Saturday, March 26, 2022

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...:‍ கவிஞர் தணிகை

 சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...:‍ கவிஞர் தணிகை



அன்றாடம் செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.

இலஞ்சம் பெறும் போது அரசு ஊழியர்கள் பிடிபடுவதாக...


ஆனாலும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது.


நில அளவை செய்ய, பதிவு செய்ய, பட்டா வழங்க, சான்றிதழ் வழங்க‌

இப்படியாக...பெரும்பாலான அல்லது அனைத்து அரசுத் துறை யாவற்றிலுமே...

முயற்சிக்கிறார்கள் தடுக்க குறை சொல்ல முடியவில்லை

என்றாலும் அதையும் மீறிச் சென்றபடியே இருக்கின்றன...


தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் காணும் நேரம்

இங்கிருக்கும் உற்பத்தியாளர் சங்க பொறுப்பாளர் ஒருவர்

தொலைக்காட்சியில் இங்குள்ள உள் மாநிலத்தில் தொழில் சார்ந்த பிரிவுகளில் கவனம் வைக்க வேண்டுமே

என்று கவலைப்படுகிறார்.



பால் விலை, போக்குவரத்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சூசக தகவல்களை

துறை சார்ந்த அமைச்சர் விளக்குகிறார்.


சமையல் எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றப் பட்டிருக்கும் நிலையில்

விலைவாசி ஏறுவது இயல்புதானே அதைக் குறிவைத்து 

28,29ல் தொழிற்சங்கங்கள் ஒரு புறம் போராட அதை அரசு ஆதரிப்பதாக ஒருபுறம் அறிக்கையும்

மறுபுறம் அத்தியாவசிய பண்டம் பணி சார்ந்த நடைமுறைகளை நடத்தியாக வேண்டிய 

கட்டாயத்தில் இருப்பதாக அமைச்சர்கள் பணி தொடர வேண்டும் என்றும்

நிர்பந்திக்கிறார்கள்...


எல்லாவற்றிலுமே ஒரு இரட்டை நிலை இருப்பதைக் காண முடிகிறது.

இல்லை நமக்குத் தான் ஒன்றும் தெரியவில்லையா?


தம்மம்பட்டி வங்கி ஒன்றில் ஒரு மனிதரின் கணக்கில் இருந்த போட்டிருந்த சுமார் 3.5 இலட்சம் டிபாசிட்/இருப்பு/வைப்புத்

தொகையை அவரைக் கேட்காமலேயே வங்கி பங்கு சந்தையில் போட்டுவிட்டதாகவும் வருடாந்திர பங்கை

செலுத்தாமல் அந்த தொகை 3ல் ஒரு பங்காகிவிட்டதாகவும் அதையும் திருப்பித் தர முடியாது என்பதை

ஏற்றுக் கொள்ள முடியா ஒரு வாடிக்கையாளர் போராடிப் பார்த்து விட்டு வங்கியிலேயே தம் கையை தாமே

அறுத்துக் கொண்டு மருத்துவ மனையில் 108 மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக செய்தி


ஒருவரது கணக்கில் இருக்கும் பணத்தை எந்தக் காரணம் முன்னிட்டும் அவரின் அனுமதி இன்றி எப்படி இந்த வங்கிகள் எடுக்கலாம்? அதை எல்லாம் தடுக்க சட்டம் இல்லையா? அரசு கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே செய்ய முடியுமா? அதையும் பாமரர் சார்ந்து நீதி சார்ந்து செய்யவல்லதா?




சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி...என்ற பாரதியின் பாடல் வரிகள் ஏனோ நினைவில்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment