Sunday, February 18, 2024

மருந்து: கவிஞர் தணிகை

 மருந்து: கவிஞர் தணிகை



செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல...அயர்லாந்து பழமொழி


தாயின் மாரில் பால் சுரந்து குழந்தை வாய்க்குச் சென்று புகட்டப் பட்ட பின் அந்த சிறு உதடுகளை தாய் ஒரு மெல்லிய துணியை வைத்து துடைத்து விடுகிறாளே எறும்பு ஈ கடிக்காமல் மொய்க்காமல் அங்கிருந்து ஆரம்பித்து விடுகிறது மருத்துவம்.


நீங்கள் : இரா. முத்து நாகு எழுதிய சுளுந்தீ என்னும் நாவல் படிக்க வேண்டும் பாண்டுவ மருத்துவம் பற்றி தெரிய.


இன்னும் கைவசம் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு...மலிவு விலைப் பதிப்பு பக்கம் 1064 உட்பட கைவசம் 11 நூல்கள் பாக்கி முன் முற்கொண்ட வேலையாக இருக்க‌ அதற்குள் இந்தப் பதிவு அவசியமென உட்புக...


எனது "நேசமுடன் ஒரு நினைவதுவாகி" என்னும் 2006 பதிப்பு நூலில்: 43,ஆம் பக்கத்தில்: 

நிலை மாற்றம் என்ற தலைப்பில்:

மின்சாரம் மருந்து

காற்று மருந்து தீ மருந்து

மண் மருந்து மலை மருந்து

ஒளி மருந்து வெயில் மருந்து

இலை மருந்து நிழல் மருந்து

விஷ(ம்) மருந்து வேர் மருந்து

யாவும் மருந்து

குளிர் சூடாய்

ஒரு நேரத்தில்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்!

இனி பொருந்துமா? என்று ஓர் கருத்துப் பகிர்வு இருக்கும்.


அவரவர் உடலுக்கு முதல் மருத்துவர் அவரே. காந்தி வழி நூல்களைப் படித்து மண் சிகிச்சை, நீர் சிகிச்சை,பிரமசாரிய விரத கூனே முறை பற்றி எல்லாம் அறிந்து கொள்க.ஆனால் அந்த மண்ணும், அந்த தூய நீரும் தேடிப் பயன் பெறுக.( இப்போது அந்த மாசு படா நீரும் மண்ணும் இல்லை)


ஆங்கில அல்லோபதி எனும் மருத்துவம் அவசர அவசியமாக சில நேரங்களில் தேவை. ஆனால் அவை பக்க விளைவு இல்லாமல் இல்லை. அங்கேதான் வந்து பெரிய வேள்வியின் பயனாக நிற்கிறது: மூலிகை மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம்,இயற்கை வைத்தியம் ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம் யுனானி ஹோமியோபதி இப்படிப் பட்ட மாற்று மருத்துவங்கள்.


நல்லதை எல்லாம் படிக்க கற்றுக் கொள்ள‌ மனிதத்துக்கு  நேரமோ ஆர்வமோ இல்லை. எனவே மிகவும் சுருக்கமாகவே சொல்லப் புகினும் இது சற்று நீளமானதுதான் என் சொந்த அனுபவமும்.


கிணற்றுப் பூண்டு தழை...சாதாரண வெட்டுக் காயங்களுக்கு போதுமான மருந்தே.

குப்பை மேனி : சரும அதாவது தோல் வியாதிகளுக்கு மருந்தே

முடக்கறுத்தான் கீரை: மூட்டு வலிக்கு மருந்தே

அகசுத்திக் கீரை என்பதே: அகத்திக் கீரை

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


அதில் ஒன்று: முருங்கை: வீட்டில் முருங்கை இருந்தால் முதுமையில் கோலின்றி நடக்கலாம் என்கிறது மருத்துவ மொழி ஒன்று.எங்கள் வீட்டில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முருங்கை உள்ளதுதான்.முருங்கை சுலபமாக எளிமையாகக் கிடைப்பதுதான் என்பதும் இதன் சிறப்பு

எலும்புக்கு, முடி வளர்ச்சிக்கு பயன்படும் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து , விந்து வீரியம் போன்றவைக்கு முருங்கைக் கீரை, முருங்கைக் காய் நல்ல மருந்து.


எனவே மகிழ்ச்சி என்னும் சமூக ஊடக பயன்பாட்டில் எனது தொடர்பில் இருக்கும் தோழர் ராஜேந்திரன் சொல்லிய முருங்கைக் கீரை + நாட்டுச் சர்க்கரை பற்றிய செய்தியை நான் பகிர்ந்திருந்தேன். அது அனைவர்க்கும் பயன்படும் என்பதால்.


எனக்கு எனது சேவைக் காலத்தில் கையில் வெண் அல்லது சிவப்பு படலங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. அப்போது நான் எனது வட இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பாலமலையில் சிறிது காலச் சேவையுள் மூழ்கியபடி இருந்தேன்.


அந்த தேடலின் போது: பெருமருந்துக் கொடி அல்லது வண்டுக் கடி மருந்து என்ற ஒரு கொடியில் உள்ள இலை பற்றி வழிகாட்டப் பட்டேன். வைத்தீஸ்வரா பள்ளியின் பின்  உள்ள தேசாய் நகரில் வெள்ளாட்டுப் பட்டி ஒன்றில் அவ்வப்போது எனக்கு வெள்ளாட்டுப் பால் மருந்துக்கு என்பதால் இலவசமாகவே தருவார்கள், பல முறை தந்தார்கள். இந்த இலையை அரைத்து அந்த வெள்ளாட்டுப் பாலில் கலந்து உள்ளுக்கும் குடித்து, மேலுக்கும் தடவி வர சில மாதங்களில் அந்த தேமல்கள் அல்லது வெண் அல்லது சிவப்பு படைகள் அல்லது படலங்கள் மறைந்து சருமம் சரியாகி ரோமக்கால்களும் தோன்றி சரியாகியது. அதற்கு சைவம் அவசியம். மாமிசம், புளி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற நிபந்தனைகள் உண்டு.  ஏன் எனில் அப்போது எனது வயது சுமார்25. AT those times I am Very Serious about the Future.Think about the proverb:our Exit might be  more graceful than our Entry.


இந்த பதில் மிக எளிதாக சொல்லி விட்டேன். ஆனால் இந்த மருத்துவத்துக்கு உதவியவர்களும், வழிகாட்டியவர்களும் நான் வணங்கத் தக்க குடும்ப நண்பர்களும் சிலர். அவர்கள் எப்போதும் நான் நன்றி செலுத்த தகுதி உள்ளோர்.


அவ்வளவு ஏன்? கொரானோ 19 தாக்கிய போதும், அதற்கும் முன்பிருந்தும் பல ஆண்டுகளாக‌ எனக்கு வயிற்றுப் போக்கு அடிக்கடி நிகழும். அப்போதெல்லாம் மாதுளையை விட சப்போட்டா பிஞ்சுகளை நன்கு  நைய அரைத்து மோர் அல்லது தயிரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும் இப்போதும் கூட அந்த முறை எனக்கு பயனாகி வருகிறது. உடன் தேவையெனில் எலக்ட்ரால் பவுடர் வாங்கி நீர்ச்சத்தை சேர்த்துக் கொள்ள குடித்தால் போதும்.Food Diet is also very important.


அதற்காக கெமிகல் லைன் ஹாஸ்டல் வரை, எங்கள் ஊரின் பலபகுதிகள், மால்கோ பகுதிகளில் சப்போட்டா பிஞ்சுகளுக்கு அலைந்த காலம் கண்டு எனது தங்கை ஒரு சப்போட்டா செடியைக் கொண்டு வந்து எங்கள் வீட்டில்  வைக்க அது வணங்கத் தக்க மரமாகி இன்றும் எனக்கு நோய் தீர்த்து வருகிறது மேலும் கனி கொடுத்தும் வருகிறது பலருக்கும் பறவைகளுக்கும், அணில்களுக்கும் உணவாகி. I pray that Tree.


 ஏன் என் உடலில் மலேரியா ஆந்திரா ஒரிஸ்ஸா பகுதி பணியில் இருந்த போது , கல்வராயன் பகுதிகளில் இருந்த போது டைபாய்ட் போன்ற வியாதிகளும், அதன் பின் எப்போதும் இப்போதும் உணவுக் குழல் தளர்ச்சி, நிறமி அணுக் குறைபாடு, மூலம், குடற்புண், கொஞ்சம் ஏமாந்தால் சர்க்கரை, உப்பு, இரத்த அழுத்தம் யாவும் உண்டு...ஆனால் அவற்றுடன் எல்லாம் எனது பயணம் சென்று கொண்டுதான் இருக்கிறது சுய மருத்துவ முறைகளைக் கையாள்வதால் எல்லாவற்றிலும் மிக்க பயன்பாடு.


அப்பிள் சைடர் வினிகர்(original) + பூண்டுச் சாறு + இஞ்சிச் சாறு+ எலுமிச்சைச் சாறு + தூய தேன் திரவம் தயாரித்து அருந்து வாருங்கள் பாருங்கள் எந்த கொழுப்பு சார்ந்த அடைப்புகளும் இரத்த நாளத்தில் இராது.


சிறு தானியப் பயிர் அடங்கிய கூழ் தயாரித்து எப்போதும் காலையில் உடல் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் விடாமல் அருந்துங்கள்.


தினமும் பழைய சோற்று நீர் அருந்துங்கள் உறங்கி விழித்ததும்...


இப்படி என்னால் பல சோதனை முயற்சிகளின் வெற்றியை சொல்ல முடியும். கேட்கத் தயாராக இருந்தால்.

வாழ்வு ஒரு அற்புதச் சுரங்கம் நுனிப்புல் மேயாமல் வார்த்தைகளை வீணாக்காமல் வாழ்ந்து பாருங்கள்.


இராமலிங்கர் சொன்னபடி அறிவியல் சொல்லும் படி அவரவர் உடல் பற்றியே இன்னும் முழுமையாக எவரும் அறிந்த பாடில்லை


 In Human body மேலும் மூன்று கோடிக்கும் மேல் இருக்கும் வியர்வைத் துவாரங்களையும் 72ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் நாடி  நரம்புகளையும் இட்டுக் கட்டப் பட்டிருக்கும் with so many inner and outer parts with wonder of organs உடல் பற்றி இராமலிங்கர் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோமே என்கிறார் திருமூலர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.... திருமூலர்.


உனக்குள் உறையும் உயிரே கடவுள் என்கிறார் திருமூலர்.உடலே கோயில் என்பதையும் காண்க‌



வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம் உடலின் 50% நோய் தீர்க்கும் மருந்துகள் அவை பற்றி நிறைய பள்ளிகளில் கல்லூரிகளில் அடியேன் உரையாற்றியதுண்டு பல்வேறு நிகழ்வுகளில் அவை இங்கு மிகையாகும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.










No comments:

Post a Comment