Wednesday, December 14, 2016

முகாந்திரமில்லா முடிச்சுகள்: கவிஞர் தணிகை

முகாந்திரமில்லா முடிச்சுகள்: கவிஞர் தணிகை

Image result for people are very bad than animals

மிருகங்கள் உணர்ச்சிகளை அப்படியே காண்பிக்கின்றன அப்பட்டமாக அப்படியே.ஆனால் மனிதர்கள் அறிவுடையவர்களாக காட்டிக் கொள்வார்கள் உணர்வுகளை மூடி மறைக்கும் கலை ஒன்றை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் விளையாடுகிறார்கள் அது மட்டுமில்லாமல் எந்தவித அடித்தளமுமில்லாமலே எப்படி எல்லாம் கூசாமல் ஒருவரை ஒருவர் பற்றி  எப்படி எல்லாம் மறைமுகமாகவும் அவதூறு பரப்புகின்றனர்.

Image result for people are very bad than animals

காணமல் பேசுவார் கழுதைக்கு சமானம் என்பார். இந்தப் பழமொழி எப்படி வந்தது என ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியது. ஏன் எனில் எந்தக் கழுதையுமே இப்படி நடந்து கொள்வது இல்லை. மேலும் கழுதை தமது கர்ணக் கொடூரக் குரலாயிருந்தாலும் (நமக்கு தான் அது அப்படி அதற்கு அது ஒரு வெளிப்பாடுதானே?) அது சத்தமிட்டு கத்தி விடுகிறதே அப்படிப் பார்க்கும்போது அது மூடி மறைக்காததன் இயல்பு நன்கு விளங்கும். எனவே மூடி மறைத்தல் என்ற குணாம்சம் அதற்கும் கிடையாது.

எப்போதோ நடந்த சம்பவத்தை அடிப்படியாக வைத்து இப்போது எந்தவித தொடர்புமில்லாதிருந்த போதும் ஒருவர் மற்றொருவரை வேறொரு சம்பவத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார் அதை என்னால் எப்படி சரி செய்ய இயலும்? இவராகவே யூகமாக. அது இல்லை என நானறிந்தபோதும் அவரிடம் விளக்கிச் சொன்னாலும் அவர் அதை நம்பும்படியாய் இல்லை என்ன செய்ய?

மற்றொரு பதர் எந்தவித முகாந்திரமுமில்லாமலே  நெருப்பு மாதிரி என்ற ஒருவரை  இல்லாத கேள்வி எல்லாம் கேட்டு வழக்கறிஞர் வைத்து நோட்டரி வாங்கி நிரூபிப்பது போல நிருபித்தாரா? தணிக்கை செய்வார்தானே இந்த உலகில் பெரும்புள்ளிகளை, பணக்காரர்களை வேறு வேறு தொழில் செய்ய கொண்டு விட்டு அவரை அரசை ஏமாற்றும் காரண கர்த்தாக்காளகின்றனர். அப்படிப்பட்ட தணிக்கையாளர்களை வைத்து எல்லாம் செய்யப்பட்டதா என பாண்டே கேள்வி கேட்பது போல எல்லாம் கேட்பாராம் பதில் சொல்ல முடியாதாம்...தங்களிடம் உள்ள குறைகளை எல்லாம் மறைக்க எதிரில் உள்ளாரை இது போன்ற பல கேள்விகள் எழுப்பி கேட்டு வாயடைத்து விடலாம்...என்ற மமதை ஆனால் உண்மைதான் எல்லாரையும் விட பெரியது என்பதை காலம் சொல்லுமே...ஆனால் அதுவரை நிறைய பேர் காத்திருந்து அதை எல்லாம் சந்திக்க சாதிக்க இருப்பதில்லை.
Image result for people are very bad than animals


கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்து விட்டு பதில் கேள்விகளை ஆண்டுகள் ஓடி மறைந்த பின்னே காதில் சேரும்படி கதைத்திருக்கிறார்கள். கதைக்காமல் அது எப்படி கை கால் முளைத்து உரியவரிடம் சேர்ந்திருக்கும்?

ஜோதிபாசு பிரதமராக கேட்கும்போது கட்சிதான் அதை தடுத்து விட்டதாம். இந்த நாடு தழுவிய உண்மையே எம் போன்றோருக்கு இப்போதுதான் தூங்கு மூஞ்சி தேவகவுடா பிரதமரான கதையை வெளியே சொல்லும்போதுதான் தெரிய நேர்ந்தது. அப்படி அவர் பிரதமராக பதவி ஏற்றிருந்தால் நன்றாக நாடு விளங்கி இருக்கும்.

3 முறை குஜராத் ஆண்டதாக அரற்றும் மோடியிடம் சிக்கி சின்னாபின்னாப் படும் மக்கள் கூட்டம் 23 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டவரிடம் கிடைத்திருந்தால் ஒரு வேள நல்ல திருப்பங்களுடன் சிறந்திருந்திருக்கலாம். கம்யூனிஸ்ட்களுக்கு அது போன்ற வாய்ப்பு இனி என்றுமே இந்தியாவில் வருமா என்று தெரியாது .மேலும் கம்யூனிஸ்ட்கள் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவில்லை நழுவ விட்டு விட்டனர் என்பதே சரித்திரம். இதை முகாந்திரமில்லாமல் மறுப்பாரும் உண்டு பாரதியை படிக்காமலே படித்த பேரறிஞர்களாக அவன் வெறும் கஞ்சாப் பேர்வழி என்று கேவலப்படுத்திக் கொண்டு. அதில் அவன் கேவலம் தெரியவில்லை. இவர்களின் கேவலாமான கோணல் முகம்தான் வெளிப்படுகிறது,

75 நாள் உறங்கிய இந்திய ஊடகமும், சட்ட வல்லுனர்களும் இப்போது தமிழக முதல்வராயிருந்த ஜெவின் வாழ்வை ,அவரின் இறுதிக் காலச் சம்பவங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், நர்ஸ் சொன்னார், உப்மா சாப்பிட்டார், கொடநாட்டு எஸ்டேட் டீயை போயஸ் கார்டனில் சாப்பிடக் கூப்பிட்டார் என்றெல்லாம் மொழிகின்றன...ஆடித்தார், கீழே தள்ளி விட்டார் சசி முக்கிய பதவியை தமது உறவுகளுக்கு கேட்டு என்றெல்லாம். சரி இதை எல்லாம் முன் கூட்டியே கொண்டு வர முடியவில்லை...?
Related image


தமிழச்சி ஒருவர்தான் பாரதிய ஜனதா கட்சிதான் இவரை படுக்கைப் படுக்கையாய் படாதபாடு படுத்தி வைத்தது என்று முன்பிருந்தே மொழிந்தார்.

இவருடன்  திருப்பூரில்  சிக்கிய 570 கோடி பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நடத்திய கடைசி பேரம்தான் இவருடன் அப்பால் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவத்துக்கு முன் நடந்தது என்றெல்லாம் செய்திகள் உலவியது உண்டு.போயஸ் கார்டனுக்கு இரவில் கன்டெய்னர் லாரி சென்றதாக இதே பச்சோந்திப்பயல்கள் கூட குரல் எழுப்பியதுன்டு...ஆனால்..

Image result for people are very bad than animals

இப்படி தனிமனிதர் வாழ்வு, குடும்பம், ஊர், சுற்றம், உறவு, நாடு உலகு எல்லாம் முகாந்திரமில்லாமல் போடும் முடிச்சுகள் அவிழ்க்கப் பட முடியாததாகவே  போய்விட ...குன்ஹா போன்றோர் சொன்ன நீதி எல்லாம் காற்றாய்ப் பறந்தன...ஏன் அதில் அப்படியே உண்மை இருந்தும் அவரையும் அவமதித்த கதை நிகழ்ந்ததே... உண்மைக்கு ஒருவர் கூட துணைவராமையும் பொய்களுக்கும், புனை சுருட்டுக்கும் படை பரிவாரம், அணி அணியாக சேர்வதும் இன்று நேற்றா, காலம்காலமாக பாரதி சொல்படி பாஞ்சாலி சபதப் பாடல்களில் நெட்டை மரங்களென நின்றார் என்பது போலத்தானே இப்போதும் எப்போதும், நானும் கூட எழுதி வடிகாலாய் ஆற்றாமையை வெளிப்படுதுவத தவிர வேறென்ன முடிகிறது?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment