Thursday, October 6, 2022

உலகம் விரைவாக‌ அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை

 உலகம் அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை



உலகம் அழிகிறதா? மனித மாண்புகள் குறைகிறதே என படிக்கும் உங்களுக்கு எல்லாம் கனமில்லா ஒரு லேசான சிறு பதிவு செய்ய அவா. அதைப் பற்றி சில நாட்களாகவே எண்ண ஓட்டம்.


கடந்த செவ்வாய் அதாவது 04.010.2022 சூரியனில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வெடிப்பின் மின்காந்தப் புயல் அல்லது அதன் விளைவலைகள் விண்வெளியில் பூமி சார்ந்தவற்றை பாதிக்கவும் கூடும் என்ற ஒரு அறிவியல் செய்தி.... அதை பின்னுக்குத் தள்ளி விட்டது.


ஆனால் அது பற்றி எல்லாம் நான் எழுதவே எண்ணவில்லை

எதற்காக எழுதுகிறீர்? என்ற ஒரு கேள்வியை சந்தித்துள்ளேன்.


செயற்கை கருவூட்டல் வழியே இரட்டை குழந்தை பிறப்பு அதிகம் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் உள்ளன‌

செயற்கை கருவூட்டல் அறிவியியலில் ஒரு விந்தையான மிக்க இலாபமுடைய வியாபாரம்

ஏன் செயற்கை பிரசவம் கூட....


எல்.ஜி.பி.டி( LGBT) ஓரின சேர்க்கை திருமண நிகழ்வுகளுக்கு நிறைய நாடுகளில் சட்டமும் நீதியும் அங்கீகாரம் அனுமதி அளித்து அதற்கான வெளிப்படையான மக்கள் திரள்வு ஆங்காங்கே நடந்தபடி இருக்கின்றன.

ஒரு தாயின் வயிற்றில் பிரசவத்தின் போது வெளிப்பட்ட இரட்டை குழந்தைகள் இரண்டும் இரு வேறு தந்தைகளுடையது என அறிவியிலில் டி.என்.ஏ D.N.A மூலக்கூறு இயல் ஆவணப் படுத்த அறிவியல் முன்னேறி இருக்க அந்த  தாயும் மகிழ்வுடன் ஒரே பெற்றவரே அதை வளர்க்க சம்மதித்திருக்கிறார் என கூறுகிறார்

பெற்றோர் என்றால் தமிழில் தாய், தந்தை என்றே பொருள். ஆனால் ஆங்கிலத்தில் "சிங்கிள் பேரன்ட்" SINGLE PARENT என்ற ஒரு சொற்றொடர் பிரபலமாகி விட்டது.


இன்ஸ்டன்ட் லிவிங் INSTANT LIVING என்ற ஆங்கில வார்த்தை அதை விட பிரபலம்.லிவிங் டுகெதர் LIVING TOGETHER என்ற வார்த்தையை இது வேகமாக கடந்து பிரபலமடைந்து வருகிறது. ஆக  பொறுப்புகளை ஏற்கும் மனப்பக்குவம் குறைந்து வருகிற தலைமுறையை புவி சந்தித்து வருகிறது. ஒத்துப் போகா எண்ணங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டு முந்திச் செல்ல முயல்கின்றன.


அறிவியல் மிகா காலத்தில் மருத்துவ செறிவின்மை காரணமாக இறப்புகள் நிறைய நிகழ்ந்தன என்பது உண்மைதான்...

ஆனால் இரசாயன கலப்பில்லா உணவு கிடைத்தது. முறையாக வாழ்ந்த மனிதர் நெடுங்காலம் வாழ்ந்தனர்.

இயற்கையை மனிதம் அதிகம் நேசித்தது.


இரவு பகல் பாகுபாட்டில் இரண்டறக் கலந்திருந்தது.


24 மணி சுழற்சி, இரவையும் பகலாக்கும் தற்கால வளர்ச்சி...


என்னதான் காமத்தேடல் வேட்டைகள் இரைகள் இருந்த போதும் தந்தை எவர் என்ற அடையாளம் இயற்கையோடு தொடர்புடையதாகவே இருந்தது பெண் ஆண் உறவு ஒன்றுக்கொன்று தேவை என்றுதான் உலகம் மனிதம் உயிர்கள் இருந்தன....


அடிப்படை தொலைந்து வருகிறது... 


ஆனாலும் நேற்று சென்ற நள்ளிரவிலும் நல்ல மழை ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம் ( நாலு படி அளவு ) அல்லது எங்கள் உரல் கல் குழி எல்லாம் நிரம்பி வழியுமளவு நல்ல மழை பெய்துள்ளது நேற்று கூட கிராமம் சார்ந்த மனிதர் மழையைக் காணோம் என்று சொன்ன போது... இயற்கை அது அப்படியேதான் ...நிலம், நீர்,நெருப்பு, காற்று , ஆகாயம் யாவும்...


மனித குல வரலாறில் பெண் வழிச் சமுதாயமே முன்னர் தோன்றியதாக வரலாறு சொல்கிறது.

அழியும் போது சுழற்சி முறையில்  அதே போல வந்து விடுமோ என்னவோ?


தம் வீட்டு சுவர், புல் பூண்டை விட மற்ற உயிர்கள் மனித உயிர் உட்பட யாவுமே தாழ்வே, அவை பற்றி கவலை கொள்ள ஏதுமில்லை என்ற போக்கு, தமது எல்லையைக் காத்துக் கொண்டு பொது இடங்களை ஆக்ரமிக்கும் போக்கு அவற்றை அழிக்கும்  அதன் ஆர்வம்...சுருக்கமாகச் சொன்னால் சுயநலம் மற்றும் பொதுநலத்துடன் இயையா போக்கு



மொத்தத்தில் நோபெல் இன்னும் இன்றும் வழங்கப்பட்டிருக்கும் காலக் கட்டத்தில் குடும்பம் என்ற அமைப்பில் இருந்து மனிதம் வெளியேறி வருவதை கட்டுகள் வெட்டி எறியப் படுவதை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது...


வட்டம் நல்லதாக இருந்த போதும் அதை விட்டு வெளியேறித் துடித்து வரும் இன்றைய தலைமுறை எதைத் தேடி என்ன செய்யப் போகிறது என்று தெரியாமல் தமது விதைகளை விதைப்பது அவசியம் என்ற நோக்கம் ஏதும் ,(எல்லாம் ) இல்லாமல் பயணம் செல்ல ஆரம்பித்து விட்டது. அதற்கேற்ற படியான அரசியல், ஆட்சி, கட்சி,விலைவாசி, பொருளாதாரம் இப்படி எல்லாத் துறைகளுமே ....


பொய்களை நம்பும் போக்கு...மெய்களை விட்டுத் தள்ளும் போக்கும்


சொர்க்கம் என்பது மாயை, பொய் பிம்பம் என்று சொன்ன விவேகானந்தரும், கவலையற்றிருத்தலே முக்தி கவலைப்படுதலே நரகம் என்ற பாரதியின் தத்துவங்கள்  பிழையாகாது. ஆனால் இவை தவறாக பொருள் கொள்ளுமளவு இவர்கள் அதைப் பற்றி படித்து அறிந்தவர்களாகவுமில்லை...புதுமைப் பித்தன், மகாத்மா,கலாம், தெரஸா  இப்படி இவர் போல எதையும் செய்து விடவும் முடியாது என்பதை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்கிறேன்.


என்னால் இந்தப் பதிவு எதற்கு என்று கேள்விகள் எனக்குள்ளேயே...இருப்பினும் கால்தடத்தை பதிக்கிறேன். காலத்தைப் பதிவு செய்துள்ளேன் என் சிறு நகக் கீறலாக...


எந்த துறையிலுமே மிக சிறப்பான சாதனை புரிந்ததாக தெரியவில்லை...ஆனால் அவற்றை எல்லாம் தொட்டிருக்கிறேன் என்ற சிறு நிம்மதி, ஒரு தொடு புரிதல்,  எனக்குள் இருக்கிறது, இலக்கியம், அரசியல், ஆன்மீகம்(தியானம்) , குடும்பம், பொருளாதாரம், அறிவியல், அன்றாட வாழ்க்கை , சேவை அதன் பொறுப்புகள் இப்படி...

வணக்கங்களும் நன்றிகளும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment