மங்கி பாத்: மோடிஜி இதர் ஆவோஜி தேக்கோஜி இந்தியாகி கிராம் இன்டர்நேஷனல் லெவல் நைஜி: கவிஞர் தணிகை
பரிசு அறிவிப்பு பணமில்லா இ.மின்னணு முறையில் வர்த்தகம் செய்வாரைத் தேர்ந்தெடுத்து கோடிக்கணக்கில் நக்கில் பரிசு அறிவிப்பு.உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி கவர்னரை கீழே தள்ளி கறுப்புக் கொடியை மேல் வீச போலீஸ் காவலுடன் தப்பினார், ஆங்காங்கே நாடு தழுவிய அளவில் வங்கிகளின் பணக் கட்டுப்பாட்டுக்கு எதிராக தட்டுப்பாட்டுக்கு எதிராக சாலை மறியல், வங்கி முன் மறியல், ஆர்ப்பாட்டம், பற்பல இடங்களில் திருட்டு நாய்களுக்கு அரசும் வங்கிகளும் புது நோட்டு கோடிக்கணக்கில் வாரி வழங்கியது பிடிபட்டுக் கொண்டே இருக்கும் செய்திகள் இன்னும் பிற.
டிசம்பர் 30க்குள் சீரடையும் என மோடிஜி ஒரு புறம் சொல்ல பொருளாதார விவகாரத் துறை செயலராம் விவகாரமாக மோடி சொல்வது போல நடக்காது அது 2017 ஏப்ரல் வரை இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல, நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்னும் பல மாதங்கள் இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல நிர்மலா சீத்தாராமன் என்னும் மத்திய மந்திரி இசைவிழா என்றாலே அது சென்னை எனச் சொல்லி என்ன ஆட்சி நடத்துகிறார் பாருங்கள்...சென்னையில் இன்னும் மின்சாரமும், தொடர்பும், குடிநீரும், அத்தியாவசியத் தேவைகளும் நிறைவேறாத நிலையில் இவர்களுக்கு எல்லாம் இருந்தால் போதும்...நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையாக த.நா.அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு, எம்.பி மார்களுக்கு இரட்டிப்பு சம்பளம்... இப்படியாக
அனுதினமும் சாலையில் , வங்கி முன்னால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா எங்கும், கேட்டால் ஆயிரத்து எட்டு காரணம். ஏ.டி எம். மெஷின் புது நோட்டை வைக்குமாறு இப்போதுதான் சீர் படுத்தி வருகிறார்களாம். 50% செய்திருக்கிறார்களாம், அது 80% ஆக்கும்போது நிலை மேம்படுமாம்.தனியார் வங்கிகளுக்கு கரன்சி சப்ளை அதிகமும் , பொதுத்துறை வங்கிகளுக்கு அதை விட குறைவாகவே சப்ளை இருக்கிறதாம். எல்லாமே நகரியம் நோக்கிய வளர்ச்சி. எல்லாமே மேல்தட்டு மக்களுக்கும் அரசியல் தரகர்களுக்குமான தேர்வு செய்யப்பட்ட செயல்பாடுகள்.
ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகளுக்கு நேரடியாக விதிவிலக்காக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் சப்ளை செய்தது போல இந்த இடைத்தரக நாய்களுக்கு கோடிக்கணக்கில் எப்படி கொடுக்கப்பட்டன? அதற்கு எந்த நாய்கள் எல்லாம் காரணம்? கண்டறிய வேண்டாமா? பிடித்தால் மட்டும் போதுமா? படித்தால் மட்டும் போதுமா? நாய்கள் நாய்கள் என்றால் நாய்களும் தமது தகுதிக்கு பங்கம் வந்தாற்போல கோபித்துக் கொள்ளும்.
முன்னணியில் ஆட்சியில் அதிகாரத்தில் கட்சியில் உள்ளார் எல்லாம் பணத்தை கோடிகளில் பிடித்துக்கொள்ள சாமான்யருக்கு அவர்களுடைய ஊதியத்தைக் கூட செலவுக்கு எடுக்க முடியா நிலை,வங்கியில் அறிவிப்பு பலகைகள்: பனம் போடுவதாயிருந்தால் போடலாம், எடுக்க வழியில்லை, இன்று கொடுப்பது இல்லை ஏடிஎம்களில் எடுக்க முடியாது கொடுக்க முடியாது என... என்றெல்லாம்...
இதில் வேறு பணத்தை புழக்கத்தில் வேறு விட வேண்டுமாம், வைத்திருக்காதீர் என மோடியும் ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு அறிவுரை. என்னடா தகுதி இருக்கிறது உங்களுக்கு எல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்ல...வாக்கு வாங்கி வாக்கு வங்கியை கையில் பிடித்து விட்டால் நீங்கள் எல்லாம் ஆளும் வர்க்கம், அடக்கும் வர்க்கம் எல்லாரையும் ஆட்டுவிப்பீரா, ஆங்காங்கே பொறுக்க முடியாத மகக்ள் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார்கள் மறியல் , சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம் என
பிடிக்க வேண்டிய கள்ளப்பணம், கறுப்புப் பணம், எல்லாம் வாராக்கடன்களாக இருக்க ஏழைகளை எல்லாம் வங்கியில் போடச் சொல்லி அவை அத்தனையும் அள்ளி அவன்களுக்கு வாரி வழங்கி கடனாக கொடுத்து அவை வந்தாலும் சரி வாராவிட்டாலும் சரி என வாரி விடும் ஆட்சி உமது அதற்கு வங்கி மேலாளர் போல கைக்கூலி பெற்று நடத்தும் ஆட்சி உமது ஆட்சி. வாங்கிய இலஞ்சப்பணத்துக்கும், தேர்தல் செலவுக்கும் வாங்கிய நன்றிக் கடனுக்கும் நேர்மையாக வாரி வழங்கி அவர்கள் பக்கம் நிற்கும் உங்கள் ஆட்சி...எல்லாரையும் வரி கட்ட வளையத்துக்குள் இழுத்து மேல்தட்டுக் குடிகளை காக்கப்பார்க்கிறது.
உலகளாவிய அளவில் இன்டர் நேஷனல் லெவலில் இ.மின்னணு வர்த்தகம் என்றெல்லாம் பேசும் ஆட்சீ நிர்வாகம் என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால்: மின் கட்டணம் ரூ.80 கட்ட சென்றால் அங்கு ஸ்வைப் மெஷின் இருக்கிறதா என்றால் இல்லையாம்,ரொக்கம் மட்டுமே பெற்றுக்கொள்வாராம் இது மாநில அலுவலகத்தில்
மாதம் ஒன்றுக்கு ரெயில்வே பாஸ் கட்டணம் எடுக்கச் சென்றால் 185ரூபாய்க்கு ரெயில்வேயிலும் ரொக்கப் பணம்தான் வாங்குவாராம், ஸ்வைப் மெஷின் எல்லாம் இல்லையாம், இன்னும் எந்த வித கட்டமைப்பு/ இன்பிராக்ஸ்டரக்கருமே இல்லாமல் எப்படிடா கேஷ்லஸ் வர்த்தகம் செய்யப் போகிறீர்கள்?
இந்த இலட்சணத்தில் காய்கடைக்காரர், கீரை விற்கும் பெண்மணி எல்லாம் ஸ்வைப் மெஷின் வாங்கி வைக்க வேண்டுமாம், ஏன்டா டேய் முதல்ல வங்கிகளில் ஏடிஎம், வரவு செலவு எல்லாம் சரி செய்து அவரவருடைய காசை ஒழுங்காக கிடைக்கச் செய்ய வழி செய்யாமல் வாய் கிழிய பேச்சு வேறா? டேய் ரிலையன்ஸுக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு, விற்று விட்டு அவனுங்க கிட்டதான் ஸ்வைப் எல்லாம் இருக்கிறது, அதுவும் சர்வர் பால்ட் ஆனால் சர்க்கரையை காகிதத்தில் எழுதி நக்க வேண்டியதுதான் நன்றாக இனிப்பாக இனிக்கும்
எல்லாமே மெட்ரோபாலிடன், காஸ்மோபாலிடன் ஸ்டைல், ஏன்டா சென்னையில் வர்தா புயலில் வாரிப் போட எந்த ஸ்வைப் மெஷின் வழித்து போடப் போகிறது? எங்கு போனாலும் ரொக்கமே கேட்கிறார்கள் நாமாகப் போய் கார்டை வைத்துக் கொண்டு அலைந்த போதும் பயனில்லை.
இந்நிலையில் இந்தியா என்பது 130 கோடி மக்கள் தொகை உள்ள உபகண்டம்.இங்கு ஒரு கணக்குக்குச் சொன்னால் கூட 5 அல்லது 6 பெரு நகரங்களும் சுமார் 400 லிருந்து 500 சிறு நகரங்களும் இருக்கலாம், ஆனால் சுமார் 7 இலட்சம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் உங்களால் வங்கிக் கணக்கு ஆரம்பித்து மின்னணு வரவு செலவு புடுங்கி விட்டீரா எந்த கட்டமைப்பும் , ஆரம்பக் கட்ட முன் ஏற்பாடுகளுமே செய்யாமல் மக்களை வதைத்து கொன்று எடுக்கிறீரே இது எந்த வகையில் சேர்ந்தது>
இணைய வங்கிச் சேவை என்று சென்றாலும் நிரந்தர வங்கி கணக்கு இருக்கிறாதா பேபாலா,பே டைமா என இன்டர் நேஷனல் அளவைகளில் யூனிட்களில் தகவல் தரவேண்டியதிருக்கிறதே, அவை மேலும் சில நகர்களுக்கு மட்டுமே சேவையளிக்க, இரண்டு டைப்பில் எந்த டைப்பில் நீங்கள் பணப் பரிவர்த்தனை செய்கிறீர் என்றெல்லாம் கேட்க ஓரளவு இதில் பரிச்சயம் இருப்பார்க்கே புது அனுபவமாய், பிடிபடாத தொழில் நுட்பங்களுடன் ஏமாற்றுகிற மொழி நுட்பமாய் இருக்கும்போது இன்னும் சரியாக வெளியே போய் கால் கழுவத் தெரியாத, இன்னும் மருத்துவம், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், உணவு உடை உறையுள் என்ற அன்றாடத் தேவைகள் பூர்த்தி அடையாத,பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாத, யார் தமது தலைவர் எனக்கூடப் புரியாமல் வாழ்க்கை நடத்தும் தராதரம் தெரியாத, தமது வாக்குகளை 200 ரூபாய்க்கும், ஒரு கோர்ட்டர் கோழி பிரியாணிக்கும் விற்கிற எமது பாமர மக்களுக்கு எப்படி இதெல்லாம் ஒத்து வரும் ஏற்புடையதாய் இருக்கும்...
அட , இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போதும் மதுக்கடைகளில் விற்பனை குறையாமல் நடந்து வருவதும், போக்கு வரத்துகள் பாதிக்காதிருப்பதும், நமது இருள்,
மக்கள் போராட ஆரம்பித்து இந்த முடிவு மோடியின் மன்கி பாத் மங்கி பாத் முடிவு முற்றும் தவறானது என்பது நமது வெளிச்சம்.
அப்படி என்னதான் இந்த திட்டம் சாதித்து விட்டது? ஏற்கெனவே இருந்த கள்ளப்பணம் எதையும் ஐ மீன் கறுப்புப் பணம் எதையும் பிடித்து சாதித்ததாகத் தெரியவில்லை 14 இலட்சம் கோடியில் 12.2 இலட்சம் கோடி ஏற்கெனவே வங்கிக்கு வந்து விட்டதாக செய்தி...இன்னும் 15 நாட்கள் இருக்கின்ற நிலையில். இவர்கள் இப்போது பிடித்தாடும் பித்தலாட்டம் எல்லாம் புதுநோட்டுக் கற்றைகள் 2000 ரூபாய் நோட்டுகள் எப்படி பிடிபட்டன என்ற கூத்துதான்...பிடிக்கிறீர்களே அதன் வில் எங்கு அதையும் சொல்ல வேண்டுமே,அம்பை மட்டும் நோகடித்து பிடித்து விட்டதாய் மார்தட்டி எமது தமிழக முதல்வர் கதை போல அழுகுணி ஆட்டம் ஆடுகிறீர், ஆமாம் மோடிஜி மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன் அதென்ன நீங்கள் பேசும் ஆப்பு அதற்காகத்தானே 2000ரூபாய் நோட்டு? பழைய ஆயிரம் ஐநூறுக்கு மாறாக புது நோட்டு சரி அதென்ன ஏற்கனெவே இல்லாதிருந்த புதிதான 2000 ரூ நோட்டு ஏழையால் சில்லறை மாற்ற முடியவில்லை, பணக்காரக் கழுதைகள் பதுக்க எளிதாக இருக்கட்டுமே என்றா? படு தோல்வி உம் திட்டம்.
நான் பரிசு அறிவிக்கிறேன் உமக்கு இந்தத் திட்டம் நீங்கள் சொல்லியபடி டிசம்பர் 31க்குள் வெற்றி அடைந்தது என ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் அறிவித்தால் எனக்குள்ள 4 இலட்சம் கடனையும் உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன், கட்டி விடுங்கள்...அப்படியே எனது கணக்கில் உள்ளவற்றையும் எடுத்துக் கொண்டு 3 பேரே உள்ள எனது சிறிய மைக்ரோ லெவல் பேமிலிக்கு கடைசி வரை தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுங்கள் எனது ஒரே மகனுடைய படிப்புச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்....இந்த நாட்டில் உள்ள அனைவர்க்கும் வேலை தேடும் அனைவர்க்கும் ஒரு வேலை கொடுங்கள் அவர்கள் அவர்களது தேவையைப் பார்த்துக் கொள்வார்கள், மேலும் இடையறா பொய் புரளிச் செய்திகளை பரப்பாதிருங்கள் மதுக்கடைகளை அகற்றி, புகை பிடிப்பது, போதையில் ஈடுபடுவது ஐ மீன், கஞ்சா, பான் பராக், குத்கா, போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்க திட்டம் சட்டம் செய்யுங்கள்.அவர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் பாரதம் வல்லரசாகும் நல்லரசாகும்.
என்னதான் எப்படித்தான் திட்டங்கள் இருந்த போதும் அது ஒரு நாட்டின் பெரும்பானமையான மக்களை பஞ்சத்தில் ஆழ்த்தி, பசிக்கலையவைத்து பிச்சை எடுக்க வைத்து ரோட்டில் நிற்கவைப்பதை எவருமே ஏற்க முடியாது
இந்த நாட்டின் அமைப்பு எப்போதுமே பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவதாகவும் ஏழை மேலும் ஏழை ஆவதாகவும் இருக்கும் அமைப்பு. இந்த நாட்டின் சொத்துகள் இந்த நாட்டின் சிறு எண்ணிக்கையில் உள்ளாரிடம் நாட்டின் உச்சியில் குவிந்து விட்டன. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எந்தவித சொத்துகளின் கட்டமைவும் இல்லாதிருக்கின்றனர். இதை முதலில் மேம்பட வைக்கவும், நதி நீரை இணைக்கவும் எந்த தலைவர் வருகிறாரோ அவரே இந்த நாட்டின் சிறந்த தலைவராக இருக்க முடியும், வர முடியும், அப்படி எவராவது வந்தால் அவருக்கு என் உழைப்பும், அன்பும், ஆசிகளும், வாழ்த்துகளும் என்றும் இருக்கும்.
இதுவே 2017க்கு உலகுக்கு இந்தியா சார்பாகவும் இந்திய மக்கள் சார்பாகவும் இந்த மறுபடியும் பூக்கும் வலைப்பூ சார்பாக நாம் தரும் செய்தி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.