Thursday, March 17, 2022

ஒரு மௌன யுத்தம்: கவிஞர் தணிகை




எனது பெயர் எஸ்.தணிகாசலம் வயது:60 1993 மார்ச் 11ல் 8 சென்ட் நிலம் வாங்கி பத்திரப் பதிவு செய்து பட்டா மாறுதலுக்கும் மனு செய்துள்ளேன். அப்போது அதன் சர்வே எண:188/2B2 பட்டா எண்:211.வீரக்கல் புதூர்(014) பேரூராட்சியில் இருக்கிறது.

1.03.11.2018ல் பட்டா உட்பிரிவு செய்து அளிக்க முறைப்படி உரிய சேவை மையம் ழியே விண்ணப்பித்திருக்கிறேன்: உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:330809148325 விண்ணப்ப எண்:2018/0105/08/069770 தேதி: 03.11.2018. சர்வே எண்:188/2B2D1A1A1 என்று குறிப்பிடப் பட்டு...பட்டா வழங்கப் பட வில்லை. எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன. அளந்தும் சென்றார்கள்.


2. 01.09.2021 மீண்டும் முறைப்படி உரிய .சேவை மையம் வழியே விண்ணப்பித்திருக்கிறேன் உட்புல பிரிவு மாறுதல் பட்டா எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/233891 தேதி:01.09.2021 சர்வேஎ எண்: 188/2B2A என்று...குறிப்பிட்டு பட்டா வழங்கப் படவில்லை எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன அளந்தும் சென்றார்கள்.


3. 14.12.2021 மீண்டும் மனு செய்யச் சொன்னார்கள் அளந்த பிறகு முறைப்படி இ.சேவை மையம் வழியாக விண்ணப்பித்துள்ளேன்.:சர்வே எண்: 188/33A என்று குறிப்பிட்டு.செய்துள்ளேன் உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/258351 தேதி: 14.12.2021

4. பாரத ஸ்டேட் வங்கி மூலமாகவும் சலான் தேதி:17.12.2021 வழியாக ரூ.400 18.12.2021 அன்று வங்கியில்  உட்பிரிவு மாறுதல் பட்டாவுக்காக SA No: 188/33 என்று கட்டப்பட்டு விட்டது.

ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் ரூ.160 முதல் 240 வரை செலவு சேவை மையத்துக்கு செலவு செய்திருக்கிறேன். பல முறை அளந்து சென்றும் பட்டா கிடைக்காமல் எனது மனைவிக்கு வாக்கு அடையாள சரியான அட்டைக்கு 5 முறை அலைந்து திரிந்தது போலவே இதுவும் இருக்கிறது.


 14.01.2022 இன்று வரை எனக்கு கிடைக்க வேண்டிய பட்டா கிடைக்காதிருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று: அது நான் சட்டத்துக்கு புறம்பாக நடக்க மறுப்பதுதான். இலஞ்சம் கொடுக்காமல் இருப்பதுதான். இதை எப்படி சொல்கிறேன் எனில் எனக்குப் பிறகு அந்த இடங்களில் அதன் சுற்றுப் புறங்களில் நிலம் வாங்கி விண்ணப்பித்த அனைவருமே பட்டா பெற்றுவிட்டனர்.

 காரணம் அமைப்புடன் அனைவருமே ஒத்துப்போவார்களாக இருக்கின்றனர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நில அளவை அலுவலர்கள் பலமுறை மாறிவிட்டனர். பல முறை அளந்தும் விட்டனர்.ஆனால் ஒரு அம்மா ரூ. ஐந்தாயிரம் கொடுங்கள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று மாறுதல் செய்து சென்றுவிட்டார். பின்னால் வருவார் செய்து கொடுப்பார் என்று சர்வே எண் மாறி விட்டது உங்களுக்கென்ன பட்டாதானே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்

பின்னால் வந்தவர் நல்லவர் அவரும் அளந்து ஆவன செய்தார். ஆனால் அவரின் உதவியாளர் ஒருவர் ( அரசு அலுவலரா என்று தெரியவில்லை) ரூ.8000 கொடுங்கள் முடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். வீரக்கல்புதூர்(014) பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி புரியும் ஒரு ஆயாம்மா நீங்கள் அளவீட்டாளருடன் பேசுங்கள் என எனது மனைவியிடம் கூறி இருக்கிறார் கொள்வினை கொடுப்பினை பற்றித்தான்.

ஆக அரசு நல்ல விதமாக செயல்பட எண்ணினாலும், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதாரண பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே எப்படியும் இடைத்தரகர்கள் தோன்றியபடியே இருக்கிறார்கள்.அமைப்பு மாறவில்லை.நான் எவரையுமே குறிப்பிட்டு காட்ட விரும்பவில்லை. அந்த முகமற்ற நபர்கள் சமூகத்தின் அவலங்களாய்த் தொடர்கின்றனர்.

 எனக்கு இப்போதிருக்கும் நிலை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் பத்திரப் பதிவு, வருவாய் மற்றும் அரசுத் துறைகள் எப்படி எல்லாம் மேல் இருந்து இயங்க நினைக்கின்றன ஆனால் கீழ் மட்டத்தில் இயங்க மறுக்கின்றன என்பதற்கு.


இந்நிலையில் எனக்கு பட்டா கிடைக்க ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

வணக்கங்களுடன்.


கவிஞர் தணிகை ()எஸ்.தணிகாசலம்

இணைத் தலைவர்

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்

11/125 புதுசாம்பள்ளி

மேட்டூர் அணை 636 403

தொடர்பு எண்: 8015584566

deivapublisher@gmail.com

puthusamballi

14.01.2022


பி.கு: இந்த மின்னஞ்சலை தமிழ் நாடு அரசின் மாண்பு மிகு முதல்வர் முதல்,தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்,கோட்டாட்சியர், தொடர்புடைய அமைச்சர்கள் இப்படி அனைவர்க்கும் தெரியப்படுத்தியதால் பெற்ற சிறு வெற்றி இது. எல்லாப் புகழும் இயற்கைக்கே. இந்த மடலின் விளைவாகவும், இதன் நினைவூட்டல்களினாலுமே உரிமையுடைய நில ஆவணத்தை ஆன்லைனில் பெற முடிந்திருக்கிறது. யாரையும் புண் படுத்த வேண்டிய நிலையில் இல்லாமல் எனது குறையை மட்டுமே தீர்க்கச் சொன்ன ஒரு அத்தியாம் இது. ஆனால் இது எத்தனையாவது அத்தியாம் மறுபடியும் பூக்கும் வாழ்வுப் புத்தகத்தில் என்று மட்டும் கேட்டால் அதிர்ந்து போவீர்கள் இன்னும் இருக்கும் காலமெல்லாம் அதே துணிச்சலுடன் பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துகளுடன் கவிஞர் தணிகை


No comments:

Post a Comment