Tuesday, July 20, 2021

தமிழர் ஆட்சி உத்திரமேரூர் குடவோலை முறை விதிகளை பின் பற்றலாமே: கவிஞர் தணிகை

 


தமிழ் நாடு அரசுப் பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தின் பெண்களுக்கான கட்டணமில்லா பயணச் சீட்டை வட நாட்டு ஆண் பயணியர்க்கு

காசு வாங்கிக் கொண்டு கொடுத்த நடத்துனர் ஆய்வாளரால் கண்டு பிடிக்கப் பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் நகரப் பேருந்துப் போக்குவரத்தில் நடந்த கதை.


அரசுப் போக்குவரத்தில் இது போன்ற கதைகள் ஏராளம் என்கின்றனர். தனியார் பேருந்தை முன் விட்டு விடுவது, அந்த தனியார் பேருந்தினரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அதை பயணியர் அதிகம் ஏறவிட்டு விடுவது அதற்காக அரசுப் பேருந்தை வசதியாக பின் முன் அல்லது வேகம் பராமரித்து அந்த தனியார் வண்டிகளுக்கு வசதி வாய்ப்பு செய்து தருவது எல்லாம் சகஜமப்பா போக்குவரத்தில் என்கின்றனர்.


ஆவின் மேலாளர்கள் 34 பேர் ஊழல் காரணத்தால் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள்.


இது போல அரசியல், மற்றும் அரசுப் பதவிகளில் குற்றம் செய்தார் கையும் களவுமாக பிடிபட்டால் உத்திரமேரூர் சோழர் கால குடவோலை முறைப்படி அவரோ அவர் குடும்பம் சார்ந்தாரோ, வாரிசுகளோ இனி அரசுப் பதவி, பணிகளில் இடம் பெறவே கூடாது என்ற ஒரு ஏற்பாடு அமலுக்கு வந்தால் மட்டுமே இதை எல்லாம் தடுக்க தவிர்க்க முடியும்.


இராணுவத்தின் வாரிசுகளுக்கு முன்னுரிமை என்பது போல இதை எல்லாம் செய்யலாம்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment