Saturday, April 23, 2022

வீட்டுக்கொருவர்க்கு வேலை ஏற்பாடே போதும் இலவசம் எல்லாம் வேண்டாம்: கவிஞர் தணிகை



வங்கும் சக்தியை அதிகப் படுத்தினால் போதுமே அவர்களே எல்லாம் வாங்கிக் கொள்ள முடியுமே.எப்போதும் பிச்சைக்காரர்களாய் வைத்திருப்பதை விட நிரந்தர வருவாய் உள்ள மனிதர்களே ஒரு நாட்டின் சொத்து.அப்படி ஆக்க வேண்டிய கடமையே அரசின் பொறுப்பு


பொருளாதார மேதை இரகுராம் ராஜன் ஆர்விந்த் சுப்ரமணியம், நோபெல் பரிசு பெற்ற‌ எஸ்தர் டவ்லோ,ஜீன் ட்ரெஜ்,எஸ். நாராயணன் ஆகிய ஐவர் குழு இப்போது தமிழக முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் தந்துள்ளது என்று அறிய அவா! வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் நிலவ, விலைவாசி மேலும் மேலும் எகிறிப் போய்க் கொண்டே இருக்க, மதுவும் குற்றங்களும் பெருக...


மிழகத்திற்கு மத்திய தொகுப்பு நிதிப் பங்கீடு 30% மட்டுமே வரிப் பணத்தில் வருவதாகவும், அதுவே உ.பி, பிஹாருக்கு 210 % செல்வதாகவும் ஊடகத்தில் திறந்த அரங்கில் ஒரு இந்திய நிர்வாகப் பணி (ஓய்வு) தெரிவித்திருக்கிறார் இது அதிகாரப் பூர்வமான செய்திப் பகிர்வு.


இந்நிலையில் தமிழக மாணவர்களை ஏய்த்து வட இந்திய மாணவர்கள் பணி சேர்ந்தபோது தந்த மதிப்பெண்கள் பட்டியல் அனைத்தும் போலி என தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...


மத்திய/மாநில அரசுப் பணி குடும்பத்தில் ஒருவர்க்கு

தனியார் பணி நியமனங்கள் குறைந்த பட்ச ஊதிய வழி வகை

விவசாயம்  மற்றும் அதன் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாயப் பணிகளாக மடை மாற்றம்

கூட்டுறவு பணிகளுக்கான முன்னுரிமை

சிறு தொழில் சுய தொழில் மேலாண்மை ஊக்குவிப்பு

மருத்துவம் கல்வி அனைவர்க்கும் இலவசம் சமம்

போக்குவரத்து யாவும் அரசின் வசம்

இலஞ்ச இலாவண்யமற்ற நேர்மை

அரசு ஒப்பந்தப் பணிகளில் உண்மை, வெளிப்பாட்டுத் தன்மை, நேர்மை , நம்பிக்கை


மது, போதை, புகை ஆகிய தீயவற்றின் பால் மனிதர்க்கும் உயிர்க்கும் உலகுக்கும் ஊறு விளைக்கும் யாவற்றின் மேலும் பெரும் நெருக்கடி உதாரணமாக வாங்க முடியா அளவுக்கு விலை உயர்த்தல்

அத்தியாவசிய உணவுப் பண்டங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைப்பு

இலவசம் யாவற்றையும் நிறுத்தி விட வாய்ப்புகள் உண்டு அதற்காகும் செலவை இல்லாதகற்றி விடலாம். அவரவர்க்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்தி தொழில் ஏற்பாடும், வேலை வாய்ப்பும், நிரந்தர வருவாயும் செய்து கொடுத்தாலே போதும்.

இப்படி எல்லாம் செய்து வரும்போது பூரண மதுவிலக்கையும் கூட கொண்டு வர முடியும், மக்களின் நல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்து குற்றப் பின்னணியில் இருந்து விடுபடச் செய்ய முடியும்.


இது போன்ற முக்கிய நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பே ஆட்சிமன்றத்தை மேலும் உயர்த்தும்.

 தமிழக அரசிடம்  இதை எல்லாம் தெரிவிக்க ஆசைதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



2 comments:

  1. தங்களுடைய ஆலோசனைகள் நிட்சயமாக அரசை நல்ல விதமாக முடிவெடுக்க உதவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. ஏற்புடையது.

      Delete