Wednesday, July 22, 2020

வல்லரசுகளின் ஆய்தம் ஏந்தாத யுத்த காலமா இது? : கவிஞர் தணிகை

வல்லரசுகளின் ஆய்தம் ஏந்தாத யுத்த காலமா இது? : கவிஞர் தணிகை


Bill Gates commits $750M to help Oxford vaccinate the world ...

செயற்கைக் கோள்களை பில் கேட்ஸ் பூமியின் சுற்று வட்டப் பாதைகளில் அனுப்பி செய்தி சேகரிக்கிறார் என்பதும் ஏன் இந்தியா கூட செயற்கைக் கோள் தொழில் நுட்ப வாசலை தனியார்க்கு திறந்து விட்டிருக்கிறது என்பதும் செய்திகள். சிப் வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிற‌

சீனா உலகெங்கும் தனது முன்னிலையை நிலை நிறுத்திக் கொள்ள மறைமுகமாக பணத்தால் அடித்து போர் புரிந்து வருகிறது என்பதும் கோவிட் 19 வைரஸ்  உலகளாவிய பரவலுக்கு இந்த நாட்டின் செயல்பாடுகள் தாம் காரணம் என்றும் பலப் பல செய்திகள் உள்ளன.

மக்கள் தொகையை குறைக்கலாம் என்றும் மேலும் மேலும் பில் கேட்ஸ் தடுப்பு மருந்து என இலாபம் ஈட்டி உலகை கட்டிப் போடப் பார்க்கிறார் என்றும் , மற்ற நாடுகள் யாவும் பாதிப்படையும்போது சீனா இலாபமடைந்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் மைக்ரோ சாஃப்ட்வேர் அதிபர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில் கேட்ஸ் ட்ரஸ்ட் மட்டும்  உலகெலாம் நிரம்பி அவர்கள் இருவர் மட்டும் ஆயிரம் வருடம் வாழ்ந்து விட முடியுமா என்ன?

Future Weapons of China 2020 | People's Liberation Army Update ...
மொத்தத்தில் உலகில் தொழில் வளர்ச்சி வியாபாரம் யாவும் படுத்து விட்ட நிலை. ஆனாலும் மாஸ்க் முகக் கவசம், கையுறை (கிளவுஸ்) சானிட்டைசர் கைக்கழுவும் கலவை மருந்து கொரானா பாதுகாப்பு பொருள்கள் என்றும் மருத்துவப் பொருட்களும் உலகெங்கும் வியாபாரச் சந்தையில்.

ந்தை என்றாலே இடைத் தரகர் மட்டுமே அதிகம் இலாபம் ஈட்டுவது என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது
இந்தியாவில் முதலில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி என்று முதலாளிகள் கட்ட வேண்டும் என  அரசு சொல்ல ஆரம்பித்து அது நுகர்வோர் தலையில் வந்து விடிந்தது போல... மருத்துவ மனையில் ஒரு நாளைக்கு ரூ.15000 செலவு என ஆரம்பித்து சென்று கொண்டிருக்கிறதாம் இலட்சக் கணக்கில். இருப்போர் செய்வார். இல்லாதவர் அப்படியே இருந்து செத்துப் போவதுதான் சரியோ.?

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகள், ரஷியா, அமெரிக்கா எல்லாம் ராணுவத் தளவாடங்கள், போர் விமானம்,ஆயுதங்கள், விற்பனை. இந்தியா போன்ற நாடுகள் என்ன தான் தயாரித்தாலும் தம் கை முதலை எல்லாம் அவர்களிடம் ஆயுதம் வாங்கி விட்டு கொடுத்த பின் கையேந்தும் நிலையே.
Pakistan's nuclear weapons: Bigger than India: Report of US Agency ...
இங்கு உள்ளூர் மக்களுக்கு தரம் தாழ்ந்த பொருட்களைக் கொடுத்து விட்டு முதல் தர பொருட்களை ஏற்றுமதி என தேயிலை முதல் எல்லாப் பொருட்களையும் ஏற்றுமதி அந்நியச் செலாவணி என்ற இந்தியா இப்போது தொழில் வளம் இழந்து நிற்கிறது.

இந்தியா மட்டுமல்ல உலகே தனது கொரானாவுக்கு கோவிட் 19க்கு முன் காலத்தை அடைய பல்லாண்டுகள் ஆகலாம். அப்போது எவர் இருக்கிறார்களோ எவர் இல்லையோ...இங்கே நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பதும், சித்த மருத்துவத்திலும் பாதுகாப்பு இருப்பதாகச் செய்திகள் ...ஆனால் அதன் வழி முழுதாகச் செல்லாமல் உலகு எவ்வழிச் செல்கிறதோ அதே வழியில் இந்தியாவும் தமிழகமும் சென்று கொண்டிருக்கிறது. அதில் விதி விலக்கில்லை.
The US government is okay with India's purchase of Russian weapons ...
நாமெல்லாம் அறிய முடியாத முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத உலக அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது இந்த கொரானா கோவிட் 19 மூலம். இலஞ்சமும் ஊழலும் இடைத்தரகும் வியாபாரமும் நடந்து கொண்டுதானிருக்கிறது எவர் இருந்தாலும் எவர் இறந்தாலும்...இறப்பிலும் பிணத்திலும் இருந்து வருவாய் ஈட்டிடும் ஈனப் பிழைப்பு நடத்தி வருகிறது '

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



No comments:

Post a Comment