Wednesday, April 23, 2025

காஷ்மீரின் பஹல்காம் 28 மனித உயிர்கள்: கவிஞர் தணிகை

 காஷ்மீரின் பஹல்காம் 28 மனித உயிர்கள்: கவிஞர் தணிகை



மதத்தின் பேரால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் இந்த மனிதம் வெறி கொண்டு அலைந்து உயிர்களை எடுக்கப் போகிறது? அதுவும் அப்பாவி உயிர்களை? நேற்றுதான் புதிய தலைமுறை காணொளி வாயிலாக மதங்களிலிருந்து விடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும் பல புள்ளி விவரங்களைக் கண்டேன்.


M4 carbine என்ற அமெரிக்காவின் நவீன ரகத் துப்பாக்கி இவர்களின் கைகளில் எப்படி கிடைத்தது?  இப்படி கேள்விகள் நிறைய, பதில் ஆராய முற்படின் நீங்களும் அடியேனும் முட்டாள்களும் மடையர்களுமாக்கப் படுவோம் இந்த மூடர் கூடத்தில்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment