Saturday, June 4, 2016

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் புகழுக்கு மரணமில்லை: கவிஞர் தணிகை.

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் புகழுக்கு மரணமில்லை: கவிஞர் தணிகை.

May 6th 1966: Muhammad Ali in training for his title fight against Henry Cooper. copyright PRESS ASSOCIATION

61 போட்டிகளில் 56 குத்துச் சண்டை போட்டிகளில் வென்ற அரிய மனிதர் உண்மையிலேயே உலகிலேயே கிரேட்டஸ்ட் மனிதர்தான்.பெர்கின்ஸன் நோய் வந்தபோதும் பொதுவாழ்வில் இறந்து விலகாமல் இரு முறை ஒலிம்பிக் நிகழ்வில் தலையாய விருந்தினராய் கலந்து கொண்ட பெருமை பெற்றவர். 74 வயதில் இன்று மரணமடைந்தது எம் போன்றோருக்கு நாமும் மரணமடைவோம் என்ற பாடத்தையும் அதற்கும் முன் இன்னும் என்ன செய்யலாம் என்ற உத்வேகத்தையும் அளித்திட வாழ்வை உந்திச் செல்ல மறுபடியும் ஒரு விசையை கொடுக்கிறது. 3 முறை தொடர்ந்து உலக கனரக குத்து சண்டையின் சாம்பியனாக வென்றவர்.

ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றும்போது ஒரு கை நடுங்க மறு கை உதறல் எடுக்க இந்த ஜோதியை ஏற்றுகிறேன் என்ற முகமது அலி என்கிற காஷியஸ் கிளே...தம்மை ஒரு முகமதியர் என்று மாற்றிக் கொண்டார் கடவுளின் அடிமை வெள்ளையரின் அடிமை அல்ல என்றாவர். மார்ட்டின் லூதர் கிங் என்ற மாபெரும் கறுப்பினத் தலைவரின் வழித்தோன்றலாய் இருந்ததாக இவரிடம் தோற்ற குத்துச் சண்டை வீரர்கள் ஜோ பிரேசர், ஃபோர்மென் போன்றோர் இன்றும் அவர் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.
U.S. boxing great Muhammad Ali poses during the Crystal Award ceremony at the World Economic Forum (WEF) in Davos, Switzerland, in this January 28, 2006 file photo.


நல்ல கருத்துக்கு குரல் கொடுத்தவர், அதனால் சிறைக்கும் சென்றவர்
இவரைப் பற்றி நான் அறிந்து கொள்ள ஆரம்பித்தது எனது சிறு வயதில் அதாவது அப்போது 7ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கலாம் வயது 10க்கும் மேல்.சுமார் 40 ஆண்டுக்கும் முன்னால் குமுதம் வாரந்தரியில் "ஜெயித்துக் கொண்டே இருப்பேன்" என்ற தலைப்பில் மிக நீண்ட தொடர் ஒன்று வந்தது. அதை யார் எழுதினார்கள் என்பது இப்போது நினைவில் இல்லை.

ஆனால் அவர் காஷியஸ் கிளே பிறந்த ஏழ்மை, காலில் செருப்பு கூட இல்லாமல் அவர் ஓட ஆரம்பித்தது, அவரின் அன்பு மிகுந்த பெற்றோர் அதன் பின் அவரது வீரம் எல்லாம் அத்திப் பூத்தாற்போல் நினவில் ஆட...அட இப்போது 74 வயதில் வியாழன் அன்று அவர் மருத்துவமனையில் சேர்ந்த செய்தியை ஒரு நொடி பார்த்தேன் இன்று மதியம் அவர் இறந்த செய்தி வந்த சில நிமிடங்களில் அறிய முடிந்தது.

Boxing legend Muhammad Ali blows a kiss after receiving Sports Illustrateds 20th Century Sportsman of the Century Award in 1999

அப்போதெல்லாம் இது போன்ற நல்ல தொடர்கள் குமுதம் வெளியிடும். உடன் சாண்டில்யன் கதையுடன். அப்போது குமுதத்தில் படித்ததுதான் பாப்பிலோன் வண்ணத்துப் பூச்சி என்ற கதையல்ல வாழ்க்கை வரலாறு ஒரு கைதியின் இடைவிடாத சிறை விட்டுத் தப்பிக்கும் போராட்ட சம்பவஙகளும்...

முகமது அலி, மைக்கேல் ஜாக்ஸன்,புரூஸ் லீ, ஜாக்கி சான் இவர்கள் எல்லாம் நமது மண்ணின் மைந்தர்களாகவே நமக்குள் இறங்கி விட்டவர்கள். இவர்கள் இழப்பு எல்லாம் உலகுக்கே பெரும் சோகமுடைத்து...

சில்வஸ்டர் ஸ்டால்லோன், ஆர்னால்ட் போன்று இவரல்ல, இவர் மகாபுருஷன். எப்போதாவது தான் எந்த யுகத்திற்காவது ஒரு முறைதான் அலி போன்றோர் பிறக்கின்றனர். உண்மையாக வாழ்ந்தவர். அவரின் சில காணொளிக் காட்சிகளைப் பார்த்து வியந்தேன் மிக உச்ச உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பான கோபமான சிங்கத்தின் உரை போன்றது. உண்மையில் மார்ட்டின் லூதர் கிங் வழித் தோன்றலாய்ச் சொல்லலாம்.




ஆனால் இவர் சொல்லி அடிப்பதிலும் வல்லவர். இவரை இத்தனாவது செகண்டில் வீழ்த்துவேன் என சொல்லி குத்தி வீழ்த்திய சம்பவங்கள், இவரை இத்தனாவது ரவுண்டில் நாக் அவுட் செய்வேன் எனச் சொல்லி அடித்து வீழ்த்துவது இவரது சண்டை ஒரு பெரும் காட்சி என்றால் பேச்சும் பெரும் ஆரவாரத்தை உருவாக்கியது.



இவரை நினைத்துக் கொண்டுதான் மகன் மணியத்தை சிறுவனாய் இருக்கும் போது ஓடச் சொன்னேன் ஆனா அவன் நாய்க்கு பயந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான் . இப்போது அதையும் செய்வதில்லை இரு சக்கர வாகனம் அதிகம் உபயோகிக்கிறான். குத்துச் சண்டை போட்டிக்கு செல்கிறேன் என பள்ளியில் இருந்து வந்து மேனிலைப்பள்ளியில் கேட்கும்போது வேண்டாம் வேண்டாம் முகம் மாறிவிடும், பல் போய்விடும் என உறவுகள், நட்பு எல்லாம் தடுக்க பெற்றோருமாகிய நாங்களும் தடுத்து விட்டோம்.



முகமது அலி பற்றிய காலைப் பதிவை அப்படியே எமது டான்பேஜஸ் தளத்தில் பதித்துள்ளேன் முடிந்தால் ஒரு முறை அதையும் படித்து பாருங்கள்.

மாவீரன் முகமது அலிக்கு என்றும் எமது அஞ்சலிகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment