Monday, May 2, 2016

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍ சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍  சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.



பாப்பி ரெட்டிப் பட்டி தமது தொகுதியில் உள்ள நத்த மேடு என்ற பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற உயர்கல்வித் துறை அமைச்சர் மேல் கையில் கிடைத்ததை எல்லாம் வீசினர் பொதுமக்கள் அதில் செருப்புகளும் அடங்கும். உடனே காவல் காக்கப்பட்டு அமைச்சர் வாக்கு சேகரிப்பதிலிருந்து பின் வாங்கி அந்த ஊரிலிருந்து திரும்பினார்.

விஜய் காந்த் அம்மாவை அந்த அம்மா என்ற பட்டம் கொடுத்தது யார்? நீயே வைத்துக்கொண்டதுதானே? முடிந்தால் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற வேண்டியதுதானே? ஏன் இன்னும் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறீர் ? அது எம்.ஜி.ஆர் சின்னம். அம்மா மருந்தகம் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பதற்கு பதிலாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேர்தானே வைத்திருக்க வேண்டும்? தேர்தலுக்காக எம்.ஜி.ஆர் பேரை படத்தை உபயோகிக்கிறீர் என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் தேவக் கோட்டையில் நடந்த பிரச்சாரத்தில். எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைவு இப்போதுதான் இவருக்கு வந்திருக்கிறது போலும். சபாஷ். சரியான போட்டி.Anyhow Vijay kanth is better than Rajini kanth by all ways.



அக்னி நட்சத்திரம் வருமுன்னே கோடையின் கொடுமை 106 டிகிரி பாரன்ஹீட் 107 என்று அடிப்பதையும் பொருட்படுத்தாது அ.தி.மு.க கூட்டம் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் கவனிக்க வில்லையா என மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்டுள்ளது

இந்நிலையில் தேர்தலுக்கு சரியாக 2 வாரங்கள் உள்ள நிலையில் நல்ல நல்ல கேள்விகள் செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன‌



விஜய் காந்த் கேள்விகளில் நியாயம் உள்ளது. தேர்தல் என்றால் உடனே வானொலியில், தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் பெயரை அம்மா முழக்குகிறார்.முழங்குகிறார்.

ஆனால் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டம் சென்னை வெள்ளத்தில் மூழ்கி சிதிலமடைந்தது பற்றி எந்த கவலையும் இவர் கொள்ளவில்லை. மேலும் ராஜிவ் காந்திக்கு ஆடாமல் அசையாமல் கிடக்கும் இந்த சவத்துக்கு எதற்கு இன்னும் முதல்வர் பதவி என்னை முதல்வர் ஆக்கி விடுங்கள் நீங்கள் வேண்டியதை செய்து தருகிறேன் என்ற வரலாறுகளும், சேவல் புறாக் கதைகளும் நிறைய உண்டு.

இவரின் புத்தியைப் பார்த்து தந்திரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் தமது உடல் நிலை குன்றி இருந்த நிலையிலும் இவரை  கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்த போது சேலத்து முன்னால் அமைச்சர் இராசாரம், இவர் சபா நாயகராகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். உடல் நிலை சரியாகட்டும் ஏன் சிரமம் எடுத்துக் கொள்கிறீர் என்று சொல்ல அப்போது விட்டு விட்டு அதற்கு  பின் 3 நாட்களில் எம்.ஜி.ஆர் இறந்த கதையை  சாதமாகக் கொண்டு இவர் கட்சியை தன் வயப் படுத்திய வரலாறு நாடே அறிந்தது.



மேலும் எம்.ஜி.ஆரை அப்போது பிளாக் மெயில் செய்து இதோ வாழ்க்கை வரலாறு எழுதப் போகிறேன் குமதத்தில் எழுதுகிறேன், ஆனந்த விகடனில் எழுதுகிறேன் என்றே சொல்லி மிரட்டுவார் ஆனால் அந்த வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் பயந்து கொண்டிருந்த வரலாறு எழுதப்படவேயில்லை. இவர் எழுதியிருந்தாலும் அதை எம்.ஜி.ஆர் சமாளித்திருக்கலாம். அத்தனை புகழில் அவர் இருந்தார். ஆனால் தமக்கு களங்கம் ஏற்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என முயற்சிகள் மேற்கொண்டு அந்த தொடர் எழுதுவதை தடுத்து வந்ததாக அந்தக் கால அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவர்.

எம்.ஜி.ஆரை அழியும்போதெல்லம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வாக்குகளை சேகரித்து விடலாம் என்ற உத்தி இந்த தேர்தலில் எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.



அதென்னடா ஒரு தொழிற்சங்கம் சீட் கொடுக்காததால் அவர்களது கட்சியை விட்டு விட்டு தானாக தொழிற்சங்கம் அம்மாவுக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றுகிறோம் என்று  கூறுகிறதாம். என்ன கட்சியோ என்ன கொள்கையோ?



வைக்கோவை தி.மு.க கொல்ல சதிசெய்கிறது என்ற பேச்சு வேறு ம.ந.கூ பொதுவுடமைக் கட்சியினரே பேசியுள்ளனர்.

நல்லா சூடு பறக்கிறது . பொறுக்க முடியா வெப்பம். எப்போதும் இல்லாத அளவு தாக்கம். இந்த தேர்தலும் தான்...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment