Tuesday, September 13, 2022

தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை

 தெய்வம் என்று சொல்லும்: கவிஞர் தணிகை



சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கும் முன் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில்

இலண்டனில் உள்ள தலைமை நீதி மன்றம்


சர் ஆர்தர் தாமஸ் காட்டன் குற்றவாளிக் கூண்டில்.


தலைமை நீதிபதி டேனியல் கேட்கிறார் அரசுத் தலைமை வழக்கறிஞரிடம்:

"இவரின் குற்றம் என்ன?"


இவர் நமது இங்கிலாந்து அரசின் சார்பாக இந்தியா அனுப்பப் பட்டவர், நீர் வளப் பொறியாளர்.

நமது அரசுக்கு பெரும் செலவு வைத்து நமது அரசுடன் ஒத்துழைக்காது இருந்திருக்கிறார்

இந்தியாவின் நீர் வளத் தந்தை ஆகி விட்டார்.


தலைமை நீதிபதி: தங்களின் விளக்கம் என்ன காட்டன் அவர்களே:

சரி ஆர்தர் தாமஸ் காட்டன் பதில்: 

நீங்கள் நமது நாட்டின் அரசுக்கு மகத்துவம் தேடுகிறீர், 

நானோ மானிடத்துக்கு மகத்துவம் தேடினேன்.


குற்றவாளியே தமது அரசுக்கு துரோகம் இழைத்ததை ஒத்துக் கொள்வதால் 

அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்  30,000 பவுண்ட் அபராதமும் கட்ட தீர்ப்பளிக்கிறேன்.


வெள்ளை ஆங்கிலேயே அரசு யாரையுமே விசாரணையின்றி தண்டித்ததே இல்லை.


1947 இந்தியாவிடமிருந்து வெள்ளை அரசு ஓட்டம் பிடித்தது. 

இந்தியாவின் நீர் வளத் தந்தையான  சர்.ஆர்தர் தாமஸ்  காட்டன் கோதாவரி ஆற்றங்கரையில்,காவிரி கல்லணையில்,இன்னும் பல்வேறு நீர்நிலைகளில் இந்தியாவில் பல இடங்களில்...

 இன்றும் என்றும் நின்று மாலை மரியாதைகளுடன்  சிரித்தபடி இருக்கிறார்.


 மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment