Wednesday, April 20, 2022

நீல வெளிகளில்: கவிஞர் தணிகை

 நீல வெளிகளில்: கவிஞர் தணிகை













18.04.22 அன்று எங்கள் ஊரில் இலேசான நிலநடுக்கம். சேதம் ஏதுமில்லை.அணையில் 100 அடிக்கும் மேல் இந்த கோடையில் நீர் இருப்பது மகிழத்தக்கது.அது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ...ஏதோ வெடிச்சத்தம் போன்றிருந்ததாகவும் அதன் பின் நிலத்தடியில் பாறைகள் உருண்டு ஓடுவது போலவும் இருந்ததாக ஒரு நண்பரின் பகிர்வு


மற்றொருவரும் ஆம் சுமார் 11.30லிருந்து இரவு 11.40க்குள் இருக்கும் வெடிச்சத்தம் போன்றும் மாட்டு வண்டி ஓடுவது போல கட கட என சத்தம் வந்ததாகவும் வண்டி ஏதாவது வீட்டருகே வந்து நிற்கும் என எதிர்பார்த்ததாகவும் ஒரு குடும்பத் தலைவியின் ஆமோதிப்பும்,


 மற்றொரு இளைஞர் எங்கள் வீட்டு முன் நிறுத்தி இருந்த கார் ஆடியது என்றும் மேற்கூரை அசைந்தது என்றும்  அநேரத்தில் உறங்காமல் விழித்திருந்ததால் பார்த்தோம், உணர்ந்தோம் என்றும் கூறி இருக்கின்றனர்.


இதைப் பற்றி எந்த ஊடகமோ தினசரியோ செய்தியை வெளியிடவில்லை. எனவே இதைப் பதிவு செய்வது அவசியமாகிறது.


19.04.2022 மாலை சுமார் 4 மணி இருக்கலாம் திடீரென அத்திக் கட்டி ஆலங்கட்டியுடன் சிறிதளவு மழை. பெரியவர்களே கூட வியந்து சிறு பிள்ளைகள் போல அதைப் பொறுக்கிக் கொண்டு எடுக்க, சிலர் வாயில் இட்டு மகிழ்ந்தனர்.


தம்மை பெரும் சாதனையாளர்களாகக் கருதிக் கொள்வோரை அல்லது தான் என்ற கர்வம் உள்ளோரை எல்லாம் இந்த மாபெரும் இயற்கையின் முன் சிறிது நேரம் வெட்ட வெளியில், பெரு வெளியில் , மலைமுகட்டில் நிறுத்தினாலே போதும் நாமெல்லாம் ஆழிப்பேரலையில் ஊழித்தாண்டவத்தில் சிறு துகள் ஏன் ஒன்றுமில்லா பிழைகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அப்பேர்ப்பட்ட காற்று, அப்பேர்ப்பட்ட மழை, அப்பேர்பட்ட சுழி, சுழல், அப்பேர்பட்ட கடலும் அலையும் இன்ன பிறவும்.


நீல வெளிதனின் நின்றோடும் புவி, ஏனைய கிரகங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என சொல்லொணோ வேகத்திடையே நின்றாடும் பூமியின் சிற்றுயிர்களாகிய நம்மிடை ஊடகம், தகவல், தொடர்புகள் யாவும் முக்கியமானவையே.

வார்த்தைகள் சிலருக்கு ஆய்தம் பெரியார் போன்றோர் அதை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்

வார்த்தைகள் சிலருக்கு கருவி பேரறிஞர் அண்ணா போன்றோர் அதை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்

here we remembers: Jeevanantham,E.V.K.Sampath, Navalar and others

வார்த்தைகள் சிலருக்கோ வெறும் விளையாட்டு, சிலருக்கோ அவ்வப்போதைய இடவெளியின் இட்டு நிரப்பல்கள்

சிலருக்கோ வெத்து வேட்டு.


ஆனால் உண்மையில் உருவ அடையாளமே தெரியா வள்ளுவப் பெருந்தகைக்கோ தமிழின் தலைமகனுக்கோ பெரும் வடிவம்.வார்த்தை வழி அவர் வாழ்கிறார் என்றுமே...நீல வெளிதனில் உண்மையொளி அவை யாவும். பாரதியின் உருவத்தை நாம் பார்க்கிறோம். ஆனால் வள்ளுவரின் வார்த்தைகளைத்தான் நாம் காணமுடியும். அவரின் உருவம் சிலர் வழி நமக்கு கிடைத்த கனாவும் கற்பனையுமே...


இறைவா!

அமைதியின் கருவியாய் என்னை ஆக்கியருளும்

பகையுள்ள இடத்தில் அன்பையும்

தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும்

பிரிவுள்ள இடத்தில் ஒற்றுமையையும்

பிழையுள்ள இடத்தில் உண்மையையும்

சந்தேகமுள்ள இடத்தில் உறுதியையும்

இருள் உள்ள இடத்தில் ஒளியையும்

கலக்கம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்

நான் விதைப்பேனாக!  

மதர் தெரஸா.




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment