Saturday, December 24, 2016

INDIA AND ME:மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.

மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.
Image result for RE CYCLE STARTS...



டி மானிடேசன் என்ற மோடியின் வித்தையால்,காய் கறி வியாபாரம் ஆகவில்லை என வியாபாரிகள் கவலைப்பட, விலை வீழ்ச்சிக்குப் பின்னும் காசில்லாமல் எவருமே வாங்காமல் நுகர்வோர் பணமின்றி அவதிப்பட ஒரு மனிதன் கேட்கிறான் என்னிடம் நடைப்பயிற்சியின் வீட்டு முன் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு இறந்து போகட்டுமா என்று. அவன் ஒரு மது அடிமை.இன்று நுகர்வோர் தினம் என்று ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய மந்திரி அனுப்பியதாக குறுஞ்செய்தி ஒன்று எனது பேஸிக் மொபைல் செல்லுக்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஜெ இருக்கும்போதே பல முறை சொன்னது என்றாலும் எந்த செயல்பாடும் இல்லை. இப்போதுகூட எடுக்கிறோம், ஆனால் எடுத்து ஊருக்குள் மாற்றி வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். எந்த வித டி மானிட்டேஷன் ஆனாலும் சரி இந்த மதுக்குடி வியாபாரம் மட்டும் அப்படியே குறையாமல் நடந்து கொண்டே இருக்கிறது காய் கறி வியாபாரிகள் கூட வியாபாரம் ஆக வில்லையே என சலித்துக்கொண்டிருக்கும்போதும்....அது எப்படி என்றுதான் விளங்கவே இல்லை.

Related image

ஒரு சமுதாய மறுமலர்ச்சியை சீரழித்த பெருமை இரு கழக கலக ஆட்சிகளுக்குமே உண்டு. மதுவை இவர்கள் அனுமதித்திருக்கவே கூடாது.
ஒரு மது அடிமை அவனது வீட்டில் அவனுக்கென்று இப்போது எவருமே கிடையாது ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த‌ வயோதிக தந்தையும் இறந்த பின்னே இவன் தனிமனிதனாகவே வாழ்க்கை நடத்தியபடி இருக்கிறான் வயது 30 முதல் 40 வரை இருக்கலாம்.

எனது நடைப்பயிற்சியின் போது நெடு நாள் கழித்து சில நாளுக்கும் முன் அந்த வழியே சென்ற என்னைப் பிடித்துக் கொண்டு ஒரு அடி கூட முன்னேறிச் செல்ல விடாமல் அவன் புராணம் பாடினான். தற்போது மூன்றாம் பாகம் ஆரம்பித்து விட்டது என் வாழ்விலும் பணி பொருட்டு முன் போல அதிகமாக எமது வழக்கமான பாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபடச் செல்ல முடியவில்லை. சேலத்து ரயில்பாதை நடைமேடையில் நடைப்பயிற்சி முடிந்து போகிறது . ஆனால் அது எனக்கு முழுதாக நிறைவளிக்காது...பல உடற்பணிகள் சில உடற்பிணிகள், தளர்வு இப்படியாக நமக்கிருக்க..
Related image


விடுமுறை எடுத்துக் கொண்டு நாம் அந்த பழகிய பாதையில் செல்ல, இவன் வந்து முதலில் சார், சொல்லுங்கள், நான் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு செத்துப் போகலாம் என நினைக்கிறேன் சார் என்றான்.

வேண்டாம், நீ இப்போதே குடித்து, குடித்து பாதி இறந்து விட்டாய், இன்னும் மீதமிருக்கும் நாட்களை எப்படியாவது கழித்து விடு. இயல்பாக இற.எல்லோருக்கும் இறப்பு வரும் அது என்றும் மாறாது.அதுவரை நமது வாழ்வை நாம் தொடர்ந்தேயாக வேண்டும், இல்லாவிட்டால் நீ உடலை இழந்தும் ஆவியாகி அப்போதும் நிம்மதி இல்லாமல் அலைந்து அடுத்தவரை தொந்தரவு  செய்வாய், உனது சகோதரி குழந்தைகளுக்கு உன்னால் முடிந்தால் ஏதாவது உனது வருவாயில் இருந்து நல்லதை செய், தேவைப்படும் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்,என்று கூறினேன்.

ஓ! அப்படியா சொல்கிறீர்கள், சரி என்று சொல்லி இருக்கிறான். சொந்த வீடும் வாசலில் சில மரங்களும், ஒரு குடி நீர் குழாய் இணைப்பும் அவனது சொத்து, மற்றபடி மது இல்லாமல் அவனால் வாழ முடியாது, எப்போதாவது கூலி வேலைக்கும், அல்லது லாரித் தொழிலில் கிளீனராகவும் பணி புரியச் செல்வான் அவன்...
Related image

பி.எஸ்.என். எல் எவருமே இல்லையென்றாலும், மதியம் 1.30 முதல் 2.30 வரை சாப்பாட்டு இடைவேளை என கறாராக கடைப் பிடிக்க, ரிலையன்ஸ் பையன் மார்ச் வரை இலவசம் ஆதார் எண் மற்றும் 4ஆம் அலைக்கற்றை செல்பேசியின் அடையாள எண் இருந்தால் போதும் சிம் இலவசம் என எப்போதும் கூவிக் கூவி அழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு எந்தவித மதிய உணவு இடைவேளை இருப்பதாகவும் தெரியவில்லை.

நேற்று சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் திருமண மண்டபத்தருகே ஒரு வேலையாக செல்ல வேண்டி இருந்தது. அங்கே கூட்டம், 64 முக்கியபணியாளர்களை முடக்கி, வங்கியின் தலைமையகத்தில் புதுக் கற்றை புது நோட்டு, புதுக் கணக்கு பரிசோதனை, இளங்கோ என்பவர் நமது சேலத்து மந்திரிக்கு மிக நெருங்கிய சொந்தமாம், 150 கோடி, 70 கோடி என்று பேச்சு அடிபட‌ செய்தியாகிறது அந்த சோதனை அங்கு 3 ஆம் நாளில் நடைபெறுகிறதாம்.

எல்லாம் உருகுகிறார்கள், ஆனால் வரலாறு என்ன சொல்கிறது எனில் ஜெவுக்கு சசியை அறிமுகப் படுத்திய சந்திரகலாவின் முகத்தில் ஆசிட்டும், தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த  டி.என் சேஷனை ஓட்டலில் புகுந்து அடிக்க யத்தனித்ததும், இந்து ராம் பயந்து பெங்களூர் ஓடியதும், தி.மு.க பன்னீர் செல்வம் என்ற வழக்கறிஞர் குற்றுயிரும் கொலையுயிருமாக படுக்கையில் கிடக்க காரணமாக இருந்ததும், மணி சங்கர அய்யரை சட்டை கிழிய அடித்து விரட்டியதும்,திருநாவுக்கரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஒருவர் அவரைக் காப்பாற்றியபோதும் அவர்களை வெளியேற்றி கே.கே.எஸ். எஸ்.ஆர் முகத்தின் மேல் ஆசிட் வீச்சு நடந்ததும், நெடுஞ்செழியன் போன்ற சிலர் விலகியபோது உதிர்ந்த ரோமம் என்றதும், கலைஞர் கருணாநிதியை, முரசொலி மாறனை டி.ஆர். பாலுவை நள்ளிரவில் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைத்ததும்,அட நம்ம ட்ராபிக் இராமசாமியை போஸ்டரை கிழித்தார் எனச் சொல்லி அதிகாலையில் சிறைக்கு அனுப்பியதும்,

கோவனை மதுவிலக்குக் கோரி பாடினார் என சிறை செய்ததும், சசி பெருமாள் என்ன செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் ஒரு வார்த்தை கூட இறந்தபோதும் கூட பேசாமல் இருந்ததும், சென்னையும், கடலூரும் வெள்ளத்தில் மூழ்கியபோதும் ஒன்றுமே செய்யாமல் பொது நல ஆர்வலர்கள் கொடுத்த தான தர்மத்திலும் அம்மா ஸ்டிக்கர்தான் இருக்க வேண்டும் எனப் பண்ணியதும்...

Related image

இப்படியாக ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அரசின் நடவடிக்கையாக அரசாங்க நடவடிக்கையாக ஒரு நியாயத்துடன் இவை நடந்திருந்தால் அனைவருமே ஏதும் சொல்ல வழி இல்லை. எல்லாமே தாம் என்ற கர்வ ஆணவ உணர்ச்சியால் விளைந்தபடியால் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நாம் யார் யார் எல்லாம் நமக்கு பெரிய எதிரி என நினைக்கிறோமோ அவர் எல்லாம் பெரிய எதிரியே அல்ல. உண்மையில் எதிரியே அல்ல. அவர்கள் எல்லாமே உனது மரணத்தில் வந்து தமது சோகத்தை சொல்லிச் சென்றார்கள். உண்மையில் அவரவர்க்கு அவரவர் குணாம்சங்கள், அவரவர் உடல்நிலைகள், அவரவர் எண்ண அலைகளே பெரிய எதிரி. அவரவர் ஒழுக்க நெறிகளே அல்லது ஒழுக்கமின்மையே பெரும் எதிரிகள் அதைத்தானே நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என கணியன் பூங்குன்றனார் வரிகள் செப்பின.


சிவாஜி சிலையும், கண்ணகி சிலையும், அண்ணா பெரு நூலகமும், இடம் மாறி இருக்க வேண்டிய சட்டசபை வளாகமும் அனைவர்க்கும் தேவைப்படும் உழவர் சந்தையும் ஒரு தனிமனித விருப்பு வெறுப்பின் முன் நாட்டின் ஆட்சி முறைமைகளாகி சின்னா பின்னப்பட்டன...அந்த தமிழக ஆண்டுகள் முடிவுக்கு வந்து விட்டன...

மற்றொரு சுழற்சியின் முதற் புள்ளி ஆரம்பமாகிவிட்டது. இனியாவது தமிழகத்தின் தலைவிதி நன்றாக ஆட்சி செய்வோரின் வசம் ஆகட்டும்...

அப்பல்லோவும், சசியும் சேர்ந்து ஆடிய நாடகத்தை உலகறியும், இதில் மோடியும் உள்ளடக்கம், 11.30க்கு செய்தியாக அறிவிக்க ஜெவின் மரணச் செய்தி 11.09க்கு மோடி இறந்த வருத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அப்பல்லோவில் இருந்த ஒரு நர்ஸ் ஒரு துண்டுக் காகிதம் அதில் ஒரு மாத்திரை அல்லது மருந்து பெயர் எழுதி கீழே கிடந்ததாக கொண்டு சென்று நிர்வாகத்திடம் கொடுத்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆக மூன்றாம் தளத்தில் இரும்பு ஷட்டருடன் தமிழகத்தில் முதல்வராக இருந்த ஒருவர் எவருக்கும் தெரியக்கூடாது என்ற நிலையில் உள் வைக்கப்பட்டு, கவர்னர் மத்திய மந்திரிகள் வரை எல்லாமே தரை தளம், முதல் தளம் வரை வந்து சென்று அம்மா உப்புமா சாப்பிட்டார், நல்லா தண்ணீர் குடித்தார், மருத்துவரிடம் நகைச்சுவையாக பேசினார், கொடநாட்டு டீ தருகிறேன் எமது போயஸ் வாருங்கள் என எம்பால்மிங் முறையில் இருந்த ஒரு உடலை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம் இமாலயம்....எந்த உலகிலும் இல்லாதது.அடுக்காதது...

தமிழகமும், இந்தியாவும் அடுத்த சுழற்சிக்கு தயாராகிறது...எனது வயதும் உடலும் கூட...

Related image

அனைவர்க்கும் கிறிஸ்மஸ் சீசனல் புத்தாண்டு வாழ்த்துகளை உலகெங்கும் இருந்து இந்த வலைதளத்தை படிப்பார்க்கு மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் சார்பாக உரித்தாக்குகிறேன்.

 பி.கு: ஜெவின் மரணம் பற்றி தமிழச்சி ஒருவர்தான் முன்பே சொன்னார் ஒரு காவல்துறையின் நண்பர் வழியாக செய்தி கசிந்ததாக பயமின்றி அந்த நபர் ஒருவர்தான் சரியான பதிவராக செய்தியாளராக இருந்திருக்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



4 comments:

  1. இரும்பு பெண், ஆளுமை கொண்ட தலைவி நடத்திய உண்மைகளை பதிவு செய்துள்ளீர்கள். எனது சல்யூட் உங்களுக்கு.

    ReplyDelete
  2. thanks vekanari for your comment on this post. vanakkam. please keep contact.

    ReplyDelete