Friday, January 12, 2024

கூட்டணி: கவிஞர் தணிகை

 கூட்டணி: கவிஞர் தணிகை



இந்தப் பதிவை படிப்பதற்குள் ஒரு முறையாவது மகாக் கவி பாரதியின் வசன கவிதை: கந்தன் வள்ளி கயிறுகள் காற்றில் ஆடி பேசிக் கொள்வதை அந்த கீச்சு மொழியை தெரிந்த பின் இதையும் படிப்பதற்கு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.


பொன்னம்பலத்தார் செடிப் பக்கம் சென்று

 ப்ளாஸ்டிக் (நெகிழி) முக்காலியில்  அமர்ந்து கூழ் குடிக்க ஆரம்பித்தார்.குளிக்கும் முன் தான்.(சாரி ஔவையார்)முக்காலி முற்காலத்தில் இரும்பு மற்றும் தகடு அதன் பின் மரம், இப்போது ப்ளாஸ்டிக்...அடிக்கடி உடைந்தால் தானே புதிது புதிதாக வாங்குவார்கள் உற்பத்தியாளர்க்கும் விற்பனையாளர்க்கும் கொள்ளை இலாபம் கிடைத்து முதல் பணக்காரர் ஆகும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்


நேற்று நால்வர் கூட்டணியாய் வாக் கிக் வாக் கிங் (நடைப் பயிற்சி) ஈடுபடும் போது , டி.வி.எஸ் 50 வண்டி வரலாற்றையும், ரெனால்ட்ஸ் மை எழுதி, அதன் மறு நிரப்பு பற்றி எல்லாம் பேசி அனுபவித்தார்கள் உடன் நாய் முதல் வானொலி, துவி சக்கர வண்டி(சைக்கிள்) லைசென்ஸ்(உரிமம்) பற்றியும் விளக்கெரியா துவி சக்கர வண்டிக்கு காவல்காரர்கள் செய்த கைங்கர்யமும், அதற்கு கவுண்டமணி காமெடியாய் சைக்கிளில் லைட் இல்லாம வந்தோம் பிடிக்கிறீர்கள், அபராதம் விதிக்கிறீர், சைக்கிளே இல்லாமல் வருவாரை என்ன செய்யப் போகிறீர் என்றதை பகிர்ந்து கொண்டு சிரித்தபடி நடந்த நேரம் நிழலாட...எருமைச் சவாரி பற்றி எல்லாம் நயம்பட நண்பர்கள் இளமையை பகிர்ந்து கொண்டனர். எருமைதான் தமிழர்களின் வீட்டு விலங்காம் அதை இல்லாமல்  செய்த வெள்ளை விஞ்ஞானம்.


ஈ சைசில் (அளவில்) கொசுக்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து பொன்னம்பலத்தார் கெண்டைக் காலில் அமர அடித்துப் போட்டார். எண்ணிக்கையில் 3 உயிரற்ற உடல்கள் கிடந்தன‌.உப்பு அதிகம் இருக்கும் சுவை கொண்ட இரத்த உடல் கொசுக்களுக்கு ஈர்ப்பு...சுள்ளான்கள்.பாவம் ஆன்மா   பிரிதல்.உயிர் பிரிதல் என்பது பெரிய/மாபெரும் நிகழ்வு இல்லை.


ஈக்கு தலையில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பாம்புக்கு பல்லில் மனிதர்க்கு உடல் எல்லாம்...ஈக்களுள் தாம் எத்தனை வகைகள்?நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருள்வாய் அருட்பெருஞ்ஜோதி...இராமலிங்கர்


சிறிது நேரம் சிறிய சிவந்த எறும்புகள் அங்கும் இங்கும் வரிசையாக எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தன.என்ன செய்தி சென்று சேரவில்லையா ஒரு எறும்பு கூட கொசுக்கள் அருகே வராமல் இருக்கே...


ஒரு பிள்ளையார் எறும்பு மொய்த்து இழுக்க முனைந்தது...


பிள்ளையார் என இந்த எறும்புக்கு பேர் வைத்தது யார்? அது நம்மைக் கடிப்பதில்லை.சிவந்த சிட்டெறும்பு கடிக்கும்

கட்டெறும்பு கொடுக்கு பிடுங்கி எறியும் வரை கடிக்கும். சிட்டெறும்பு கட்டெறும்பு என்ன அருந்தமிழ்.

செவ்வெறும்பு மா இலையை அப்படியே சுருட்டியபடி கூட சுற்றிக் கொள்ளும், செவ்வெறும்பு கடி பட்டிருக்கிறீர்களா நெருப்பாய் எரியும்... இப்படி எறும்புகளில் எத்தனை வகை?


இப்படி இன்னும் எத்தனை எறும்பு வகைகள்? மனிதர்க்கு தோராயக் கணக்கெடுக்கும் குலம் எறும்பு எவ்வளவு என்று எப்போதாவது  கணக்கு எடுத்துச் சொன்னதுண்டா?


அதன் பின் சிவந்த சிட்டெறும்பு ஒன்று தொட ஆரம்பித்தது, அதன் பின் பல வந்தன. பிள்ளையார் எறும்பு ஒன்றுதான் எனவே ஜூட் விட்டது.


என்ன பேசப்பட்டதோ பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து சிவந்த சிட்டெறும்பு கூட்டணி வர ஆரம்பித்து 3 கொசுக்களையும் இழுக்க ஆரம்பித்து விட்டன தனித்தனியாக... கொண்டு செல்ல ஆரம்பித்தன‌


அதன் பின் அந்த சிவந்த சிட்டெறும்புகளின் தலைமை எறும்புகள் போலும், இரண்டு அதை விட பெருத்த உடல் முன் பின் எல்லாம் கனத்து இருக்க மேற்பார்வைக்கு வந்தனவோ?!


கூட்டணி வெற்றி


கொசுக்களை எறும்புகள் குழிக்குள் கொண்டு சென்று விட்டன... 



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






No comments:

Post a Comment