Wednesday, September 21, 2022

எழுது அதை விடுவதாயில்லை...கவிஞர் தணிகை

 கால் நூற்றாண்டுக்கும் மேல்

காமம் பற்றி தெரிய காத்திருந்தேன்



அரை நூற்றாண்டுக்கும் மேல்

அன்பு பற்றி அறிந்து கொள்ள‌

முயன்றிருக்கிறேன்...


வாழ்க்கைப் புத்தகத்தின் பல பேரதிசய‌ ஏடுகள்

விரியும் போது மட்டுமே

புலப்படுகின்றன‌


நான் என் சிறந்த இறகுகளுடன்

மீண்டு(ம்) வருவேன்

என எவருமே நம்பவில்லை


திட்டமிடா ஒரு வாழ்வில்

நிர்பந்தம் எனை எழுதிச் செல்ல‌

எனக்கு(ம்) எந்த நம்பிக்கையும் இல்லை...


அட நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்

உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்...


எழுதுவதை விடுவதாயில்லை

எழுது அதை விடுவதாயில்லை...



           மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை

No comments:

Post a Comment