Thursday, October 20, 2022

ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை

 ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை



தான், நான், கர்வம், ஆணவம், தலைக்கனம் இப்படி சில வேண்டாத  வார்த்தைகள் சில நேரம் ஒவ்வொரு நல்லவரிடமும் கூட. பல நேரம் நிறைய தராதரம் இல்லா மனிதரிடமும், எல்லா நேரமும் மதம் கொண்டு அலைவாரிடமும் திரிவாரிடமும். 


காரணம், பொருள் இன்றி நிற்கும் மேகம் மோதிக் கொள்கிறது அடேங்கப்பா எவ்வளவு பெரும் சக்தி, பொழிகிறது, தீப் பற்றுகிறது, இடி மின்னலாய் புவி நோக்கி இறங்குகிறது இடை சிக்கும் எந்த பருப்பொருளும், உயிரானாலும் தீய்ந்து போய் சிதைந்து போய், உருக்குலைந்து போக வேண்டியதுதான்... கோப மழை, புயல் , எரிமலை, நிலநடுக்கம்,இப்படி எண்ணிறந்த இயக்கங்கள் நிலம், நீர் நெருப்பு, காற்று ஆகாயம் சார்ந்து... இவை எல்லாம் பார்த்தும் இந்த மனிதம் தமை பெரும் சக்தியாய் எண்ணுவதில் நிறைய கேள்விகள்...விவேகானந்தா கூட ஒரு இடத்தில் இயற்கையை வெல்லும் ஆற்றல் மனிதர்க்குண்டு என்பார் ஆனால் அது எது வரை எந்த எல்லை வரை என்பதுதான் கேள்வி...


கண்ணால் காண முடியும் சிற்றுயிர்கள் அதன் இயக்கம், பசி, இனப்பெருக்கம்,ஏன் கண்ணால் காணமுடியாமலும்...


உணர்தல் ஒன்றுதான்...


மற்றபடி எல்லாவற்றையும் கடவுளாக பார்க்கும் பார்வை,கடவுள் இணையற்றவர், உனைப் போல் பிறரையும் நேசி, பிற உயிர்களையும் நேசி, உன் வினை உனைப் பற்றும், ஊழ் வினை, மரணம்,மரணமிலாப் பெரு வாழ்வு, மரணத்துக்கும் பின் உயிர் உலாவல்,இயற்கையை அழிக்காதே...இப்படி உயிர்களுக்கான தலையாய உயிரான மனிதத்துக்கு தேவையான தத்துவங்கள்....


அவை யாவுமே அவரவர் தனிப்பட்டு எண்ணிக் கொள்ள... தனியுரிமை,சுதந்திரம் தலையீடு, பொது இடங்கள்...இப்படி பாகுபடுத்தி வகைப்படுத்திக் கொள்ள வேண்டியது வளர்ச்சிதான்...மானசீகமானவை இதில் நிறைய...


மனிதம் வணங்கக் கற்றுக் கொண்டது...சிரிக்கிறது, சிந்திக்கிறது, அது நிறைய உயிரிகளிடம் இல்லை...


மற்றபடி இங்கே வணங்குதலுக்குண்டானவை யாவுமே குறியீடுதான், அடையாளம் தான், கடவுள் எனச் சொல்லும்  ஒரு வார்த்தை நமது பெயர்களைப் போல்தான்... ஆனால் அந்தப் பெயர் மட்டுமே நாம் அல்ல என்பது போல...அந்தப் பெயர் ஒன்றே அதான் ஆழம், அகலம், உயரம், யாவுமானவற்றை எல்லாம் விளக்கி விடமுடியாது விளக்கப் படுவதுமில்லை... யாவுமே வாழ்வில் வளமாக்கிக் கொள்ள வேண்டியது...


இது போல நிறைய விடைக்குள் கொண்டு வர முடியா நிறைய கேள்விகள் நிறைய நிறைய உண்டு...இந்தப் புதிர்கள் இந்தக் காலம் வரை விடுவிக்கப் படாமல்தான் போய்க் கொண்டு இருக்கிறது...நாமும் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்...


இல்லை என்ற கருத்தும் உலக மக்கள் தொகையில் அதிகம் உள்ளாரிடம் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன‌


சந்திப்போம், சிந்திப்போம்!

சேர்ந்து சிந்திப்பது பெரியதுதான், தனிப்பட்ட தேடல் சிறு பறவை விண்ணை வலம் வர ஆசைப்படுவது போன்றதுதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment