Saturday, January 20, 2024

சமூகக் காய்ச்சல்: கவிஞர் தணிகை

 சமூகக் காய்ச்சல்: கவிஞர் தணிகை



மாடுகள் மேய்ந்தாலும் மறுபடியும் புல் வளர்கிறது.
மீன்கள் நீந்தினாலும் நீர் சுத்தமாகவே இருக்கிறது.
மிருகங்கள் வாழ்ந்தாலும் காடுகள் அழியாதிருந்தன;
மனிதர்கள் தொடர்ந்து நடப்பதால் புல்லும் முளைப்பதில்லை;
மனிதர்கள் வாயை வைத்தால் நீர் அசுத்தமடைகிறது
மனிதர்கள் கையை வைத்தால் யாவும் கலங்கிவிடுகிறது
காடுகளிலிருந்து வளர்ந்தவன் காட்டை அழித்துவிட்டான்
நாட்டை காக்க வேண்டியவர் நாட்டை அழித்துவிட்டார்
தாய்ப்பால் தந்தவளின் மாரை அறுப்பதுபோல.

நடந்த தவறுகளை நினைப்பதைவிட
மறுபடியும் நிகழவிடாதிருப்பதே வளர்ச்சி!

கட்சிக் கத்திரிகள் முனை மழுங்கினாலும்
தேர்தல்கள் சாணைப்படுத்தி பதப்படுத்தி
மறு கூர் செய்ய

வெட்டுவதும் வெட்டப்படுவதும் 
இங்கு ஒன்றாகிவிடுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே
வெட்டிகொள்கிறார்கள்;\வெட்டுப்படுகிறார்கள்
கறைத் துண்டுகளாகிவிடுகிறார்கள்
பிளாஸ்டிக் கலர் கொடிகளுடன்
இரசாயன மதுப்புட்டிகளுடன்
விரைத்துப் போகிறார்கள்;களைத்துப் போகிறார்கள்
நீர்த்துப் போகிறார்கள்

மக்களே மக்களுக்காக ஆளும் ஆட்சியில்.
நகரம் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்கிறது
நாகரீகம் நாகரீகமாக ஒதுங்கிச் செல்கிறது
நரகக் குழிகளில் குப்பைமேடுகளாய்
கிராமம் வாக்களிக்கிறது வக்கு வகையின்றி
ஜனநாயக் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு

நகரம் அதிகம் அனுபவிக்கிறது எல்லாவற்றையுமே!
கிராமம் தாங்கிப் பிடிக்கிறது கிராம் துணுக்குகளுடன்
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை

எல்லாம் ஒரே மயிர்க்கூச்செறியும் விரைவு
இது ஒரு உயிரின் கூச்சல்; சமூகக் காய்ச்சல்

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 

No comments:

Post a Comment