Friday, September 15, 2023

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை

 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்  சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை




தமிழக முதல்வர் ஸ்டாலின்: கல்லூரி மேல் படிப்பு படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி,நகரப் பேருந்துகளில் அல்லது உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணம், இப்போது அறிஞர் அண்ணா பிறந்த நாளில் சுமார் ஒரு கோடியே ஆறு இலட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை... 

சத்தமில்லாமல் எந்தவித அரசு அலுவலகங்களிலும் ஏறி இறங்கி இம்சைப் படாமல் இலஞ்ச ஊழல் இல்லாமல் இடையுறாமல் வங்கிக் கணக்கில் நேற்றிலிருந்தே வரவு வைக்கப் பட்டிருக்கிறது பாராட்டத் தக்கது.

ஒரு சமூக செயல்பாட்டாளாராகவும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராகவும் இருப்பதால் அவ்வப்போது பொது மக்களை பேருந்துகளில் சந்தித்து பெண்களிடம் பேசும் போது இந்த நிதி உதவி மட்டும் இன்னும் கிடைக்காமல் உள்ளது அதையும் கொடுத்து விட்டால் பரவாயில்லை என்றவாறு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

அதற்கேற்ப வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டு முதல்வர் சகோதரிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி இது உதவித் தொகை அல்ல உரிமைத் தொகை என்றும் உங்கள் உழைப்புக்கானது என்றும் இந்த திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர் என்றும் இனி மாதம் தோறும் 1000 ரூ வரவு வைக்கப் பட்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பேற்படுத்திக் கொண்டுள்ளார் ஏழை எளிய மக்களுடன். முக்கியமாக தாய்மார்களுடன் பெண்களுடன் இது தேர்தல் காலத்தில் அதிர்வலைகளை கிளப்பி கிளர்ச்சியூட்டும். வாழ்த்துகள் நன்றி முதல்வருக்கு  பெண்கள் சார்பாக.

 ஏன் எனில் அந்த தாய்மார்கள்தான் முதலில் நின்று வாக்களிப்பவர்கள் நடுத்தட்டு மற்றும் மேல் தட்டு மனிதர்களை விட... சரியான நாடித் துடிப்பு. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் தமிழகத்தின் பெண்கள் வெளிக்கிளம்பி விட்டனர். பேருந்துகளில் 30 பயணிகள் என்றால் அதில் 20க்கும் மேற்பட்டோர் பெண்களாய் இருப்பதை கவனித்திருக்கிறேன். பெண்கள் வாழ்வில் இது ஒரு சத்தமிலாத புரட்சிதான்.


 இந்த திட்டத்தை கமல் முன் மொழிந்தார் தேர்தல் காலத்தில் தி.மு.க வழி மொழிந்து இப்போது அமல் படுத்தி உள்ளது தமது தேர்தல் கால உறுதிமொழியை...கர்நாடகாவில் ஈராயிரம் என்றும், வடக்கே ம.பியா சரியாக நினைவில் இல்லை அங்கும் கூட இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஊடகங்களில் படித்த நினைவு. இதே போல அனைத்து அரசுத் திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் முக்கியமாக பட்டா கொடுப்பது போன்றவற்றில் சரியான தகிடுதத்தங்கள்  மோசடிகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில் தியாகராய நகரில் ஆரம்பிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், காமராசரால் மாநிலமெங்கும் பரவலாக விரிவு படுத்தப் பட்டு, எம்.ஜி.ஆரால் சத்துணவாக்கப் பட்டு,இப்போது ஸ்டாலின் அவர்களால்  தமிழகத்தின் அனைத்து அரசுத் துவக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டியுடன் இளம் சிறார்கள் பள்ளிக்கு வரவேற்கப் படுகிறார்கள்.

நல்லதை நாடு வரவேறும் நாமும் வரவேற்போம்

அல்லவை தேய அறம் பெருகட்டும். வாழ்க!

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment