Saturday, February 11, 2023

தூமகேது: கவிஞர் தணிகை

 தூமகேது: கவிஞர் தணிகை



பொன்னியின் செல்வன் கதையைப் படித்த எவருமே இந்த தூம கேது வால் நட்சத்திரம் பற்றிய நிகழ்வுச் செறிவை நினைவு படுத்திக் கொள்ள முடியும்.



வால் நட்சத்திரம்

எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு அழிவு அது பேரழிவாகவோ பெரும் விளைவாகவோ அல்லது பெரு மரணங்களாகவோ அல்லது பெரும் பேர் பெற்றவர்களின் மரணங்களாகவோ...


இல்லை இல்லை இவை மூட நம்பிக்கை என்பாரும் உளர்.


ஆனாலும் பச்சை நிற ஒளி உமிழ் வால் மீன் ஒன்று 50000 ஆண்டுகளுக்கும் பின் பூமியருகே வந்ததை வந்து செல்வதை தோன்றியதை கடந்த வாரங்களில் செய்திகள் உறுதி படுத்தின. அதை ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், போன்ற மாநிலங்களில் இருந்து தொலை நோக்கி வழியாக விடியல் காலை வடகிழக்கே அல்லது வடமேற்கே துருவ நட்சத்திரம் அருகே காணமுடியும் என்ற செய்தி


ஆனால் என்ன வித முயற்சி செய்த போதும் இங்கிருந்து காணக் கிடைக்கவில்லை.


ஆனால் ஆசியா மைனர் துருக்கி (துருத்தி) சிரியா பூகம்பம்...25000க்கும் அதிகமான உயிர்ச் சேதத்துடன் பூவுலகில் பெரும் அழிவை சந்திக்க அந்த பூகம்பத் தொடர் இந்தியாவிலும் தொடரவிருப்பதாக தொடர்ந்திருப்பதாக செய்திகள் இருக்கின்றன...


No comments:

Post a Comment