Sunday, March 20, 2022

கடவுள் தேசத்தில் தவறி விழுந்த விதைகள்: கவிஞர் தணிகை

 கடவுள் தேசத்தில் தவறி விழுந்த விதைகள்: கவிஞர் தணிகை



கேரள தேசத்தை கடவுளின் தேசம் என்பார். 

அங்கு இரண்டு நாளாக  செய்திகளில் முக்கிய இடத்தில் இந்த செய்தி அது: ஒரு தந்தை தமது மகனை மருமகளை பேரப் பிள்ளைகளை நிலம் விவசாயம் சார்ந்த பிரச்சனை ஒன்றிற்காக வீட்டைப் பூட்டி விட்டு, வீட்டு தண்ணீர் தொட்டியில் திட்டமிட்டு  நீரைக் காலி செய்து, மின்சாரத்தை மற்றும் தொலைத் தொடர்பு யாவற்றையும் துண்டித்து விட்டு அவர்கள் எல்லாம் படுக்கை அறைக்கு சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து வெறித்தனமாக படுகொலைகள் செய்துள்ளார். 


காப்பாற்ற வந்தவர்களையும் நெருங்கினால் உங்களையும் கொல்லத் தயங்க மாட்டேன் என மிரட்டி உள்ளார், காவல் துறை, தீ அணைப்புத் துறை வந்து நடவடிக்கை எடுத்தும் காப்பாற்ற வழி இல்லை. அந்த அறையில் இருந்த கழிவறையில் நீர் பிடித்து தீயை அணைக்க முயன்ற மகனுக்கு அங்கே தண்ணீர் வராத நிலை.


விவசாயம் செய்யாமலும், விளை நிலத்தை திருப்பி தந்தைக்கே கொடுக்காமல் விட்டு, விவசாயம் செய்ய விடாமல் இருந்த மகன் குடும்பத்துக்கு இவர் செய்ய அநீதி... ஒருவேளை நிலத்தை விவசாயத்தை அந்தளவு நேசித்திருப்பாரோ? மண்ணை விட உயிர்கள் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாததாயிற்றே என்ற பக்குவம் இவருக்கு எதனால் போயிற்று என்பதுதான் தெரியவில்லை...


கொஞ்ச நாட்களுக்கும் முன்பு கேரளத்தில் இருந்து ஒரு( நெட் ஒர்க் ) வலைப் பின்னல் பற்றி செய்தி தொடர்ந்து சில நாட்கள் வந்து கொண்டே இருந்தன அதன் பின் அவை காணாமல் போயிற்று. அது மேலை நாடுகளில் சில இடங்களில் இருப்பது போன்ற குழு பாலியல் உறவுகளும், துணையை மாற்றிக் கொள்வதுமான தொடர் செய்திகள் கேரளத்தில் இருந்து ஆரம்பித்து அதன் தொடர்ச்சி பல இடங்களில் இந்தியாவில் விரிந்து பல மாநிலங்களுள் செல்வதாகவும் அத்துடன் முக்கிய புள்ளிகள், அரசியல் பிரபல‌ நபர்கள் தொடர்புகள் விரியக் கூடும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.... ஆனால் அதன் பின் மறக்கப் பட்டன.


 ஆக கல்வியில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலத்தில் இது போன்ற தவறான விதைகளும் அவ்வப்போது தமது விருட்சங்களை விரித்தே வைக்கின்றன இவை எல்லாம் நாம் மறந்து போக வேண்டிய செய்திகள் என்றாலும் இவைதான் கல்வி தரும் வளர்ச்சியும் நாகரீகமுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment