Wednesday, April 13, 2022

தமிழக அரசின் மறுபடியும் வரவேற்கத் தக்க முன்னேற்றப் பாதையில் ஒரு அடி: கவிஞர் தணிகை

 தமிழக அரசின் மறுபடியும் வரவேற்கத் தக்க முன்னேற்றப் பாதையில் ஒரு அடி: கவிஞர் தணிகை



இன்றைய தினசரிகளில்  சில முக்கிய செய்திகள் அவற்றுள் எனக்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியதான செய்தியாக இது பதிவாகி இருக்கிறது.


அது யாதெனில்


முதல்வர், முதன்மைச் செயலர் இன்னபிற முக்கியஸ்தர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இனி ஓட்டுனர் பயிற்சி உரிமம், உரிமம் புதுப்பிப்பு, உரிமம் விலாச‌ மாறுதல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பித்து பெறும் ஏற்பாட்டை ஆரம்பித்துள்ளனர் என்பது...

Vehicle Learners Licence  LLR

Vehicle Licence Renewal

 Address change

இந்தியா இடைத்தரகர்கள் முன்னேற பெருவாய்ப்பு அளிக்கும் நாடாக இருக்கும்போது இது போன்ற திட்டங்களும் அதன் அமலாக்கங்களும் மட்டுமே அரசு மற்றும் மக்கள் ஆகிய இருமுனைகளுக்கு நடுவே இருக்கும் இடைத்தரகு முறையை ஒழிக்கும்.இடைவெளியை குறைக்கும்.


 இலஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக‌ அரசினால் முடிந்ததை செய்து வருவதாகத் தெரிகிறது. அதில் அவர்கள் மூதாதையர், பரம்பரை, சொத்து, ஏற்கெனவே வாழ்ந்த வாழ்வு முறை எல்லாவற்றையும் வைத்து பார்த்துக் கொண்டு சாயம் பூசியபடி பேசுவதை விட நேர்மையாக இப்போதிருந்தாவது ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களே என்று பார்த்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வரவேற்று பாராட்டுதலில் ஈடுபடவேண்டும். அதிலும் இதுபோன்ற திட்டங்களில் பொறுமையாக அவரவர் வரிசையில் அவரவர் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் பணி நடக்கும் என ஒழுங்கமைவுடன் அவசரகதியின்றி அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அது நல்லாட்சியில் நல்ல விளைவுகள் மலர இடம் கொடுக்கும்.


இடைத்தரகர்கள் எந்தவித தகுதியுமின்றி 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பள்ளி இறுதி கூட தாண்டாமல் இருப்போர் மற்றும் இன்ன பிற சிலர் தொழில் கிடைக்கவில்லையே என்று இந்த தொழிலில் ஈடுபட்டு இதிலும் சாதி, இனம் ஆகிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் கார் பங்களா என பெரிய வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.


அரசை அணுகி சாதாரண மனிதர் யாவருமே தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ள பெரும் தடையாகி விடுகிறார்கள். எனவே இது போன்ற தருணத்தில் இந்தக் கடுமையான காலக் கட்டத்தில் இது போன்ற முயற்சிகள் வரவேற்கத் தக்கது.


சொத்துவரி ஏற்றம், மற்ற நிகழ்வுகள், பற்றி எல்லாம் இன்னொரு நாள் பேசுவோம், குடி நீர் கட்டணம்: மாதமொன்றுக்கு ரூ.220, நெட் பில்:ரூ. சுமார் 600,வீட்டு வரி ஏற்றம், அத்துடன் 2 மாதத்துக்கு 100 யூனிட் வரை நுகர்வோர் மின்சாரக் கட்டணமே இல்லாமல் இருந்து வருவது கவனிக்கத் தக்கதுதான்.


மேலும் நானறிந்த ஒரு குடும்பம் அரசுப் பணியில் இருந்தபடியே இன்னும் இலவச அரிசி சலுகையைப் பெற்று வருகிறது, அதிலும் அவர்கள்தாம் முன்னதாக அந்த சலுகையை அனுபவித்து வருவதும் தெரிகிறது.


மத்திய அரசுப் பணிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து 200க்கும் மேற்பட்ட வட நாட்டார் தமிழகத்தில் பணிபெற்றிருப்பது அதிலும்  அரசு நடத்தி வைத்த தமிழ் தேர்வில் எல்லா மதிப்பெண்களும் அவர்கள் பெற்று தேறி இருப்பது என நிறைய குழப்பங்கள்


எல்லா அரசுப் பணிகளையும் கணக்கிட்டு, மாநில, மத்திய, மேல் இருந்து அடி மட்டம் வரை, தமிழகத்தில் எத்தனை குடும்பங்கள் எனக் கணக்கிட்டு வீட்டுக்கு அல்லது குடும்பத்துக்கு ஒருவர்க்கு மட்டுமே அரசு பணி அதிலும் அவரவர் தகுதிக்கேற்ப வாழ்வு உத்தரவாத அடிப்படைச் சம்பளத்துடன் என்ற ஒரு யுக்தியைக் கொண்டு வர முயற்சித்தால் எல்லா இலவச செலவுகளையும் குறைக்கலாம் விலையில்லா பொருட்களையும் கொடுக்க வேண்டிய அரசின் சுமைகளும் குறையும்....


இலவசக் கட்டணத்தை பெண்களுக்கு கொடுத்திருப்பதற்கு பதிலாக கட்டணத்தை அரசுப் பேருந்துகளில் ஏற்றாதிருந்தாலே கூட நல்லதுதான்...எல்லாம் அரசியல்...அப்பா எல்லாம் அரசியல்.


வீயாபாரிகள் வசம் இருக்கும் உலகை கொஞ்சம் மீட்க வேண்டும்

ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் தங்கம், இரும்பு போன்றவற்றிற்கு ஏன் மளிகை எண்ணெய் பொருட்களுக்கும் கூட‌ உக்ரைன், ரஷியா போரைக் காட்டி பன்மடங்கு விலையேற்றி பலநூறு சதவீதம் இலாபம் சம்பாதிக்கின்றனர். வேறு வழியில்லாமல் வாங்கும் நுகர்வோர் கவனிக்க வேண்டும் அவற்றை அவசியம் அப்போதே வாங்கத் தான் வேண்டுமா என்று?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment