Saturday, March 19, 2022

தமிழக வரவு செலவு அறிக்கை 2022 : கவிஞர் தணிகை

 தமிழக வரவு செலவு அறிக்கை: கவிஞர் தணிகை



18/03/2022  தமிழக நிதி நிலை அறிக்கை

19/03/2022 வேளாண்மை நிதி நிலை அறிக்கை சமர்பித்த நிலையில்


இது வேளாண் தொழில் பால் அக்கறை உள்ள அரசாகவும், அதிகமான ஈடுபாட்டுடன் பெண் உயர் கல்வி சார்ந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிற செயல் வரவேற்கத் தக்கதாகவே அனைவரும் கருதும் நிலை உள்ளது.


 உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்திருந்ததே அரசு, ஆனால் இதன் பின்னணியில் அந்த ஆலோசனைகளுடன்  இருந்த குழுவினரின் சுவடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


உழவர் சந்தை மேலும் 50ல் கவனம் கொள்ளவேண்டியும், 10 உழவர் சந்தை புதிதாகவும் தோற்றுவிக்கப் பட வேண்டும் என்பது மறுபடியும் ஒரு நல்ல முடிவு.


உழவர் சந்தை மற்றும், கிராமத்து மினி பேருந்துகளை கலைஞர் கருணாநிது முதல்வராக இருக்கும்போது கொண்டுவந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவை அடுத்து வந்த அரசால் புறக்கணிக்கப் பட்டன என்பதை எல்லாம் மக்கள் நலம் சார்ந்த சிந்தனையாளர்கள் மறந்திருக்க வழி இல்லை.


மேலும் மாவட்ட தலைமை இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் சிறு தானியப் பயிர்கள் கொள்வினை, கொடுப்பினை கொண்டு வரப்படுவது எல்லாம் ஒரு நல்ல நிகழ்வுக்கு முன் வாயில்கள்.


மேலும் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு...அதற்கு நிதி ஒதுக்கீடு...எல்லாம் கலந்துரையாடல் மூலம் தெளிவு படுத்தப் படல் நல்லது


அரசுப் பள்ளியில் பயிலும் (6 ஆம் வகுப்பு முதல் 12 வரை) மாணவியர்க்கு பட்ட பட்டய உயர்கல்விக்கு செல்லும்போது ரூபாய் ஆயிரம் அவர் கணக்கில் வரவு வைப்பதை எவருமே தவறு என்று மறுக்க முடியாது. அதை நல்ல படியாக அமல்படுத்தினால் இலவச பேருந்து மகளிர்க்கு என்பது போல இந்த அடுத்தக் கட்ட முயற்சியும் மாண்பு மிகு தமிழக முதல்வர்  ஆட்சிக்கு வலு சேர்க்கும். அடுத்த படியாக இருக்கும்.


நிதி உதவி நன்னிலையடையும் போது குடும்பத் தலைவிகள் பேரில் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் படும் பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டு இருக்கின்றன என்ற செய்தி நேர்மறையாகப் பார்த்தால் வரவேற்புடையதே.


நாங்களும் பொருளாதாரம் சில ஆண்டுகள் படித்த நினைவு... எனவே நிதி நிலை அறிக்கை பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை என்று ஒருபுறமும், மற்றொரு புறம் கடனை அதிகமாக்கிக் கொண்டும் செல்வதும் முரணாகவே உள்ளது.


முயற்சிகள் வெல்லட்டும். பாராட்டுகள்


பி.கு: பாலுக்கு, தக்காளிக்கு, முள்ளங்கிக்கு உரிய விலை இல்லை என்று பெரும் அளவில் விவசாயிகள் ஏன் சாலையில் கொட்டி விரயம் செய்வதாக ஏன் இன்னும் செய்திகள் வருகின்றன? அவற்றை சிறு முயற்சி செய்து தேவைப்படுவார்க்கு மலிவான விலை அல்லது இலவசமாகக் கொடுக்க வேண்டும் அது நல்ல விளைவைத் தரும்.



தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்றம் கூட அந்த அந்த பகுதிகளில் அதைச் செய்ய முயற்சிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை மன்றம் பரிசீலித்து நல் முடிவுக்கு வரட்டும்.


மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி வெளக்கமாறு டில்லியுடன் பஞ்சாப்பையும் கூட்டத் துவங்கி இருக்கிறது ஒரு உற்சாகமான வரவேற்கத் தக்க வளர்ச்சி. நமக்கெல்லாம் கூட ஒரு தூண்டு உணர்வைத் தொடர உதவட்டும்...


அதற்குள் தான் அந்த மனிதரை பொது இடத்தில் அறைந்ததும், கேவலப்படுத்தியதும் ஒன்றிய அரசு டில்லியில் அவருக்கு நிறைய செயல்பாடுகளுக்கு சுயமாக செயல்படவிடாமல் ஆளுநர் கொண்டு அடக்கி முடக்க முயன்றதும், அவர் குடும்பம் கூட வேதனை தாங்கியதும் வெளிச்சம் தர வேண்டிய செய்திகள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்,

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்,‍ செவ்வி

அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்;

கருமமே கண்ணாயினார் ...குமரக் குருபரர். பாடல் 52. நீதி நெறி விளக்கம்.






No comments:

Post a Comment