Thursday, April 30, 2020

உண்மைக் கதை இரண்டு: கவிஞர் தணிகை

உண்மைக் கதை இரண்டு: கவிஞர் தணிகை

Punctual Vector Illustration Flat Tiny Precision Stock Image ...

தந்தை 65 வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். எனது வயது அப்போது சற்றேறக் குறைய 24. அவர் விட்டுச் சென்ற வீட்டுப் பொறுப்புகள் தாமாக என்னிடம் வந்தன. அவரது இறப்புச் சான்றிதழுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகினேன். ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீர் என்றார்கள்...நான் ஏதும் பதில் பேசவில்லை

ஏன் எனில் உரிய முறையில் இறப்பை பதிவு செய்து அவர்கள் சொன்னபடி 15 நாள் கழித்து 16 வது நாளில் தான் சென்றிருந்தேன். எனக்கு எதையுமே சரியாக துல்லியமாக செய்வது பிடிக்கும்.
Punctual Vector Illustration. Flat Tiny Precision Timing Persons ...
நான் சொல்வது நடந்த ஆண்டு 1986... December அதன் பிறகு தான் நான் சொல்லும் கதை ஆரம்பிக்கிறது.
உரிய ஆவணங்களை எல்லாம் இணைத்து ஊராட்சி மன்றத்திடம் விண்ணப்பித்தேன் எனது தந்தை பேரில் இருந்த   வீட்டை சொத்து வரியை அல்லது வீட்டு வரியை தாய் பேருக்கு மாற்றிக் கொடுங்கள் எனக் கோரினேன் உரிய இணைப்புகளில் எல்லா அரசு ஆவணங்களும் இணைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினேன்.

நிர்வாக அலுவலர் வாங்கி வைத்துக் கொண்டார். சென்று பிறகு வாருங்கள் என்றார். அதன் பின் சென்று பார்த்தேன் அவரைப் பார்க்கும் போதெல்லாம் கேட்டேன். நல்விளைவு ஏதும் ஏற்படவே இல்லை. காலம் சுமார் ஒன்னரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கும். நிலை அப்படியே இருக்க இனி வீட்டு வரி, குடி நீர் கட்டணம் கட்டமாட்டேன் என ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
The world's most punctual airports and airlines | CNN Travel
உடனே கடுமையான தகராறு. அலுவலகத்திலிருந்து பலரும் வந்து எங்கள் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என பயமுறுத்த ஆரம்பித்தனர். உடனே மௌனமாக நான் உரிய வரிகளை கட்டணத்தை செலுத்தி விட்டேன்.

அதன் பின் நிலையை விளக்கி எனது தாய்  எழுதியதாக அப்போதைய முதல்வர் ஜெ அவர்களுக்கு மாநில‌ முதல்வர் மக்கள் குறை தீர்க்கும் பிரிவுக்கு விளக்கமாக அப்போது ஆங்கிலத்தில் தான் எழுதினேன். தாயின் கை இடது கைப் பெரு விரல் குறியீட்டுடன்.

கொஞ்ச காலம் கழித்து பதில் வந்தது. அதன் பின் கேள்விப் பட்டேன் அந்த நிர்வாக அலுவலர் அவருடைய ஓய்வு பெறவேண்டிய கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப் பட்டார் என...அப்போதெல்லாம் அப்படி ஒரு வழக்கம் இருந்தது இப்போது அந்த வழக்கம் இருக்கிறதா என்பது குறித்து திட்டவட்டமாக எனக்குத் தெரியவில்லை

அதன் பின் அரசின் பதிலுடன் அலுவலகம் சென்றேன் அங்கே ஒரு புதிய நிர்வாக அலுவலர் இருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன் அதெல்லாம் ஏதுமே பேச வேண்டாம் சார், ஒன்றும் கேட்க வேண்டாம் உரிய கட்டணத்தை செலுத்துங்கள் எல்லாம் மாற்றித் தருகிறோம் என வீட்டு வரி, குடிநீர்க் கட்ட்ண மாறுதல் எல்லாம் செய்து எனது தாயின் பேருக்கு இரசீதளித்து உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டார்கள்....அங்கே எனது வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்ற ஒரு நபரையும் அந்த அலுவலகத்தில் காணோம் அனைவருமே வேறு ஊருக்கு மாறுதல் செய்யப் பட்டிருந்ததாகவும் செய்தி வழி கேள்விப்பட்டேன். என்னிடம் அழைத்து இத்தனைக்கும் விசாரணை என்ற பேரில் அரசு எதையுமே கேட்டதாக எனது நினைவில் இல்லை.

அதில் முக்கியமாக அந்த குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என மிரட்டிய அந்த‌  ஒரு ஈசன் பெயருடைய நபர் என்னை அவரது வாழ்நாளிலும் அவர் ஓய்வு பெறும் வரையிலும் என்னைக் காணும்போதெல்லாம்  மறக்காமல் உரிய மரியாதை அளித்து வந்தார்.அவர் இத்தனைக்கும் அந்த ஊராட்சி மன்றம்  அலுவலகம் அமைந்திருந்த ஊர்க்காரர்....
Punctual time travel depends on how fast the Earth spins | Ars ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment