Monday, January 8, 2024

பயமுறுத்துவது மனிதரே கடவுள் அல்ல‌: கவிஞர் தணிகை.

 பிய்த்தெறியப் பட வேண்டுமா? உதிர வேண்டுமா?



உலகெனும்

(பிரபஞ்சப்) பெரு வெளிக் கம்பளத்தின்

ஓர் ஓர விளிம்பின் நுனியில் இருக்கும்

பிய்த்தெறியப் படும் நிலையில் உள்ள‌


பிசிறு


மனிதா! கடவுள் காப்பாற்றவே!


பயமுறுத்துவது மனிதரே கடவுள் அல்ல‌


கூழானாலும் குளித்துக் குடி

ஔவைக்கென்ன தெரியும்

 நமது அல்சர் பற்றி


கந்தையானாலும் கசக்கிக் கட்டு

ஔவைக்கென்ன தெரியும்?

நமது உலகின் நிர்வாணப் பற்று


யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம் என்ற‌

வள்ளுவர்க்கென்ன தெரியும்?

தாயின் வயிற்றிலேயே குழந்தைக்கு வந்து இருக்கும்

நீரிழிவு ரகம் பற்றி


பிய்த்தெறியப் பட வேண்டிய உயிர்களுள்

உனது(ம்) ஒன்று


உதிர்ந்து போக வேண்டிய உயிர்களுள்

எனதும் உண்டு...


மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment