Tuesday, September 30, 2025

பிரார்த்தனையா தியானம் உறக்கமா?: கவிஞர் தணிகை

 பிரார்த்தனையா தியானம் உறக்கமா?



தியானப் பயிற்சியில் ஈடுபடுவோரைத் தவிர வெளிப் பார்வையாளர் இதை பிரார்த்தனை, உறக்கம் என்றும் கூட சொல்வதைக் கேட்டதுண்டு. ஏன் கடவுள் மறுப்பு சிந்தையுடையார் கூட தியானம் கற்கலாம். புத்தர் கடவுள் பற்றிப் பேசவில்லை... வினை தொடரும்...என்பதே அவரது சுருக்கமான தத்துவம்... இன்னும் சொன்னால்  ஆசையே அழிவுக்கு காரணம்...தியான வாழ்வு மேற்கொள்ள உடலை வருத்துவது கூடாது. உடல் ஒரு ஓடம். அதைக் கொண்டுதான் வாழ்வுக் கடலை நாமனைவரும் கடந்தாக வேண்டும்.


எனவே உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே...உறக்கம், ஒழுக்கம், உணவு, வாழ்வு எல்லாவற்றையும் உள்ளடக்கியது தியான வாழ்வு முறை. அடுத்த உயிர்க்கு ஊறு செய்யாத நெறிகளும், எல்லா நேரத்திலும் உண்மையைக் கடைப் பிடித்தல் போன்ற நெறிகளும் இதனுள் அடக்கம்...


கோபம், பொய்கள், கவலை, ப‌யம், வெட்கம், வேட்கை யாவற்றில் இருந்தும் மீட்க யமம், நியமம்,ஆசனம், பிரணாயமம், பிரத்யாஹாரம்,தாரனை, தியானம், சமாதி அல்லது உள் அடங்கல் மூலம் மனிதத்தை மேன்மைப் படுத்துவதும் மாட்சிமைப் படுத்திக் கொள்வதும்...


ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது...ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்...இயற்பியல் அடிப்படை விதி...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment