Monday, May 26, 2025

டை எத்தில்ஹெக்ஸைல் தாலேட்,பாலி வினைல் குளோரைடுமே முக்கிய காரணங்கள்

 நன்றி

பிபிசி தமிழ்


'உலகில் 8 பேரில் ஒருவரை பாதித்துள்ள இதய நோய் வர பிளாஸ்டிக்கே முக்கிய காரணம்' - இந்தியாவின் நிலை என்ன?



உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பாலிமர்கள் மற்றும் ரசாயன சேர்க்கைப் பொருட்கள், குறிப்பாக டை எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (Di(2-ethylhexyl)phthalate) என்கிற ரசாயனம் தான் இதய நோய் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

தாலேட் (phthalate) ரசாயனம் பாலிவினைல்குளோரைட் (பிவிசி) பிளாஸ்டிக்குகளை மென்மையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி அதிகமாக நடைபெறும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் சார்ந்த ரசாயனங்கள் 55-64 வயது பிரிவில் உள்ளவர்களில் இதயநோய் இறப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. இது அங்கீகரிக்கப்படாத முக்கியமான சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்னை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் 356,238 இறப்புகள் தாலேட் நுகர்வுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 14% மரணங்கள் இதனால் தான் நிகழ்ந்துள்ளன. இந்த இறப்புகளில் 16.8 சதவிகிதம் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதிவாகியுள்ளன

இந்த ரசாயனப் பொருட்கள் பரவலாக எதில் எல்லாம் பயன்படுத்தப்பட்டன?

  • பொம்மைகள்.
  • பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள்.
  • அழகு சாதனப் பொருட்கள்.
  • பெயிண்ட்.
  • மருத்துவ மற்றும் ஆய்வக உபகரணங்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலான பொருட்களில் தாலேட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • 'வயிற்றில் 15 மாத சிசு, கூடவே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள்' - கர்ப்பிணி யானை மரணத்துக்கு யார் காரணம்?
  • பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்
  • மாரடைப்பு மரணங்களைத் தடுக்கும் வாட்ஸ் ஆப் குழுக்கள் - தமிழ்நாடு மருத்துவர்களின் புதிய முயற்சி
  • இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவைக்(66%) காட்டிலும் 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது.
  • 2018-ம் ஆண்டின் தரவுபடி நாடு வாரியாக இறப்புகள்

    • இந்தியா (103,587)
    • சீனா (60,937)
    • இந்தோனீசியா (19,761)

    சீனாவில் 2018-ம் ஆண்டு 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 15.72 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 60,937 பேர் இதன் தாக்கத்தால் ஏற்பட்ட இதய நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இந்தியாவில் அதே வருடம் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 10.38 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 103,587 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக பிளாஸ்டிக் தொழில்துறை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் தாலேட் தாக்கங்கள் மற்றும் வணிக பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் பிவிசி போன்றவற்றில் தாலேட் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    2018-ம் ஆண்டில் சீனா, பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முக்கியமான நாடாக இருந்தது. அவ்வருடத்தில் மட்டும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் 29% சீனாவில் தான் இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி இந்தியாவில் தான் பிளாஸ்டிக் உமிழ்வு (ஒவ்வொரு வருடமும் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்கிற அளவில்) அதிகம்.

    பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுவதாக ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தான் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக லேன்சட் ஆய்வு கூறுகிறது.

  •  "இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளால் இதயநோய், நீரழிவு நோய், கருவுறாத்தன்மை மற்றும் புற்றுநோய் என நான்கு நோய்கள் பிரதானமாக வருகின்றன. லேன்சட் ஆய்வறிக்கை இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தும் 

  • "அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவே கூடாது. ஒருமுறை பயன்படுத்த வேண்டிய பாட்டில் போன்ற பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது.

  • மறுபடியும் பூக்கும் வரை

    கவிஞர் தணிகை

  • THANKS:
  • மோகன்
  • பதவி,பிபிசி தமிழ்

Saturday, May 17, 2025

டூரிஸ்ட் பேமிலி: கவிஞர் தணிகை

 டூரிஸ்ட் பேமிலி: கவிஞர் தணிகை



தயவு செய்து பார்க்காமல் இருந்தால் பார்த்து விடுங்கள்.இதைப் பற்றி நிறைய எழுதிச் சொல்லப் போவதில்லை அது நீங்கள் பார்க்க முனையும் போது ருசியைக் கெடுத்து விடக் கூடும் என்பதால். 

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்ற தகுதியுடைய படம்.


எனது பாலைவன நாட்களில் இந்த 2 மணி நேரம் ஒரு பசுஞ்சோலையானது

கையைக் காலை ஆட்ட முடியாத நடிகர் படங்களுக்கு எல்லாம் நூற்றுக் கணக்கான கோடிகள் கொட்டிக் கொடுக்கும் இந்த சினிமா உலகில் இப்படியும் ஓரு சில படங்கள் குறுகிய பொருட் செலவில் வரங்களாக வந்து நேர்ந்து விடுகின்ற‌ன எனவே தான் மே1 ஆம் தேதி வந்த படம் பற்றி இப்போது எழுத நேரிட்டிருக்கிறது.


சில நண்பர்கள் அதிலும் குறிப்பாக கிறித்தவம் சார்ந்த நண்பர்கள் சினிமா பார்க்கும் நேரம் கூட கால விரயம் என்று பார்க்கும் பழக்கம் இல்லாதிருப்பதை அறிவேன் அவர்களும் கூட இது போன்ற படங்களை கண்டு கலந்து அனுபவிக்கலாம் என்பதற்கான பதிவே இது.


யார்ரா சொன்னா நீ அகதின்னு?!


என்ற ஒற்றை சொற்றொடரில்  சிகரத்தை தொட்டு விட்டார் இதன் இயக்குனர்: அபிஷன் ஜீவிந்த்.


எல்லாம் பாராட்டுகிறார்களே அப்படி என்ன இதில் சிறப்பு என்பதற்காகவே பார்க்க நேர்ந்தது, இப்போதெல்லாம் சினிமா எல்லாம் கூட பார்ப்பதை நிறுத்தி ஆகிவிட்டது. 


மெதுவாக படிகளில் ஏறி உச்சத்தை தொட்டு பார்ப்பார் கண்களில் கண்ணீரை துளிர்க்கச் செய்யும் ஒரு மெஸ்மரிஸம் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை கலந்த மகிழ்வுடன் இழையோடிக் கொண்டே இருக்கிறது சாதாரண காட்சிகளாக இருந்தவாறே.


மிசன் இம்பாசிபிள்MISSION IMPOSSIBLE  THE FINAL REKONING என்ற சினிமாக்களுடன் இது போன்ற குடும்பம் சார்ந்த நேயமிக்க, அன்புதான் மானிடத்தின் அடி நாதம் இதை மொழியோ, மதமோ, மற்ற பிரிவினைகளோ தடுப்பதற்கில்லை என்ற அரிய பாடம் இந்த படத்தின்மூலம் ....வில்லத்தனம் ஏதும் வில்லங்கம் இல்லாமல்...

பிற உயிரையும் நேசிக்கக் கற்றுக்  கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் இருக்கும் ஊனங்களையும் அகற்றிவிடும் நல்ல விதை இது.


இந்த அதிகாலையில் இப்படியே நான் நெக்குருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து நிறைய இந்த படம் பற்றி சொல்லிக் கொண்டே மழைத்துளிகளுடன் பேச முனைவது போல பேசிக் கொண்டே இருக்க முடியும். உங்கள் காலம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். பாருங்கள் பார்த்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்ந்து செல்லுங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


* அட நாம எல்லாமே பூமிக்கு வந்த ஒரு டூரிஸ்ட் பேமிலிதாமே...முடிந்தவுடன் புறப்பட வேண்டியதுதானே என்ற நோக்கத்தில் பார்த்தாலும் இந்த டைட்டில் பொருந்துகிறது.


Monday, May 5, 2025

NOTHING ஒன்றுமில்லை

 தீயை வைத்துத் தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கிறது

வாகனத்தை வைத்துத் தான் தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது

உடலை வைத்துத் தான் உயிரைக் காக்க வேண்டியதிருக்கிறது

உறவு வேண்டுமானால் சொற்களைத் தேர்வு செய்ய வேண்டியதிருக்கிறது



ஆபத்தும் வாழ்வுப் பற்றும்...

கவனத்தில் கொள்ள வேண்டும் போதுமானதாக...


Friday, May 2, 2025

ஐந்தில் வளைந்தது ஐம்பதுக்கும் மேலும் விளைகிறது: கவிஞர் தணிகை

 ஐந்தில் வளைந்தது ஐம்பதுக்கும் மேலும் விளைகிறது: கவிஞர் தணிகை



நன்றாக துரு துருவென விளையாட்டுப் பருவம் வயது ஐந்து, ஆறு ஏழு எட்டு இருக்கும்.எப்போதிருந்து ஆரம்பித்து இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. எங்கும் ஓடிக் கொண்டிருக்க விடாமல் இழுத்துப் பிடித்து சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் அவசியம் இருக்கும். அதற்கென குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும். எண்ணெய்க் குளியல் வெந்நீரால் மட்டுமே செய்ய வேண்டும் அதற்கு அடுப்பு வேறு எரிக்க வேண்டும்.


காதுகளில், கண்களில், தேங்காய் எண்ணெய்,மற்ற இடங்களில் எங்கெங்கு உடல் துவாரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நல்லெண்ணெய் விட்டு விட்டு நல்லெண்ணெய் கொண்டு உடல் முழுக்க தடவி, த‌லை உச்சியில் வைத்து அரக்கி...மொத்தத்தில் உடல் முழுதும் எண்ணெய் பிசு பிசுவென வழ வழவென அந்த சிறுவனுக்கு பிடிக்கவே பிடிக்காது, எங்கும் ஓடி ஆட விடாமல் இப்படி படுத்துகிறார்களே என, ஏன் எனில் அந்த சிறுவன் படு சுறுசுறுப்பு, மரங்களில் ஏறுவது, வீட்டுச் சுவர் மேல் ஏறுவது, குதிப்பது( கை, கால் முறிவு பற்றி எல்லாம் அப்போது எந்த கவலையுமே பட்டதில்லை) சிட்டாள் வேலைகள் செய்வது, ஓடுவது, ஓடி ஆடி விளையாடுவது, சண்டையிடுவது இப்படி எல்லாமே... எனவே ஒரு இடத்தில் இறுத்தி வைத்து  விடுகிறார்களே இப்படி எண்ணெய் தேய்த்து விடுகிறார்களே என...


அது பெரிய குடும்பம், பற்றாக்குறை உள்ள குடும்பம் தான், ஆனாலும் இந்தப் பணி சீராக வாரம் ஒரு முறை நடந்தே தீரும். வயது 60ஐ தாண்டி விரைந்த போதும்...அந்தப் பழக்கத்தின் ஆளுமை சிறப்பு இன்னும் மேலோங்கி நிற்கிறது காலமாற்றத்தால் அந்தப் பெற்றோரை இழந்த போதும்...


சொல்ல வந்தது: கண்களில், காதுகளில் எண்ணெய் விட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை. ஆனால் அது பொருந்தா அறிவுரையானது, அதை தற்காலிகமாக அவர்கள் அறிவுரைப் படி பார்க்கலாம் என்ன நடக்கிறது பார்க்கலாம் என‌ நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்த போது..கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் என்று பதிவானது.


எடுத்துக் காட்டாக: காதுகளில் பஞ்சு மொட்டுகள் வைத்து தூய்மை செய்யும் வேலை நடந்து ஒரு முறை சரியான காது வலி, ஏன் என்று தெரியாமலே... (சரியான காது மடல் வெண்பஞ்சு மொட்டுகள் சரியான தயாரிப்பின்றி காதுள் சென்று நின்று விட வாய்ப்புண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது)சொட்டு மருந்துகள் எல்லாம் விட்டாகி விட்டது. காதுக் குருமி கெட்டிப் பட்டுப் போவதும் உண்டு.


அதன் பின் பழைய கால முறைப்படி காதுகளுக்கு சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்யும் போது காதுகளிலும் எண்ணெய் சில துளிகள் விட்டுப் பார்த்தால் அந்த காதுக் குருமி எனும் அழுக்கு தாமாகவே கரைந்து வெளி வந்து நின்று விடுகிறது, எந்த உபகரணமுமின்றி கை விரல் கொண்டே எடுத்து விட முடிகிறது.


எல்லாம் பெற்றோர் செய்த தவம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. 


Thursday, May 1, 2025

MAY 1 2025

 உழைப்பாளிகள் தினம்: கவிஞர் தணிகை



ஆண்டுக்கொரு முறை ஏதோ ஒரு பெயர்க்காரணத்தோடு நிறைய தினங்கள் கொண்டாடப் பட்டாலும், இந்த உழைப்பாளர் தினம் என்பது தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாள் போல் உலகெங்கும் உயர்வுடன் உணர்வுடன் கொண்டாடப் பட வேண்டிய கொண்டாடப் படுகின்ற ஒரு அரிய நாள்.


மேதினம், உழைப்பவர் சீதனம் என்றார் ஒரு கவிஞர். அப்படியானால் அவர் சொல்வது ஒரு விடுமுறை நாள் என்பதை மட்டும் தானா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.


உழைப்பாளர்களுக்கு தமது உரிமைகளை பெற்றுத் தந்த நாள். உலகெங்கும் 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வுக்கானது, 8 மணி நேரம் தங்கள் குடும்ப மேன்மைக்காக மற்றும் குடும்பம் குழந்தை ஆகியோருடன் ஒட்டி உறவாட வேண்டியதான நாளின் முப்பெரும் பிரிவாக வாழ்வை உழைப்பாளர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என கட்டம் கட்டிய நாள்.


உழைத்து முடித்தவுடன் அந்த ஆயிரத்தில் மதுவுக்கு கொடுக்கும் உழைப்பாளர் பற்றியோ, குழந்தை இறந்தது கூடத் தெரியாமல் 3 ஆண்களுடன் உடல் மல்லாத்திக் கிடந்த பெண் பற்றிய சிந்தனையோ வராத சமுதாயப் பற்றியது இந்த சிந்தனை.


இந்தப் பதிவை மேட்டூர் பியர்ட்செல் என்னும் ஒரு மாபெரும் ஆலையில் இரவும் பகலும் ஓயாமல் (அல்லும் பகலும்) 4 விசைத்தறி பார்த்து எங்களை எல்லாம் உருவாக்கிய எனது தந்தை கந்தசாமி சுப்ரமணியம்  என்ற ஒரு உண்மையான உழைப்பாளிக்கு காணிக்கையாக்குகிறேன்.


எங்கள் பெரிய குடும்பம் பற்றி நிறைய உண்டு சொல்ல. ஆனால் இந்தப் பதிவு அதற்கானதல்ல.ஒன்று மட்டும் சொல்லலாம். அப்போதெல்லாம் ஒரு வாரம் முழுமைக்கும் ஒரே மாதிரியான பணிச் சுற்று இருக்கும். அதாவது இரவுப் பணி என்றால் அது ஒரு வாரம் முழுதும். மனிதரை அவர் உடல் நலத்தை உறிஞ்சிக் குடிக்கும் நிலை. ஆனாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து தமது பிள்ளைகளுக்காக அந்த தந்தைகள் உழைப்பார்கள். அதில் ஒரு தூய மாமணி என் தந்தை. அந்த உழைப்பின் சிரமம் உணராமல் அதிகம் அவர் உறக்கம் கெட அடியேன் சிறுவனாக அறுந்த  வாலாக இருந்து நிறைய தொந்தரவு தந்தது உண்டு. கண்ணீர் மல்க‌ அது போன்ற வீட்டை நாட்டை உருவாக்க தமது உடலை உழைப்பை உயிரை ஈந்து கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளர் திலகங்களுக்கும் இந்தப் பதிவு .


மறுபடியும் பூக்கும் வரை:

கவிஞர் தணிகை