Thursday, June 9, 2016

முரண்பாடுகளாகத் தெரியவில்லை? :‍_கவிஞர் தணிகை

முரண்பாடுகளாகத் தெரியவில்லை? :‍_கவிஞர் தணிகை




வேகத்துடன் பாதுகாப்பு, ஃபாஸ்ட் அன்ட் சேவ்ஃப்,மானியத்தை விட்டுக் கொடுங்கள் ஏழை மக்களின் வீடுகளில் அடுப்பெரிய விடுங்கள்,மருத்துவ மனைகள் அதிகமாகிக் கொண்டே மருத்துவர்கள் அதிகமாகிக் கொண்டே நோய்களும் நோயாளிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பது,டிரைவ் டோன்ட் ஃபிளை என்பது, தமிழக அரசே அரசு டாஸ்மாக் மது விற்பனை செய்தபடியே பொது இடத்தில் மதுக் குடி போதை மீட்பு எண்கள் என எழுதி வைத்திருப்பது...மருந்துக் கடைக்காரர் காலையில் கடை திறந்ததும் நிறைய மருந்து வியாபாரம் ஆக வேண்டுமே என்று எண்ணுவது, நோயாளிகள் சீக்கிரம் நோய் தீர வேண்டும் என எண்ணுவது..எல்லாமே சமூக முரண்பாடுகள் தான். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருக்க வேண்டும் என ஓட்டுனரும்,நடத்துனரும் நிர்வாகத்தினரும் எண்ணுவது, அதில் ஏறும் பயணிகளோ அதிக கூட்டம் இருக்கக் கூடாது சுகமாக பயணம் செய்ய வேண்டும் என பயணிகள் ரயிலும், பேருந்தும் கூட்டமில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவது...இப்படியாக‌

திருவண்ணாமலையில் கண்ணபுரம் என்ற ஊரில் பள்ளிப் பிள்ளைகள் கழுத்தில் மாலை அணிவித்து மேள தாளம் முழங்க அரசுப் பள்ளி திறந்த முதல் நாளில் வரவேற்றார்களாம்.உருப்படி ஆகுமா? வாத்தியார்களை மதிக்க கற்குமா அந்தப் பிள்ளைகள் அதை பெரிய விழாவாக்கி பேரூராட்சி தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனராம்.ஓவரா தெரியலை? எங்கய்யா போகுது நாடு?



ஒரு பக்கம் மார்ச் மாதம் தலைமை ஆசிரியரை சந்தித்துக்
 கேட்கும்போது 200 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற பள்ளியில் இப்போது 150 பிள்ளைகள், 150 பிள்ளைகள் இருந்த பள்ளியில் 99 பிள்ளைகள் இப்படி அரசுப் பள்ளிகள் நலிவடைந்து கொண்டிருக்க, ஒரு பள்ளியிலோ ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள் இருந்து பாடம் சொல்லிக் கொடுப்பதாக உள்ளதாம். எப்படி இருக்கிறது தமிழகக் கல்வி பார்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பொருள் மாறிவிட்டது: இனி கருத்துக்கு ஒத்திசைவாக:
மித வேகம் நன்று என்றார்கள் ஆனால் இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஸேப்ஃ என்கிறார்கள்.

சுள்ளிகள் குச்சிகள் பொறுக்கி அடுப்பெரித்துக் கிடந்தவர்களை எல்லாம் எரிவாயு உருளைக்கு மாற்றி விட்டு இப்போது மானியத்தை விட்டுக் கொடுங்கள், ஏழைகளின் வீட்டு அடுப்பெரிய விடுங்கள் என விளம்பரங்கள்...நீங்கள் நல்ல தொழில்  ஏற்படுத்தி வேலை வாய்ப்பை கொடுத்து மதுவை எல்லாம்  அகற்றினாலே ஏழைகள் வீட்டு அடுப்பெல்லாம் நன்றாக எரியும். மேலும் அந்த சுள்ளிகள், விறகு எல்லாம் புகை என்றவர்கள், ஆலை, போக்குவரத்து மூலம் நாடு நகரம் கிராமம் எல்லாம் புகை மண்டலம் ஆக்கிவிட்டார்கள்.



நான் முன்பே சொன்னபடி மருத்துவமனைகளும், மருந்துக் கடைகளும், மதுக்கடைகளும், அரசும், போக்குவரத்து சாதனங்களும், ஊடகங்கள் யாவுமே மக்களுக்கு முரணாக இருந்து யார் யாருக்கோ லாவணி பாட மக்கள் நலத்தை குழி தோண்டி புதைத்து வருகின்றன. எல்லா விளம்பரங்களுமே மக்கள் இயல்பான இயற்கையான வாழ்வுக்கு வேட்டு வைத்து விட்டன. கேடு செய்து விட்டன, ஊறு செய்து விட்டன, குழி பறித்து விட்டன. என்ன வார்த்தை சொன்னாலும் அது குறைவாகவே முடியும்.

பெரிய பேருந்து நிலையம், மாவட்ட பேருந்து நிலையம் யாவும் முடை நாற்றம் ஈக்காடு, கொசு நாடு, மக்கள் புழங்கவே அருகதையற்றதாய் கக்கூஸ்களாய் இருக்கின்றன...மக்கள் வாழ்வோட்டத்தில் இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். சிலர் மட்டும் இன்னும் பாசாங்காக மூக்கைப் பிடித்தபடி கடந்து செல்கின்றனர்.



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளால் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை. அது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்ன ஆட்சியாக இருந்த போதிலும் மக்கள் நிலையும் கோட்பாடும் அழிந்து விட்டன‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment