Wednesday, February 14, 2024

இல்லற இணை ஏற்பு விழா வாழ்த்து

                              இல்லற இணை ஏற்பு விழா வாழ்த்து

                                                     தாரமங்களம்

          22.02.2024  வியாழன் நேரம்: காலை 9.00 மணிமுதல் ‍ 10.00 மணிக்குள்

                      பொன்னுசாமி முதலியார் திருமண மண்டபம்


மணமகள்: பொறி:கி.நன்னிலா,B.E,       மணமகன்: பொறி:B.அர்னேஷ்,B.E,.

                                                  


          எஸ்.எஸ். பெருமாள் மாரியம்மா தம்பதியின் பெண்ணிலா

           உனக்கு பேரறிஞர் அண்ணா பேர் சூட்டினார் "பூங்கோதை"


          பூங்கோதை கிருஷ்ணராஜ் தம்பதி உங்களின் பொன்னிலாவுக்கு

                                  நான் பேர் சூட்டினேன் "நன்னிலா" ,

    என்னதான் விண்மீன் தொகுதியில் விந்தை கோடி விளையினும் "நிலா"

     புவியின் பிள்ளை நிதமும் வெள்ளை கடல் கொள்ளத் துடிக்கும் கிள்ளை


      நன்னிலா அர்னேஷ் உடன் இணையும் இந்த ஓர் அற்புதத் திருநாளில்

     ஒரு குடும்பத்து உறவாய் நாங்களும் இணைந்திருக்கிறோம் உங்களுடன்

       உங்கள் குடும்பம் எங்கள் குடும்பத்தின் நிகழ்வுகளில் உடன் நின்றது

     சகோதர உறவுக்கு உங்கள் பெருமாளும் அர்ச்சுனனும் முன் மாதிரி


      நன்னிலா அர்னேஷ் இணையர் இல்லற வாழ்வில் முன் மாதிரியாய்

        என்றும் குலம் விளங்க குடி பேர் விளங்க குடும்ப சீர் விளங்க‌

      நற்குல விளக்குகளாய் நற்பேர் ஈட்டி சீரிய வழிகாட்டிகளாய் கை

      காட்டட்டும், கை கொட்டட்டும், கை தட்டட்டும் மெய் இணைய‌


      பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ என்றும்

      நாங்களும் எங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்த்துகிறோம்.


                                            என்றும் அன்புடன்

                                          கவிஞர் தணிகை

                                சண்முகவடிவு தணிகாசலம்

                                    த.க.ரா.சு. மணியம்.B.E.,

                         


No comments:

Post a Comment