Monday, February 9, 2026

CRICKETகிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை

 கிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை



நீண்ட காலத்துக்கும் முன்பே கிரிக்கெட் (மட்டைப் பந்து) 10 ஓவரே போதும், டி20,50 ஓவர், டெஸ்ட் பார்ம் எல்லாம் சுருக்கப் பட்டு 10 ஓவரிலேயே கூட முடித்துக் கொள்ளலாம்,முடித்துக் கொள்ள வேண்டும் அது மற்ற விளையாட்டுக்களைப் போல என்று நமது கருத்தை வலை தளத்தில் வேர்ட்பிரஸ்ஸில் நாம் எழுதிக் கொண்டிருந்த போதே முன் வைத்தோம். குறைந்த பட்சம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நம் நாட்டிலாவது.


மாலை முழுதும் விளையாட்டு என்றான் பாரதி. ஒவ்வொரு நாளும் நாளின் ஒரு பகுதியான நேரத்தில் தாம் விளையாட்டு அவசியமாக இடம் பெற வேண்டும். நாள் முழுதும், சினிமா, விளையாட்டு என்பவை தவறான வாழ்வின் முறை.


உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளாகப் பார்க்கப் படும் இந்த விளையாட்டில் முதிர்ச்சி பெறும் நபர்கள் வேண்டுமானால் தம் வாழ்வை அதற்காகவே அர்ப்பணிக்கட்டும், ஆனால் உலகின் பெரும்பாலான மனிதர்கள் அப்படி முழுநேரமும் அதில் ஈடுபட அவசியமில்லை. வியாபாரிகள் பெரும் முதலீடுகளை வைத்து அதிலிருந்து பெரும் பொருள் ஈட்டி வருவது யாவரும் அறிந்ததே.அரசியல் இதில் துளியும் இருக்கவே கூடாது.


விளையாடுவோரில் 3 பிரிவு, சம்பள வேறுபாடுகள்,அரசியல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதார் அதைக் கைகொண்டுவிடுவது இப்படி நிறைய அதில் குறைபாடுகள் உள்ளன. கபில்தேவ், தோனி போன்றோர் மட்டுமே அல்லது நிரூபித்த நபர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய வேண்டும்...


வைபவ் சூரிய வன்சி போன்ற சிறுவர்கள் வயது காரணமாக இல்லாமல் தேசிய முதன்மை அணியில் இணைக்கப் பட்டு நிரூபிக்கப் படாத வீரர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப் பட வேண்டும்.


கைப்பந்து/வாலிபால், கூடைப் பந்து/பேஸ்கட் பால், கால் பந்து/ஃபுட் பால் கபடி,தட கள விளையாட்டுகள்,பூப்பந்து, இறகுப் பந்து இப்படி எல்லா விளையாட்டுகளுமே சில மணி நேரங்களே இருக்க, சில மணிகளுக்குள் முடிந்து விட, கிரிக்கெட் மட்டும் பல மணி நேரங்களை ஏன் நாள் கணக்கைக் கூட எடுத்து விழுங்கி வருவது குறைக்கப் பட வேண்டும். அதற்கு 10 ஓவர் மட்டுமே நடத்தப் படும் விளையாட்டுகள் அவசியம். எல்லாருடைய முக்கியமாக‌ இளையோரின் உழைப்பை எடுத்து உறிஞ்சுவது  தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பொதுவாக கிரிக்கெட் என்பது வெள்ளைக்கார இங்கிலாந்து நாட்டவரால் குளிர் காலத்தில் தம் உடலை பயிற்சி செய்து கொண்டு வெம்மைப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய விளையாட்டு.அதை விளையாடட்டும் தவறில்லை அவருடைய பாட்டல்/மதுக்குடுவைக் கலாச்சாரத்தோடு இதையும் சேர்த்துக் கொள்வது தவறு.


10 ஓவர் எனும் போது நேரம் நிறைய சேமிக்கப் படும், ஒவ்வொரு ஓவரும் மிக முக்கியம்.(ஒரு ஓவருக்கு 10 பந்துகள் கூட எடுத்துக் கொள்ளட்டும் தவறில்லை).ஆனால் ஒரு ஓவரில் ஒரு விளையாட்டு ஓவர் இடம் பெறச் செய்ய வேண்டும், அதாவது ஒரு ஓவருக்குள் அந்த மட்டை பிடிக்கும் வீரர் அவுட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவருக்கு அடுத்த வீரரே வந்து மட்டை பிடிக்க வேண்டும்.எனவே எல்லா வீரர்களும் பந்து வீசுவதும், அடித்து விளையாடுவதிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் மற்ற வீரர் வந்து ஆடலாம் மொத்தத்தில் 10 ஓவர்கள் 10 விக்கெட்டுகள்.அந்தக் காலம் வருவது வெகு தூரத்தில் இல்லை. இப்போது டி 20 மற்ற கிரிக்கெட் வடிவங்களை எல்லாம் எடுத்து விழுங்கி பிரபலம் அடைந்தது போல இதுவும் ஒரு நாள் நடக்கும் பாருங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment