Monday, June 13, 2022

காந்திய தத்துவத்திற்கு வேளை வந்து விட்டது: கவிஞர் தணிகை

 காந்திய தத்துவத்திற்கு வேளை வந்து விட்டது: கவிஞர் தணிகை



சண்டையிட்டாலும் சகோதரரன்றோ என்றார் பாரதி...

அது இப்படி மதச் சண்டை போடுவது பற்றி அல்ல...

சிதம்பரம் கோவில் கணக்கு வழக்கு தமிழக பிரச்சனை ஆனால் உச்ச நீதிமன்ற பிரச்சனை

அதே போல அல்லா பெரியவரா, சிவலிங்கம் பெரிதா, யேசு தேவகுமாரனின் தேவன் பெரியவரா

என்ற கேள்வி எல்லாம் விடுத்து

வறுமை பிணி அகற்ற‌

உலகெலாம் நீர்ப்பஞ்சம் தவிர்க்க‌

நிற வேற்றுமை தவிர்க்க‌

ஆண்டான் அடிமை வேற்றுமை தவிர்க்க‌

பொருளாதார சமன் வளர 

இப்படி ஏராளமான பணிகள் பிணி தீர்க்க மனிதகுலத்திடம் இருக்க...

உலகு உக்ரைன் ரஷியா பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இன்றி

எரிபொருள் விலை ஏற்றம் எல்லா பொருட்களின் விலையேற்றம் பற்றி எல்லாம் சிந்தையை வைக்காமல் இருக்கும் நிலையில் வீடுகள் இடிப்பு, உயிர்கள் பறிப்பு இப்படியே போனால் உலகு என்ன ஆவது?



சமரசம்: சமன் செய்து கொள்ளும் பாங்கு

சமயோசிதம்: உரிய நேரத்தில் புத்தி கூர்மையுடன் செயல்படுதல்

சாத்வீகம் என்றால் வன்முறையற்ற போராட்ட குணம் பற்றல்


இதைப் பற்றி எல்லாம் காந்தியம் , வள்ளலார் வழிகள், வள்ளுவம் எல்லாம் சொல்லியதே... ஆனால் இவை பற்றி எல்லாம் எவரும் பேசுவதாகக் காணோம்.எல்லாருக்கும் ஒரு பயம் எங்கே இது பற்றி நாம் எழுதினால் பேசினால் நமக்கு வம்பு வழக்கு வந்து விடுமோ என்று...


இந்தியக் குடிமக்களுக்கு என்று ஒரு குறைந்த பட்ச ஒழுக்க வரை முறைகள் தேவைதான். அது சட்டமா நீதியா எப்படி இருந்தாலும் அதை அனைவரும் சமமாக கடைப்பிடிக்கும் பாங்கு இருக்கிறதா என்பதுதான் அதை அமல்படுத்துவதுதான் சிறந்த ஆளுமையாக இருக்க முடியும்.


கிறித்தவத்துக்கும், முகமதியத்துக்கும் உலகெங்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது உரிய நேரத்தில் அவர்களை எல்லாம் பிணைத்து எதிரொலிக்கிறது பிரதிபலிக்கிறது அது தெரஸா வந்த வழியில் சமூகப் பணியாய் சமுதாயப் பிணி தீர்க்க பயன்படுவதாக இருக்கும் வரை மனித குலத்திற்கு நல்லது.

இறை இணையற்றவர் என்ற கருத்து எல்லா மதங்களிலுமே உள்ளதுதான், ஏன் கடவுள் மறுப்பு சிந்தனை என்பதும் அவர்களே உலக மக்கள் தொகையில் அதிகம் என்றும் கூட புள்ளி விவரங்கள் உள்ளன‌


சில மதங்களில் ஒரு சில குருமார்கள் மட்டுமே வந்தனர்.

இந்து மதம்  நிறைய குருமார்களைக் கொண்ட மதம்... இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சித்பவானந்தர், சாந்தானந்தர். சச்சிதானந்தர், அரவிந்தர், ஜெ.கெ, ரஜனிஷ், ஆதிசங்கரர், இராமானுஜர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...மேலும் கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களும் இருக்கின்றனர் மத அடிப்படையில் இருந்து கொண்டே...

எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்பதெற்கெல்லாம் இடமே இல்லை அப்படி நினைத்தால் அது விவேகானந்தர் சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் சிகாகோவில் பேசிய பேச்சிடையே சொல்லிய கிணற்றுத் தவளை கதை தரும் விடையே அதற்கான பொருத்தமான பதிலாகும்.



எனவே ..ரஹ்மான் சிவலிங்கத்தை அவமதித்து பொது ஊடகத்தில் பேசியதாகவும், நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் எதிர்வினையாற்றியதாகவும் அதற்கான பாதிப்புகள் உலகெலாம் பரவி வருவதாகவும் இருக்கும் செய்திகள் அதனால் ஏற்படும் வேதனைகள் உலகத்தின் மனிதகுலத்திற்கு நல்லதல்ல....இதில் யாரை தண்டிக்க வேண்டும் யாரைக் கண்டிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை...யார் தவறு செய்திருந்தாலும் தவறு தவறுதான் அரசு உரிய பார்வையில் கடமையாற்ற கடன் பட்டிருப்பதுதான்.


பிற உயிர்களை எல்லாம் கூட

 காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் பார்க்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம், என்பதுவும்,

 வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்றதுவும்,

 தனி மனிதர்க்குணவில்லையெனில் ஜகம் அழிந்து போகட்டும்(ஜகத்தை அழித்திடுவோம்: காட்டை அழித்து விளைநிலமாக்குவது அல்லது உலகை அழித்து விடுவதான பார்வை கூட அங்கு அதிகம்தான்....) என்ற பார்வையும் தான் ஆன்மிகத்தின் அருகே மனித குலத்தை இட்டுச் செல்லும்



அல்லாமல்

சகோதரர்களை அழித்து வரும் அச்சுறுத்தி வரும் போராட்டங்கள் எந்தப் பக்கம் என்றாலும் யாவும் நிறுத்தப் பட வேண்டும். கண்ணுக்கு கண், ஊனுக்கு ஊன் என்றால் உலகே சுடுகாடாகிடும் என்ற காந்தியத்தின் வாக்கு நினைவு கொள்ள வேண்டும். காந்தியை தேசப்பிதா என்று சொல்லி விட்டு அதற்கு மாறாக செயல்படுவது பொருந்தாது.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: இது பற்றி உலகின் எல்லா தலைவர்களும், எல்லா மதகுருமார்களும் பேச வேண்டும் மனித குல ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் செயலாற்ற வேண்டும் ( பாடுபட வேண்டிய அளவு பெரிதல்ல ஆனால் செயலாற்ற வேண்டியது என்று அதற்காகவே சொன்னேன்...வறுமை ஒழிப்பே பாடுபட வேண்டியது)

No comments:

Post a Comment