Sunday, June 12, 2016

எங்கெங்கோ உயிர்க்குது உயிரியியல் ஜப்பானில் ஒரு முன்னோடிக் கண்டு பிடிப்பு: கவிஞர் தணிகை.

நன்றி: மாலை மலர். June 10.16
5 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியே குஞ்சு பொரிக்க வைத்த ஜப்பான் மாணவர்கள்

ஜப்பானில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியில் குஞ்சு பொரிக்க வைத்து பழைய சித்தாந்தத்தை முறியடித்து, அசுர சாதனை படைத்துள்ளனர்.

டோக்கியோ:

‘முட்டையை விட்டு குஞ்சு வந்து துறுதுறுன்னு முழிக்குதடா ராமைய்யா!’ என்ற ஒரு பழைய தமிழ் சினிமா பாடல் உண்டு. அதாவது, முட்டையின் ஓடுதான் அந்த குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என்பது அந்த பாட்டின் விளக்கம், காலகாலமாக மக்களிடையே நீடித்துவரும் நம்பிக்கையும் அதுதான்.

ஆனால், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கிக் காட்டியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.

இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்த சில நாட்களில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் இதைக் கண்டு வாயடைத்துப் போய் உள்ளனர். அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்...

https://www.youtube.com/watch?v=am3iGHDnJHc

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=am3iGHDnJHc



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment