Wednesday, June 15, 2022

பனிமேதாஸ்: கவிஞர் தணிகை

 பனிமேதாஸ்: கவிஞர் தணிகை



சேலம் குகை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இவரைச் சந்தித்தேன். காட்சிக்கு எளியவர். இவருக்குக் கீழ் 3 உதவி தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். இவருக்கு மிகவும் தாமதமாக நல்லாசிரியர் விருது கிடைத்தது.


பிரதிபயன் கருதாது யார் என்று தெரியாதார்க்கு நாம் செய்யும் உதவியே உதவி. அப்படி உதவியவர்தாம் இவர். முதல் சந்திப்பில் அறிமுகப் படுத்திக் கொண்டேன் . அது ஒரு காலை பிரார்த்தனை நேரம். பள்ளியின் சுமார் 4200 மாணவர்கள். மேடையேற்றப் பட்டோம். எனது பேச்சை வெகுவாக இரசித்தனர். ஒரு சிறுவன் வந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டு என்ன பேசீனீங்க, எனக்கு சொல்லுங்கள் என்றான். 


ஏன் நீ கவனிக்க வில்லையா?

இல்லை நான் லேட்டாக வந்தேன்...

ஏற்கெனவே இருந்தவர்களைக் கேட்டுக் கொள்ளேன் என்றதற்கு

நீங்கள் சொல்லுங்கள் என்றான்...



தடை இல்லாமல் மாணவரிடையே பேச அனுமதித்தார் எனக்கும் அப்துல்கலாம் மாமனிதர்க்கும் இருந்த சிறு தொடர்பு மந்திரமாக வேலை செய்தது.எப்போது கேட்டாலும் எங்கள் கல்லூரி சார்பாக முகாம் செய்ய ஒத்துழைத்தார். தன்னால் முடிந்தவரை நான் கேட்டதை செய்து கொடுத்தார்.


 இதைப் பற்றி இவர் பற்றி ஏன் நான் சொல்ல வேண்டும் சொல்கிறேன் எனில் உள்ளூர் ஒரு பள்ளியில் 3 நாள் முகாம் ஏற்பாடு செய்து விட்டு இரண்டு நாளில் முகாமை முடித்து 3 ஆம் நாளில் நடத்த விடாது முக்கியமாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்க்கு சென்று சேர வேண்டிய கல்வி கேள்வியை  தமது சுய விருப்பு வெறுப்புக்காக தடுத்த பள்ளி முதல்வர்களை நான் கண்டதுண்டு, 

மேலும் தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100 என்ற ஒரு சிறு மாணவச் செல்வங்களுக்கு பயன்பட்ட சிறு நூலை தமிழ் கூறும் நல் உலகெலாம் பரப்ப வேண்டும் என்று எல்லா பள்ளிகளையும் அணுகிய போது அந்தந்த தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் எப்படி இருந்தனர் என்றெல்லாம் பார்த்த அனுபவம் உண்டு. எனவேதான் இவர் பற்றி நான் சொல்ல அவசியமாகிறது.


சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பல்லாயிரம் பேருக்கு சென்று சேரவேண்டிய பொதுநலத்தை தடுக்க நினைப்பாரை எல்லாம் நமது பூமி ஆசிரியராக வைத்திருக்கிறது ஆனால் இந்த மனிதர் பனி மேதாஸ் ஒரு பணி மேதாவி...


இவர் அந்தப் பள்ளிக்குள் இணைத்துக் கொண்ட போது சுமார் 1200 பள்ளி மாணவர்கள் என்று இருந்ததை இவரது காலத்துள் 4000 மாணவர்களுக்கும் மேல் என்று மாற்றி காட்டி இருந்தார். இவர் இப்போது பணி ஓய்வில் இருக்கிறார்.. மேலும் எனக்கும் அவருக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்தே வருகிறது. மாவட்டத்தில் பெரிய பள்ளி அத்துடன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அதிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளி.


இவர் போன்றோர் தம் வேலையை வேலையாகச் செய்யாமல் சேவை என்று செய்வதால் தாம் செய்ததால் தாம் இந்த பூமி இன்னும் தமது அச்சு மாறாமல் சுழன்று கொண்டிருக்கிறது... நான் சந்தித்ததில் மிகவும் பொறுப்பான மனிதர்களில் இவரும் ஒருவர்.


நாளையே சாவது போல சில காரியங்களைச் செய்ய வேண்டும்

நாள் எல்லாம் நிற்பது போல அந்தக் காரியம் இருக்க வேண்டும் எனச் சொல்லும் காந்தியம்


அதன் அடிப்படையிலேயே இவரைப் பற்றிச் சொல்ல பல நாட்களாக எண்ணி இருந்து இன்று சொல்லி இருக்கிறேன்

இது போல இவர் போல எனது சிந்தையில் இடம் பெற்ற சிலர் பற்றி முடியும் போது இன்னும் சொல்வேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment