Thursday, May 12, 2016

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

தேர்தலில் வாக்குப் பதிவுக்கு ஒரு வாரம் டாஸ்மாக் விடுமுறை விட்டால்தான் குளறுபடி இல்லாமல் தேர்தல் நடத்த முடியும். 37 சதவீதம் மது அதிகம் தேர்தல் வாக்கு சேகரிப்புக் காலத்தில் விற்பனை கூடியதாக தேர்தல் ஆணையமே அறிக்கை.ஆக தேர்தலில் பணம் விளையாடி வருவதை குருட்டுப் பூனைகளுக்கும் தெரியும் தானே?

பொதுவாகவே சில காட்சிகள்: எந்த வித பெரிய மாவட்ட அளவிலான பேருந்து நிறுத்தங்களில் முக்கியமான பஸ் நிறுத்தங்களில் நிற்க முடியாத அளவு துர்நாற்றம்,குப்பைக் கூளங்கள் என்னதான் எப்படித்தான் தூய்மைப்பணி நடைபெற்றபொதும்.



எடுத்துக்காட்டாக சேலம் பேருந்து நிலையம், 5 ரோடு போன்றவைகளில் அதிகாலையிலேயே பேருந்துக்கு காத்து நிற்க முடியவில்லை.அவ்வளவு துர் நாற்றம். முடை நாற்றம்.

அழுக்குப் பிரியன்கள் சாலையிலேயே எச்சில் துப்பி அனைவர்க்கும் வியாதி பரப்புவார்களாகவும், அங்கேயே சிறு நீர் கழிப்பார்களாகவும் இலவச சிறு நீர் கழிக்க மறைவிட கழிப்பகத்துக்கு சென்றாலோ மயங்கி விழுந்து விடக் கூட நேரிடும். கொடுமை. மனிதா மனிதா இந்தக் கொடுமை என்று தீர்வது?

இதன் ஒரு ஒட்டு மொத்த சேர்க்கையாகவே தேர்தல் களமும் இருக்கிறது என்பது மறுப்பதிற்கில்லை. பணம் பட்டுவடாப் பற்றி சர்வ சாதாரணமாக செய்தி ஊடகங்களில் அனுபவச் செறிவுகள் பகிரப்படுகின்றன.

https://www.facebook.com/anbalaganfb/videos/10153832610808303/



தேர்தல் ஆணையம் எப்படித்தான் செயல்படுகிறது? ஏன் இந்த ஜனநாயகத் தோல்வி..இதன் எதிரொலி, எதிரொளி தேர்தலின் பின் தெரியலாம்..இன்னும் எப்படி செயல்பட வேண்டும்? இன்னும் எப்படி செயல்படுவது? போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்.. அமல்படுத்தப் பட வேண்டிய அவசியங்கள் இந்தியாவில் .



ஒரு பாட்டி சிறு காற்றாடி ஒன்றை வண்ணத் தாள் ஒட்டியதை இளங்காலையில் எடுத்துப் பத்திரப் படுத்தி வைக்கிறாள் பேரனுக்காக.

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...

இன்னும் பொழுதே சரியாகப் புலரவில்லை.



பேருந்தில் வண்ண வண்ண ஆடைகளுடன் பின்னால் ஒவ்வொரு பெண்ணும் ஒருவித பின் புற அலங்காரச் சட்டை அணிந்து அனைவரும் பார்க்கட்டும் என நெருங்கி நெருங்கி நிற்க முயல்கிறார்கள்....

பொது வாழ்வும், பொது இடங்களில் பயணமும் யோகத்திலிருப்பார்க்கு அவசியமில்லை பொருத்தமில்லை என்றபோதும் இந்தக் காட்சிகள் வாழ்க்கைத் தேடல் தேடுவார் முன் காட்சிகளாக விரிகிறது...

இதை எல்லாம் கடந்துதான் இலட்சியம் நோக்கி பயணங்கள் நடத்த வேண்டி இருக்கிறது...ஏழையை கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற நமது தமிம் முதுமாது இந்த உலகக் குப்பையை உருவாக்கும் ஏழையைக் காணவே இல்லை.

இவர்கள் இரைக்காக எதையும் செய்வார்கள், இவர்கள் எந்த செய்தியையும் இறைய விடுவார்கள்....நொண்டிக்கு நூறு குறும்பு என்பார் பழமொழியாய்...

இந்த நொண்டிச் சமுதாயமாயிருக்கும் இந்த சமுதாயத்தில் நூறு அல்ல எண்ணற்ற குறும்பு இருக்கிறது...எனவே இறையை, இயற்கையை காணமுடியவில்லை, இரையை, தீச்செய்திகள் இறைவதைத்தான் காணமுடிகிறது...

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment