Saturday, June 18, 2022

பாஷா: கவிஞர் தணிகை

 பாஷா: கவிஞர் தணிகை

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

என்ற அந்த பாஷா பற்றியது அல்ல இது...

ஆனாலும் அது போல இந்த பாஷாவுக்கும் நிறைய ப்ளாஸ்பேக் எல்லாம் உண்டு

எனவே அதை வைத்தே கிண்டலும் கேலியுமாக அடிக்கடி பேசிக் கொள்வோம்...



 கல்லூரி பணிக்காலத்தில் மற்றொரு நண்பர் அல்லது தோழர் பாஷா.பாஷா என்றால் சக்கரவர்த்தி...இந்த பாஷாவின் முழுப் பெயர் மறந்து விட்டது. இப்படியே அழைத்து விளித்து கூப்பிட்டு பழக்கமாகி விட்டது.முழுப்பெயரைக் கூட கேட்டுவிட்டு இந்தப் பதிவுக்குள் போகலாமா என்ற எண்ணம் பாவம் அவர் தூக்கத்தை நாம் ஏன் கலைக்க வேண்டும் என விட்டு விட்டேன். எப்போதும் எனது அழைப்புக்கு அது எந்த நேரமானாலும் பொறுப்பாக பதில் அளிப்பவர் அது செல்பேசியானாலும் நேரிடையானாலும்.


  எனது 5 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாஷா என்றிருந்தார், அவருக்கும் எனக்கும் எந்தவித பிடிப்பும் இல்லை ஏன் எனில் அவர் அப்படித்தான் எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். அவரது மகன் கூட ஏதோ காதல் தோல்வியில் பல்லாண்டுகளுக்கு முன்பு காலமாகி இருந்ததை கேள்விப்பட்டேன். ஆனால் இந்த பாஷா அப்படி இல்லை எல்லா கோணங்களிலும் பயணிப்பவர்.எல்லோருடனும் கலந்து பழகுபவர் தம்மால் ஆன நன்மையை செய்ய நினைப்பவர்,மேலும் எல்லோருடனும் ஒரு உரிமையும் எடுத்துக் கொள்பவர் அவர்களுக்கு தம்மால் ஆன உதவியும் செய்ய நினைப்பவர் அதற்காக சிந்திப்பவர்.அவருடைய மனத்தாங்கலை குறை நிறைகளை என்னுடன் எப்போதும் மனந்திறந்து வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்.


இவரை அவன் இவன் என்று நான் அழைக்குமளவு எனக்கு நெருக்கம். எனது தம்பி (போன்றவர்)

இவருக்கு மதப் பிடிப்பு எல்லாம் அறவே இல்லை என்பதை எங்கள் அறிமுக சந்திப்பிலேயே சொல்லி விட்டார். அல்லாஹு அக்பர், மாஷா அல்லா, இன்ஸா அல்லா என்றால் என்ன பாஷா என்ற விளையாட்டாக கேட்ட‌போதும் (ஏன் எனில் என்னிடமே குரான் தர்ஜமா உள்ளது ஒரு புறம் அரபி, மறு புறம் தமிழ் மொழிபெயர்ப்புடன், அதை நான் வாங்க நிறைய பட்டிருக்கிறேன் அதெல்லாம் வேறு) இவரது வாழ்க்கைத் துணைவியாரைக் கேட்டுச் சொல்லுமளவுதான் இவருக்கு கடவுள் பிடிப்பு. ஆனால் இயற்கைக்கு மாறு செய்யாத உள்ளம். மேலும் இவரைப் பற்றி நான் ஏன் பதிவு செய்ய அவசியம் என்றால் ஏறத்தாழ 80 சதவீதம் இறப்பின் விளிம்பு வரை கோவிட் 19ன் போது பயணம் சென்று வந்தவர். அப்போதும் அங்கிருந்தோரை உற்சாகமாகத் தேற்றி தானும் தேறி வந்து விட்டவர். இப்போதும் கழுத்தில் பெல்ட் போட வேண்டிய இன்னும் என்னன்னவோ உடல் சார்ந்த பிரச்சனை எல்லாம் நிறைய‌ உண்டு இருந்த போதும் மிகவும் துணிச்சலாக வாழ்க்கையை எதிர் கொண்டு வாழ்ந்து வருபவர். 


இரண்டு பெண்குழந்தைகள் இவருக்கு. 

இவரும் நானும் கிறித்தவ, முகமதிய, இந்து மத நண்பர்கள் 5 பேருக்கு மிகாமல் ஒரு இந்திய மத ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பயணம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டோம். ஆனால் திட்டமிட்டதோடு சரி....பைக் பிரியர். இவரது இரு சக்கர வாகன பயணத்தை பெரும்பாலும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு நான் கடிந்து கொண்டதுண்டு.



பாகிஸ்தான் ஏன் இன்னும் கிரே பட்டியலில் பிரான்ஸின் எப்.ஏ.டி.எப் வைத்துள்ளது?

இந்தியா அமைதியாக வாழும் சூழலில் உள்ள நாடுகளின் பட்டியலில் ஏன் இன்னும் 135 ஆம் இடத்தில் இருகிறது?

 எலன் மாஸ்க், பில்கேட்ஸ் ISRO, NASA, ASTRONOMY,SKY LAB இப்படி எந்தக் கருப்பொருளில் வேண்டுமானால் இவருடன் உரையாடலாம். அவ்வளவு சமூக அக்கறை. தெரிந்தவரை பகிர்ந்து கொள்வார். மொத்தத்தில் பாஷா நல்லவர்.


மனிதர்கள் தாம் முக்கியம் உயிர்கள் தாம் முக்கியம்

மதங்கள் அல்ல, சாதிப் பிரிவினைகள் அல்ல நிறவேற்றுமை அல்ல வறுமை ஒழிப்பு மனித மேம்பாடு அவசியம் அவற்றுக்கு மதங்கள் உதவட்டும்...எனக்கும் கூட  மாற்று மதக்காரர்களுடன் பழக பேச மிகவும் ஆசை உண்டு சிறு வயது முதலே நினைவு தெரிந்தது முதலே ஏன் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே  குழந்தை திரேசா என்ற பள்ளி ஆசிரியையுடன் நட்பு கொண்டதில் இருந்தே சொல்லலாம்...

 அவர்கள் வாழ்வின் முறை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் உண்டு. எனவேதான் மதங்களைக் கடந்தவன் என்ற முறையில் பைபிள், குரான், கீதை எல்லாம் நூலாக வைத்துக் கொண்டு அதை துய்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


நன்றி பாஷா!

நீ சொன்ன ஆப்பென் APPEN செயலி சென்று என்னால் பணி புரியவே முடியவே இல்லை...உள்ளே நுழைந்ததோடு சரி.ஒன்று அதற்கான ஓய்வு அல்லது மனநிலை இல்லை,இரண்டு அது அவ்வளவு எளிதாகவும் இல்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment