Tuesday, April 21, 2020

உலகின் கொரானாவுக்கு மத்தியில் எதுவும் நடக்கலாம்: கவிஞர் தணிகை

இங்கு இரண்டு மருத்துவர்களின் நல்லடக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் தோட்டத்தில் அடிமைத் தொழிலாளராக ஆப்பிரிக்க மக்கள் இருப்பதாகவும் அடிமையாக இருங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அதன் முதலாளிகள் சொல்வதாக வந்திருக்கும் இந்த பிபிசி அறிக்கை காலத்தின் பதிவு

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி: பிபிசி

கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

"அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்" - கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்"

ஸ்பெயினில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் கட்டற்ற உழைப்பு சுரண்டல் நடப்பது பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்பெயின் அல்மெரியா மாகாணத்தில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பழங்களும், காய்கறிகளும்தான் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
"அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்" - கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த பண்ணைகளில் ஏராளமான ஆப்ரிக்க மக்கள் பணியாற்றுகிறார்கள். அதில் சிலர் எந்த ஆவணமுமற்ற புலம்பெயர் தொழிலாளர்கள். இங்கு ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை மற்றும் இருப்பிட வசதி செய்து தரப்படவில்லை என பல வருடங்களாகக் குற்றச்சாட்டு உள்ளது.
"அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்" - கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்
"அடிமைகளாக இருக்க முடியுமென்றால் இருங்கள் இல்லையென்றால் கிளம்புங்கள் ," என பண்ணை உரிமையாளர்கள் சொல்வதாக அங்கு பணியாற்றும் ஆஃப்ரிக்க மக்கள் சொல்கிறார்கள்.
இப்படியான சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு இந்த பண்ணைகளில் பிபிசி ரகசிய புலனாய்வை மேற்கொண்டது. அதில் இந்த குற்றச்ச்சாட்டுகள அனைத்தும் உண்மை தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பண்ணை உரிமையாளர்கள் மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment