Thursday, July 1, 2021

காந்தி தேசம் காணவில்லையே: கவிஞர் தணிகை

 காந்தி தேசம் காணவில்லையே: கவிஞர் தணிகை



1. 73 ஆண்டுகள் மகாத்மாவைக் கொன்ற பின்னும் அவர் சத்தியம் அஹிம்சை மனித குலத்துக்கு அவசியம் என்ற பின்னும் இங்கு பொய்களே எல்லாக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன...அவர் மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்று சொன்னது போல‌

கொலை, கொள்ளை, இரகசிய விவரங்களை அவர்களுக்குத் தெரியாமலே வெளியிடுதல்,போதை, ஆவணக் குற்றங்கள் யாவற்றுக்கும் மேலாக‌ பொய் சொல்வதற்கு பெரிய சாட்சியமில்லாததால் நீதிமன்றத்தில் கூட சாட்சியமே பெரிய பங்கு வகிப்பதால் எந்தக் குற்றத்தையும் செய்ய வாய்ப்பாகிறது...உண்மை கண்டறியும் எந்திரம் காவல் துறைக்குத் தேவைப்படுகிறது.


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி மற்றொன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பார் கண்ணதாசன், தெய்வத்தின் சாட்சி, தெய்வம் நின்று கொல்லும் என்பதெல்லாம் இல்லை...கொரானாவுக்கு முன் ஏதுமே நிற்க முடியா நிலை...ஆக அவரவர்க்கு அவரவரே சாட்சி...இதற்கு என்று வேறு எவருமே பாதுகாப்புக்கென்று நிற்க வழியில்லை....ஒவ்வொரு நபருக்கும் ஒரு காவலர் நிற்க முடியாது....காவலர்களே பொருட் குற்றத்தில் ஈடுபடுவதை செயல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....ஊடகத்திலும் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலுமே 100 % ஒழுங்கமைவு இந்தியாவில் கொண்டு வர வழி இல்லை...


2. அரியானாவில் ஒரு மலையடிக்கிராமத்தில் இருக்கும் பெரும்பாலும் இளைஞர்கள் கொள்ளைத் தொழில்..தீரன் அதிகாரம் ஒன்று...நினைவிற்கு...ஒரு வாரம் கொள்ளை அடித்த பொருட்கள் செலவில் ஏக விருந்து தடபுடலாக ஊரே களை கட்டுமாம் செய்தி ஊடகத்தில் வரும்போது மறைந்து கொள்வாராம் கொள்ளை அடித்தார்... ஒரே நேரத்தில் செய்தியும் தமிழக காவலரும் வந்ததால் மாட்டிக் கொண்டதாக கொள்ளையன் வாக்குமூலம்...மேலும் இதற்கு ஜப்பானின் ஏ.டி.எம் மெஷினுக்கு எப்படி குறைபாட்டை பயன்படுத்தி கொள்ளை செய்வது என்பதற்கான பயிற்சி எடுத்தார்களாம்...ஆக நடந்து முடிந்த பின்னேதான் நமது அரசுகள் பயன்படுகின்றன...நடக்கும் முன்பே தடுப்பு நடவடிக்கை இல்லை...ஏ.டி.எம்.காவலர் என்ன செய்தார்...போன்ற கேள்விகள் வேறு...இருந்திருந்தாலும் கொன்று விடுவர் அது வேறு...வரும் முன் காப்போம் என்பது வெறும் வார்த்தைகளாகின்றன‌


3.வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை

  எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்...


4. ஒரிஸ்ஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலத்தை கொரானா கோவிட் 19 தீ நுண்மித் தொற்றிலிருந்து பெரும்பாலும் காப்பாற்றி இருக்கிறார்.


5. வாடிக்கையாளரே எங்கள் சேவையில் அரசர் என்னும் வங்கியின் தாரக மந்திரம் உதிர்ந்து போய்  4 முறைக்கும் மேல் தங்களது பணத்தை எடுத்தால் ரூ. 15 கட்டணம், மேலும் ஜி.எஸ்.டி வரி உண்டாம்...ஆனால் நாட்டின் முதல் பெரும் பணக்காரர் வரி கட்டுவதிலிருந்து எப்படி விலக்கு பெறுகிறார் அதற்கு என்ன என்ன வசதி வாய்ப்புகள் இருக்கின்றன என்று நாடும் தணிக்கையாளர்களும் பணிச் சேவையில் இருப்பதும், எழைகள் பணத்தை பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்து அதிலிருந்து எப்படி அவர்களை தப்புவிப்பது என்பதையும் நாடு சொல்லித் தந்து கொண்டுள்ளது.


6. போக்குவரத்து பணியில் இருந்த ஒரு ஊழியர் பணமதிப்பீட்டு மாற்று/ இழப்பு நடந்த போது மாற்றப் பட்ட பெரும் பணக்கற்றைகள் மாட்டுத் தொழுவத்தில் இருந்த நாற்றம் எல்லாம் அடித்தது எனச் சொல்கிறார் மேலும், பணம் ஆளும் வர்க்கத்தினர்க்கு அந்த நடவடிக்கை முன் கூட்டியே தெரிந்து மற்ற நாட்டு மக்களுக்கும் எதிர் அணியினர்க்கும் வேண்டும் என்றே மறைக்கப் பட்டு ஆட்சியைத் தக்க வைக்க அவர்கள் தயாராகி இருக்கின்றனர்.


7. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி இங்கிருந்து டில்லி செல்வது மறுபடியும் உள்ளூர் நோக்கி பாயவே மறுக்கிறது...என்னிடம் கூட இணையத்துக்கு என்று மாதம் ஒன்றுக்கு ரூ.100 ரூ அளவில் வசூலிக்கப் படுகிறது


8. அதை விட செங்கல்பட்டு தடுப்பூசி மையம், குன்னூர் தடுப்பூசி மையம் அனுமதியே இல்லாது...மாநிலத்திற்கு நல்ல பேர் வந்து விடும் என செய்து வருகிறது... மக்கள் இரவு 12 மணி முதலே தடுப்பூசிக்கு காத்துக் கிடக்கிறார்கள் கிடைக்க வில்லை என்றவுடன் பேருந்தை மறியல் செய்கிறார்கள், போராட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள்.


8. எனது தமிழ் பெயரை ஆங்கிலத்தில் ஒவ்வொரு அடையாள அட்டையிலும் ஒவ்வொரு மாதிரியாக எழுத்தை பயன்ப‌டுத்தி எனக்கு ஆவணங்கள் அளிப்பதில் மறுத்து வரும் அதே அரசு...எப்படி எல்லாம் ஏமாற்றுவார்க்கு சலுகை செய்து கொடுக்கிறது என்பதற்கு அவரவர் பணத்தை முடக்கி விட்டு எடுக்க விடாமல் கொள்ளை அடிக்க வசதி செய்து கொடுப்பதிலிருந்தே தெரியவருகிறது. மேலும் தற்போதைய செய்தியின் படி தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேரின் விவரம் திருட்டு போய் இருப்பதாகவும் செய்திகள் இருக்கின்றன அதன் விளைவு என்ன ஆகப் போகிறது என்பதை வரும் காலத்தில் தெரியவரும்.


9. 73 ஆண்டு ஆகிய பின்னும் காந்திய முறை நிலவாததால் கொசுவிலிருந்தும் தப்ப முடியவில்லை மின் விசிறி பயன் படுத்த ஏக தடை...இரவு 1 மணிக்கு மேல் தான் மின்சாரம் கிடைத்தது...எப்படி மனிதர் அடுத்த நாளில் பணி புரிய முடியும்... அதில் வேறு சமையல் எரிவாயுவுக்கு சத்தப்படாமல் ஏற்றுவது போல விலையை இனி ரீசார்ஜ் கூப்பன் வழியே மேலை நாடுகளில் செய்வது போல மின்சாரம் தரவிருப்பதாக மத்திய அரசின் அறிவிப்பு இனி, தண்ணீருக்கும் அதை அமல் படுத்த, இனி அத்தியாவசிய தேவை கிடைக்காமல் கீழ் மட்ட மக்கள் செத்துப் போக எளிய வழிகளை என்னவெல்லாம் செய்ய முடியுமோ எப்படி எல்லாம் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்... வீட்டிலிருந்த படியே சொந்த வேலை பார்த்துக் கொண்டிருப்பார்க்கும் அரசு ஊதியம் மாதா மாதம் நிறைய கிடைக்கும் நிலை...மற்றவர்கள் என்ன ஆவது? 


10. கடைசியாக நமது முதல்வரே, கட்சி சார்பாக கொடுத்த 5 கி.கி சாப்பாட்டு அரிசி நன்றாக இருக்கிறது என்றும் நியாய விலைக் கடையில் கொடுத்த ரவை மிக மோசம் என்றும் செய்திகள்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment