ள இடத்தில் 50000 பேருக்கும் மேல் திரண்டதே இரண்டாம் காரணம்.


மேலும் ஒரே இடத்தில் பல வகையான கட்டணம் கொடுத்து அனுமதி பெற்றவர்களும் திரண்டதும், அவரவர் பிரிவிற்கு சென்று அமராதததும் அதனால் சேர்ந்த கூட்டமும் காரணமாகிட‌


போதுமான அளவில்லா காவல் துறையினரின் முன்னேற்பாடு வரையறைக்குள் இருந்ததால் கட்டுமீறிய கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போனதைப் பயன் படுத்திக் கொண்ட புல்லுருவிகள் பெண்களை உரசி, நெருடி நீங்காத காயத்தை வடுவை ஏற்படுத்திய வண்ணம் சிறுமையுடன் நடந்து கொண்டதை அனைவரும் எல்லா  ஊடகங்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.


அது பற்றிய பதிவுகளும், பகிரதல்களும் வேதனைக்குரியதாய், வருத்தம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதற்கு ஆண் வர்க்கத்த்டை முழுவதுமே குற்றம் சாட்டி விட முடியாது...


மிருகங்கள் எங்கும் இரை தேட வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதை என்றுமே பெண்கள் மறந்து விடக்கூடாது. நடந்த செயல் வெட்கம் கெட்ட வார்த்தையில் சொல்லவொண்ணா செயல்களாகி சென்னையின் பெயரையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரையும் களங்கப் படுத்தி இருக்கின்றன.அவர் சென்னையில் பிறந்ததால் பெருமைப்படும் உலகே... வணக்கம் சென்னை என்றே பாடுமுன் பறை சாற்றும் ஒரு உயர்ந்த நபரை சென்னையின் நிகழ்வு காயப்படுத்தி விட ஈனர்கள் எங்கும் இருக்கிறார்கள் அதற்கு சென்னை மட்டும் விதி விலக்கா என்ன?பிரேசிலில் ஒரு பத்திரிகைப் பெண் செய்தியாளர் நேரடி ஒளிபரப்பின் போதே தொடப் பட்டு பின் புறம் தட்டப்பட்டு இருந்ததாகவும், ஐக்கிய அமெரிக்க நகர் ஒன்றில் காவலர் ஒருவர் தமது நாலு சக்கர வாகனம் மூலம் ஒரு பெண்ணை ஏற்றிக் கொன்று விட்டு சிரித்தபடியே இருபதாயிரம் டாலர் செக் எழுதிக் கொடுத்தால் சரியாகி விடும் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டியபடி செல்வதையும் காணொளி மூலம் பி.பி.சி செய்தி கொடுத்திருந்தது.


நல்ல வேளை ஒரு முறை பாப் கிங்: மைக்கேல் ஜாக்சன் இந்தியா வருவதாக இருந்தது இரத்தானது கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஏன் எனில் அப்போது இப்படி எல்லாம் நடந்திருந்தால்...சொல்லவே தேவையில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment