Wednesday, March 30, 2022

துல்ஹர் சல்மானின் சல்யூட்: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 துல்ஹர் சல்மானின் சல்யூட்: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை



சில தினங்களுக்கும் முன் வந்த 2.பத்திரிகை செய்திகள்:


 1.சாத்தான் குளம் சாட்சியம்: ஆம் அந்த 2 பேரையும் சிறைக்குள் கொண்டு வரும்போதே மிகவும் அடிபட்ட காயங்களுடனேயே இருந்தனர்.


2.ஒரு திருட்டு கேஸில் சந்தேகப்பட்டு பிடிபட்ட ஒரு நபரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிக்க மற்ற இருவரின் துணையுடன் பின்னால் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு ஒரு காவலர் தமது வண்டியில் குற்றவாளியை மோட்டர் சைக்கிளின் பின்னால் அமர வைத்து கொண்டு செல்லும் போது மோட்டார் சைக்கிளை ஓட்ட விடாமல் கழுத்தை கை கொண்டு இறுக்கி, வண்டி ஒட்ட விடாமல் செய்து, ஒரு பெரிய கல்லை எடுத்து காவலரை தலையில் தாக்கி விட்டு தனது பைக்கை ஓட்டி வந்தவரையும் மிரட்டி எடுத்துக் கொண்டு ஓட்டிச் செல்ல, காவலரின் காயம் இரத்தம் நிற்காத நிலையில் அந்த பொதுமக்களில் உதவி செய்ய வந்த இருவரும் காவலரை மருத்துவ மனையில் சேர்த்துவதே முக்கியபணி என நினைத்து சேர்க்க...குற்றவாளி மாயம்...


இரண்டுமே இரண்டு விளிம்பு நிலை செய்திகள் சட்டம் ஒழுங்கு காவல் துறை பற்றி.


சல்யூட்: மலையாளம்.


சிந்திக்க வைக்கும் நல்ல படம்.


20 கோடி செலவில் வேஃபேரர் படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான் இந்த படத்தை சல்யூட் என்று போலீஸ் ஸ்டோரியாக்கி தந்திருக்கிறார். தயாரித்து முக்கிய பிரதான அர்விந்த் கருணாகரன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தும் வார்த்திருக்கிறார். நல்ல முயற்சி. சுமார் 143 நிமிடத் திரைப்படம்.


மார்ச் 17அல்லது 22 என்ற தேதியில் 2022ல் வந்திருந்த படம் சிந்திக்க வைத்தது. இது ஓடிடியில் வருவதா அல்லது தியேட்டரில் ரிலீஸ் செய்யவா என தடுமாறியப் படங்களுள் ஒன்று.


நமக்கும் நமது முன் காலத்திய அனுபவங்களில் நிறைய போலீஸ் ஸ்டோரி உண்மையாகவே கிடைத்திருக்கிறது. நிறைய போலீஸ் ஸ்டோரிகள் எல்லா மொழிப் படங்களிலும் உலகளாவிய அளவில் எப்போதுமே உலவி வருபவைதான்.


அதிலிருந்து இந்தப் படம் எப்படி விலகி நிற்கிறது எனில்:


1. இதில் வரும் சந்திர பாண்டியன் பிள்ளை போன்ற குற்றவாளிகள் எப்படி ஒரு சாட்சியமோ, ஆதாரமோ இல்லாமல் தங்கள் குற்றங்களைச் செய்து கொண்டு போகிறார்கள் எவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் என்பதும்


2.குற்றங்கள் நடைபெற பொதுமக்களின் பலஹீனங்களே அவர்களின் குணாம்சத்தில் உள்ள குறைபாடுகளே பொதுவாக குற்றவாளிகள் இவர்களை ஏமாற்ற அல்லது பயன்படுத்திக் கொண்டு தப்பித்துச் செல்ல காரணமாகி இருக்கின்றன என்பதும் பொதுமக்களே அதற்கு இடம் கொடுக்கிறார்கள் என்பதும்


3. காவல் துறை இப்படி தப்பித்துச் சென்று கொண்டே இருப்பார் பற்றி எந்த விவரமும் கிடைக்காத போது சமூகம் ஏன் அந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்ற நிர்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் போது ஏமாளிகளாக சிக்கிக் கொள்ளும் சிறு சிறு நபர்களை அல்லது விட்டில் பூச்சிகளை அதற்கு ஏன் பயன் படுத்த வேண்டி நேரிடுகிறது என்பதையும்


4. மேலும் குற்றவாளிகள் காவல்துறை நெருங்கி விடும் போது எப்படி தப்பிச் செல்ல நேரிடுகையில் இயல்பாகவே விபத்தாலோ, அல்லது இயற்கையாகவே இறந்து விட நேரிட அதற்கு எப்படி மாற்று செய்ய வேண்டி இவர்களும் அந்த வழக்குகளில் இருந்து பொய் விவரங்களை இட்டு நிரப்பி மூடி மறைக்க நேரிடுகிறது என்பதையும்


5. தொடர்பில் பொதுவாக இல்லாமலேயே கிடைக்கும் விருது பட்டம் பரிசு பதவி போன்றவையும்


நன்கு விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கண்ணிகளிடை ஒரு நியாயமான நல்ல மனமுடைய காவல் அலுவலர் எப்படி தத்தளித்து எப்படி போராடி உண்மையை கொண்டு வர முடியும் என கருணாகரன் பாத்திரம் சொல்லி இருக்கிறது...அவர் சம்பளம் இல்லா விடுமுறையும், சட்டம் படிப்பதும், அவர் தோழியும், உடன் பிறந்த ரோல் மாடல் என்னும் அண்ணனாக வரும் மனோஜ் கே.ஜெயனும் 


மொத்தத்தில் இந்த படம் தரும் எப்போதும் போன்ற அறிவுரைகள்


1. குழந்தை பாக்யம் இல்லை என்று அதற்காக எவரையும் பூஜை புனஸ்காரம் என்று நம்பிச் செல்லும் மடமையை


2. காதல், காமம், தீர்த்துக் கொள்ள எவர் என்று தெரியாதவரிடம் சிக்கி பொருளை இழப்பாரை மயங்கிச் செல்லும் முட்டாள் தனத்தை


3. முன் பின் தெரியாதவரை தெரிந்து கொள்ளாமலேயே அவர் தம் பேச்சை நம்பி வீடு வாடைகைக்கு அல்லது அவரது வீட்டில் தங்க வைப்பதை அந்த அறியாமையை


4. நம்முடைய தகவல்களை தேவையில்லாமல் பிறருக்கு பகிர்ந்து கொண்டு அதைக் குற்றவாளிகள் பயன்படுத்தி செய்யாத குற்றத்திற்காக படும் வேதனை அவஸ்தையுறும் ஏமாளித்தனத்தை


5. காணும் காட்சிகளை எல்லாம் உண்மை என நம்பும் பேதமையை


எல்லாம் மிக அழகாக விளக்கிச் செல்கிறது.


இந்த தொழில் நுட்ப உலகில் கொஞ்சம் அறிவிருந்தால் போதும் எல்லா காவல், அரசு நடவடிக்கைகளையும் மீறி இந்த  குற்றவாளிகள் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள், விலாச அட்டைகள், ஆதார் கார்ட்கள், மாந்திரிக கயிறுகள், அதற்கான பொம்மைகள் இப்படி வகைப்படுத்தி காண்பிக்கும் இடம் உச்சம்...


இப்படி நம்பும் ஒரு தம்பதியினர் இப்படிப் பட்ட ஒருவரால் தாம் தமக்கு குழந்தை பிறந்தது என அவரை கடவுளாகக் கொள்வதும்


ஒரு நபர் தமது பேரை பயன்படுத்தி அந்த .....போகுமிடமில்லாம் கடனை, குற்ற நடவடிக்கைகளை தம் பேரை பயன்படுத்தி தம்மை படாத பாடு படுத்தி வைத்த  மனநோயில் வாயில் வரக் கூடாத வார்த்தையில் எல்லாம் அந்த ......பையனை திட்டுவதுமாக‌


எதிரும் புதிருமான  காட்சிகள் வழி நமக்கு நிறைய சொல்லப் பட்டிருக்கின்றன‌


மொத்ததில் காவல் துறை என்பது மட்டும் நமக்கு தீர்வை தந்து விட வழியில்லை

பொதுமக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இது போன்ற குற்ற நடவடிக்கைகள் நடக்க வழி இருக்காது மேலும் சமூக எண்ண மதிப்பீடுகள், குழந்தை பிறப்பு, பொருளாதாரம், காதல், காமம் பற்றி எல்லாம் குற்ற நடவடிக்கையாக மாறுமளவு எல்லை மீறக் கூடாது ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற நடவடிக்கை எல்லாம் சீராக்கப் பட்டு காவல் துறை போன்ற அரசின் கரங்களுக்கு வலு சேர்க்கும் எனச் சொல்லும் படம். ஒரு சிக்கலான பிரச்சனைக்கு தம்மால் முடிந்தளவு தீர்வையும் சொல்லி இருக்கிறது.


இதனிடையே காவல் பணி செய்யும் ஊழியர்களும் அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டும் அவரவர் விருப்பப் படி நடந்து கொண்டு பொதுமக்களின் வெறுப்புக்கும் ஆளாகக் கூடாது மேலும் அப்பாவிகள் அந்த ஆட்டோ டிரைவர் அவரது தங்கை போன்றோர் தண்டிக்கப் படக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது.


நாம் ஏற்கெனவே தமிழில் ஜெய் பீம் நீதியரசர் சந்துருவின் வழக்கறிஞர் கால வரலாற்று பழங்குடியினர் கதையை படமாக கொண்டு வந்து அண்மைக் காலத்தில் பார்த்து விட்டதால் இது பிரமிப்பு ஏற்படுத்த வில்லை. ஆனாலும் அது ஒரு கோணம் இது வேறு கோணம்.


காவல் துறை எப்படி எல்லாம் நிர்பந்திக்கப் பட்டு தவறுகள் இழைக்கின்றன அதனால் எப்படி அப்பாவிகள் வாழ்வு பாதிக்கப் படுகின்றன என்பதை நன்கு சொல்லி உள்ள படம்....நன்கு ஆய்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்...மக்கள், அப்பாவி மக்கள், காவல் துறை, குற்றவாளிகள் எல்லாம் பிணைத்து...புத்தர் நெறிப்படி ஆசையே அழிவுக்கு காரணம் என்ற பழங்கால மொழியின் மூலமே இதற்கு தீர்வு வரும்...ஆனால் பின் நோக்கி பயணம் செய்து பழக்கப் பட்ட மக்கள் அந்த நேரிய வழியில் சீரிய வழியில் எல்லாம் பயணம் செய்ய ஆசைப்படுவார்களா? குற்றங்கள் குறையுமா?



பாருங்கள் படமாகவே...பின் கொள்கை பிடிப்புள்ளோர் அது பற்றி கலந்துரையாடுங்கள்.


நன்றி

வணக்கம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை





No comments:

Post a Comment