Sunday, January 26, 2020

திரு மண வாழ்த்து மடல்:கவிஞர் தணிகை

                                   திரு மண வாழ்த்து மடல்

                                          நாள் 27.01.2020          
இடம்: கரபுரநாதர் கோவில்        உத்தமசோழபுரம்      விகாரி: தை13.

                                                       மணமக்கள்
   சௌந்தரராஜன் வி.மி.ச.ப.க                               சசிகலா  த.நா.அ.ம.

image.png

என் வாழ்வில் எத்த‌னையோ வாழ்த்துகள் வந்திருக்கின்றன, தந்திருக்கிறேன்
எனினும் இது எனக்கு மிகவும் பிடித்த வாழ்த்து இது, வாழ்க்கை இது...

2020ன் பெரும் செய்தி எனக்கு சௌந்தரராஜன் மணம் பெறும் செய்தி
பொங்கலை விட தித்திக்கும் செய்தியிது பொங்கிப் பெருகும் நிதியாய்.

உலகின் உயர் நவீன கணினித் தொழிலும்
மனித குலத்தின் மாபெரும் சேவையான
செவிலியர் சேவையும்  உண்மையுடன்
சௌந்தரராஜன் சசிகலா மணத்துடன்
கை கோர்க்கின்றன மெய் சேர்கின்றன‌
உயிரும் மெய்யும் இணைந்தால் உயிர்மெய்தானே!

பிறர் மகிழ்வைப் பார்ப்பதில் பகிர்வதில்
எனக்கு எப்போதுமே பெரு மகிழ்வு
நானிருக்கும்போதும் இல்லாதபோதும்
எனது பேர் சொல்லும் இந்நிகழ்வு
எங்கள் கல்லூரிப் பணியில் கிடைத்த கொடையாக‌

அருமருந்து மானிடத்தின் பெருமருந்து
அமிர்தம் என்றாலும் அளவோடு
என்கிறது நமது தமிழ் ஆதிச் சுடர் குறள்

தீயவைக்கு தீயை வை தமிழ்ப் புகழ்
மணக்கப் பெரும் பொங்கல் வை சௌந்தர்:
வாழ்த்துக் குவிய எழுதி வை...
வாழ்த்துக் குவியும் எடுத்து வை...

இந்த விழாக் காலத்துடன்
உங்கள் திருமண விழாக் கோலமும் சேர‌
உங்கள் உணர்வுப் பொங்கலுடன்
எல்லாம் வல்ல இயற்கையின் வல்லமை
இறைந்து கிடக்கிறது வணங்கிப் பணிவோம்
ஒளி(ர்)ந்து கிடக்கும் பேருண்மையை

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ‌
என்றும் வாழ்த்தி மகிழும்

கவிஞர் தணிகை
த.சண்முக வடிவு
த.க.ரா.சு.மணியம்.
மேட்டூர் அணை.3.


image.png














மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
Attachments area

No comments:

Post a Comment