Saturday, April 26, 2025

ஈ பி(E.B) காரங்க மட்டுந்தான் இளிச்சவாயங்களா? :கவிஞர் தணிகை

 ஈ பி(T.N.E.B) காரங்க மட்டுந்தான் இளிச்சவாயங்களா? கவிஞர் தணிகை



எதை எல்லாமோ ஆன் லைன்ல போடறாங்க, இதையும் போட வேண்டியதுதானே? என்றார் அந்த சீமைக் கருவேல  முட்களை, மின் கம்பி மேல் அழுந்திக் கிடந்ததை வெட்டிக் கொண்டிருந்த இரு பணியாளர்களுள் ஒருவர்.எத்தனையோ தரம் சொல்லி விட்டோம் இந்த முதலாளிகிட்ட வெட்டச் சொல்லி கேட்டாதானே?


பொது நலம் கருதாத மக்களும் மாக்களே!


போறவங்க வர்ரவங்கள்ளாம் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள்.


அன்றாடம் நடைப் பயிற்சியின் திரும்புகையில் மாலை சுமார் 6 மணிக்கும் மேல் ஆகிவிடும், வழியில் உள்ள தெரு அல்லது சாலை விளக்குகளை எல்லாம் ஏற்றி விட்டு வருவது வழக்கம். அது இப்போது எமது நடைப் பயிற்சி தோழர்களையும் தொற்றிக் கொண்ட நல்ல வழக்கமாகி இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.


தவிர்க்க முடியாக் காரணங்களால் அன்று தனிமையில் நடைப் பயிற்சி முடித்து திரும்புகையில் மாலை 6.30 மணிக்கும் மேல் இருக்கும்.  வழ‌க்கப் படி சாலையோர முக்கிய விளக்கை அல்ல விளக்குகளை ஏற்றினேன், யாரது, நிறுத்துங்கள் என குரல்.....


அந்த இரசாயன ஆலை சுற்றுச் சுவர் மேல்: முட்கள் மேலும், கீழும் ஒரே முட்கள், மின் கம்பி வடங்களை அழுத்தியபடி. அந்த சீமைக் கருவேல மர முட்களை அந்நேரத்தில் வெட்டிக் கொண்டிருந்தனர் இரு மின் பணியாளர்கள். அபாயகரமன பணி. பார்க்கும் போதே தெரிந்தது.


சாரிப்பா, நீங்கள் பணி புரிவது தெரியாமல் வழக்கப்படி போட்டு விட்டேன் எனச் சொல்லி அவர்களுடன் இருந்து அந்தப் பணி நிறைவடையும் வரை காத்திருந்து, அதன் பின் அவர்கள் போடச் சொன்ன பின் போட்டுவிட்டும் வந்தேன்.


அதன் தொடர்பான எண்ண அலைகள் உறங்க மறுத்தன.

எவ்வளவு இடர்பாடுகள், எவ்வளவு விபத்துகள், எவ்வளவு கடினமான பணி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.


மின்சாரம் போனவுடன் திட்டுகிறோம். ஏன் எதற்கு, எப்படி என்றெல்லாம் யோசிக்காமலே. ஒருவர் கூட காரணம் சார்ந்து சிந்திப்பதில்லை.


மின் கம்பிகள் அறுந்து விழுவதும், வீழ்ந்து கிடப்பதும், காற்றிலும் மழையிலும் ஆபத்தை விளைவிப்பதும், வீடு ஒரு மரம் என்பதெல்லாம் சரி...ஆனால் அது அதன் கிளை மின் கம்பி மேல் மோதவிடாமல் பார்க்கவும் வேண்டுமே...


எல்லோருக்குமே அக்கறை அந்த அளவு இருக்க வேண்டுமே, அவர்கள் வந்தால் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனப்பான்மை முதலாளித்துவ சிந்தனை ஆயிற்றே...அதல்லவா அனைவரிடமும் தேங்கிக் கிடக்கிறது...


சட்டம் நீதி அனைவர்க்கும் சமம், எல்லாம் ரூல்ஸ்படிதான் நடக்கும் என்றால் அது பணக் கற்றை புகுந்த பின்பா  , முன்பா என்பதுதான் உலகளாவிய அளவிலான கேள்விக்குறி. எல்லாமே தனி மனித ஒழுக்கம் சார்ந்ததே. சுயநலம் வேண்டும்போது எல்லாவற்றையும் மீறிக் கொண்டு மீறி விட்டு ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை என்றபடியான வாழும் அனைவர்க்கும் இந்த அற நெறி உறுத்தும்


இந்தப் பதிவு பராமரிப்பு மின் பணியாளர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம்.

ஆன்லைனில் போட்டுவிட்டேன்பா, அதனால் என்ன விளைவு என்று அதைப் பின் தொடர்வதில்லை நண்பர்களே. சீமைக் கருவேல முட்செடிகளை மரங்களை எல்லாம் மாநிலத்தில் இருந்தே அகற்றப் போவதாக ஒரு காலத்தில் சில செய்திகள் வந்ததாகவும் சில சேவையாளர்கள் அந்தப் பணிகளி முன் எடுத்ததாகவும் நினைவு. கொசுக்களை ஒழிக்கவே முடிவதில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

P.S.:பாரமரிப்பு பணிகள் சரிவரச் செய்யாத காரணத்தால் மின் கம்பத்திலும் மின்சாரம் பாய்ந்து ஆபத்தை விளைவித்த செய்திகளும் உள்ளன.





No comments:

Post a Comment