Tuesday, July 21, 2020

கோவிட் 19 கொரானா தீண்டாமை வேண்டாம்: கவிஞர் தணிகை

கோவிட் 19 கொரானா தீண்டாமை  வேண்டாம்: கவிஞர் தணிகை

VMSDC | VMS Dental College | Vinayaka Mission's Sankarachariyar ...
[principal Prof.Dr. J.Baby John.M.D.S . VMSDC.]

நோய்த் தொற்று ஏற்பட்ட எவருமே தீண்டத்தகாத மனிதரல்ல, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது மனித நேயமல்ல...அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வோம். அவர்களது மனக்காயம் ஆற்றுவோம். வேதனையிலிருந்து தேற்றுவோம். அன்போடு அரவணைத்து நம்பிக்கையுள்ளோராய் மாற்றுவோம். என்றும் அவர் வாழ்வில் தீப ஒளி ஏற்றுவோம், நோயிலிருந்து மீண்டு வர அன்னை தெரஸாவின் வழி நின்று அன்பு வழி காட்டுவோம்:

ஒவ்வொரு உயிருமே நமக்கும் நமது புவிக்கும் அதி முக்கியம். எனவே அதை அவ்வளவு எளிதில் நாம் போக விட்டு விடக் கூடாது...

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி அரியானூர் சேலம் 636 308 இன்று ஒரு கொரானா கோவிட் 19 தீண்டாமை வேண்டாம் என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டது. அதை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பொது உறவு அலுவலர் என்ற முறையில் எனக்கும் பங்கு இருந்தது.


இந்த துண்டு அறிக்கை வெளியிட பெரிதும் காரணமாக இருந்தவர் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர்J. பேபி ஜான் என்றால் அது மிகையாகாது.
      கொரானா கோவிட் 19 வைரஸ் தடுப்பு விழிப்புணர்வுத் தகவல்கள்

Image may contain: one or more people and people standing

                                                       அச்சம் தேவை இல்லை
                                             எச்சரிக்கை அவசியம் தேவை!

1.தவறாமல் முகக் கவசம் அணியுங்கள்
2.சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்
3.நன்றாக சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
4.போதுமான அளவு தூங்குங்கள்
5.நன்றாகப் பணி செய்யுங்கள்
6.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
7.தினமும் குளித்து சுத்தமாக இருங்கள்
8.சாப்பிடும் முன் சோப்பு போட்டு கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்
Image may contain: one or more people, people sitting and indoor

9.மலம் , சிறுநீர் கழித்த  பின் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்
10.வீட்டை விட்டு வெளிச் சென்று வந்தால் உடல் தூய்மை செய்யுங்கள்
11.கூட்டத்தில் சேராதீர், கூட்டம் சேர்க்காதீர்!
12.புகைப்பதை, மது அருந்துவதை விட்டு விடுங்கள்
13.பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்
14.மூக்கு , வாய்,கண்களில் கை வைக்காதீர்கள்
15.60 வயது மீறிய பெரியோரையும் சிறு குழந்தைகளையும்
வெளி அனுப்பாமல் கட்டுப் பாட்டுடன் வைத்திருங்கள்
16.சர்க்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு போன்ற நோயுள்ளவர்கள்
சரியான மருந்து உட்கொண்டு கட்டுப்பாட்டுடன் இருங்கள்
Image may contain: one or more people, people standing, tree and outdoor
 சமூகத் தொற்று ஏற்படும் காலம் இது என்கிறார்கள். அதற்கு நாம் இடமளித்து விடக் கூடாது. நமது பழக்க வழக்கங்கள் முன் சொன்னபடி நன்கமைந்து விட்டால் இந்த நோய் நமைத் தாக்கவே வழி இல்லை.
Image may contain: one or more people and people standing
மனித குலம் தோன்றியது முதல் இது போன்ற பல இடர்பாடுகளை
சந்தித்து மீண்டதுண்டு. நம்புங்கள்! பீதி வேண்டாம்.
கண்ணுக்குத் தெரியா வைரஸ் கிருமிகளை நமது உடலும் உயிரும் வெல்லும்
மனித குலம் மறுபடியும் நற்சேதிகள் சொல்லும் சாதனை செய்யும்.
நம்பிக்கையுடன் வாழுங்கள்.பயமே கோரானாத் தொற்றை விட அதிகம் கொல்கிறது
மீண்டு வாருங்கள் அனைவரையும் காப்போம்
உலகு மீட்சி பெறும்.
Image may contain: one or more people and outdoor
முன் சொன்னவற்றை நாம் கடைப் பிடிக்க ஆரம்பித்தால் தொற்றும் நோயிலிருந்து தப்பிக்கலாம். அதையும் மீறும் போது இருக்கவே இருக்கிறது வெந்நீரும் எலுமிச்சையும் இஞ்சியும் மஞ்சளும் இவற்றை இளம் சூடாகப் பருகி வருவதும் பால் குடிக்கும் பழக்கம் உள்ளார் அதில் சிறிது மஞ்சள் கலந்து குடிப்பதும் சளி நீக்கியான ஓமவள்ளி கற்பூரவள்ளியில், ஆடு தின்னாப் பாலை போன்ற தாவரங்களில் இயல்பாகவே சளி நீக்கும் சக்தி உண்டு. பயன் படுத்தலாம்.
Image may contain: one or more people and people standing

  நன்றாக சிந்தித்துப் பாருங்கள்: கடந்த ஜனவரியில் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் உலகெங்கும் பரவி இருக்கும் இந்நாள் வரை அதாவது 6 மாதத்திற்கும்மேலாக ஒருவர்க்கு அது எப்படிப் பட்டவராக இருந்த போதும் எந்த வயதில் இருந்த போதும் குழந்தை முதல் பெரியவர் வரை ஆண் பெண் என அனைத்துப் பிரிவினரிலும் நீரிழிவு வியாதி உள்ளார் இரத்தக் கொதிப்பு உள்ளார், பருமனாக இருப்பவர் அல்லது ஒல்லியாக இருப்பவர் இப்படி எந்தப் பிரிவிலும் சளி பிடிக்காமல் இருக்க முடியுமா, சாதாரணக் காய்ச்சல் , தலைவலி, தொண்டைப் புண் வராமல் இருக்குமா, மாறுதலான உணவை உட்கொள்ளும் போதும் இடமாற்றம் செய்யும் போதும், சரியான தூக்கம் இல்லாதிருந்த போதும் உடற்பயிற்சி இல்லாத போதும் மலக் கழிவு வெளியேறாத போதும் இவை எல்லாம் சாதாரணமாக இருக்கும் அறிகுறிகளாகவே இருக்கும். இவை எல்லாவற்றையும் நாம்  கொரானா வைரஸ் 19 தாக்கம் என கணக்கில் கொண்டோம் எனில் இந்த உலகில் அனைவருக்குமே இது இருந்து கொண்டே இருக்கும். எனவே
Image may contain: one or more people, people standing and outdoor
பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. பிற கிரகங்களில் அல்லது துணைக் கோள்களில் எல்லாம் உயிர்கள் இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறார்கள் சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்றுதான் சொல்கிறார்களே தவிர உறுதிப் படுத்த முடியாத மனித இனம். இங்கு மட்டுமே இருக்கின்ற நிலையில் அவை இயல்பான நிலையில் முடிவுக்கு வரவேண்டியதன்றி இது போன்ற பீதி, பயம் , தொற்று போன்றவற்றிற்கு எளிய காரணங்களால் ஆட்பட்டு முடிந்து விடக் கூடாது
Image may contain: one or more people and people standing
உயிரைப் போற்றுவோம்             உயிர்ப்போடு உயிர் தீபம் ஏற்றுவோம்.
நன்றி 
Image may contain: one or more people, people standing and outdoor

வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment