Friday, November 8, 2019

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை

Image result for feminism"

அன்றும் வழக்கம் போல் ஆறு மணி இருபத்தைந்து நிமிடத்தில் வந்த பேருந்தை சரியாகப் பிடித்தேன். முன் வரிசை இருக்கைகளில் ஒருவர் இருவர் என பல இருக்கைகளை மங்கையர் ஆக்ரமித்திருந்தனர். அவர்கள் இருந்த இருக்கைகள் எல்லாவற்றிலுமே ஒரு இருக்கை, இரண்டு இருக்கை இப்படியாக காலியாகவே இருந்தன.

பின்னால் சென்று அமர்ந்தவன், மேச்சேரி வந்ததும் பலர் இறங்கிய உடன் பின்னால் அமர்ந்தால் முதுகு வலி வருகிறதே என முன் உள்ள இருக்கையில் அமர முயன்றேன்

ஒரு இருக்கையில் இருந்த ஐ.டி.ஐ மாணவர் மேச்சேரியில் இறங்க அந்த இருக்கையிலும் ஒரெ பெண் நடுவே பையை வைத்தபடி  நகர்ந்து கொண்டு இடம் கொடும்மா என்றதற்கு பெண்கள் வரட்டுமே என்றார். பெண்கள் இருக்கைகள் பல காலியாக இருக்கிறது ஓருவர் அல்லது இருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று அமருங்கள் நாங்கள் ஆண்கள் அமர்ந்துகொள்கிறோம் என்றேன். கடைசி வரை அந்த இருக்கைக்கான பெண்கள் வரவே இல்லை என்பது வேறு.

அவர் எழுந்த பாடுமில்லை அவரது  தெரிந்த பெண் அவருக்கு முன் வரச் சொல்லியும் இவர் சென்ற பாடில்லை. இவருக்காக அவர் ஜன்னல் இருக்கையை விட்ட பாடுமில்லை. முன் இருக்கைகள் காலியுடன் இருப்பதைக் காட்டி சென்று முன் அமருங்கள் எனச் சொல்லி விட...அவர் வாந்தி வரும் எனவே ஜன்னல் இருக்கையே வேண்டும் எனச் சொல்ல அப்படியே அமர்ந்திருக்க பையை நடுவில் வைத்து அமர்ந்து விட்டேன்

அதே போல ஏறிய உடன் அமர்ந்திருத்த இடத்தில் இணை இருக்கையில் இருந்தவர் பின்னால் இருந்த ஆண்மகனை கண்ணாடியை சாத்துங்கள் என்றார் நானும் அவரும் குளிர் காற்றுக்காக சொல்கிறாரோ என்று உன் பக்க கண்ணாடிதாம்மா திறந்திருக்கிறது. அவர் பக்கம் சாத்தி தானே இருக்கிறது என்றோம் விவரம் அறியாமல்.
Image result for feminism"
பிறகு சொன்னார் வாந்தி வரும் அதுதான் என்றார். அப்படியானால் நீ பின்னால் போகவேண்டியதுதானே என்றால் அவர் அந்த இடத்தை விட்டு அகல்வதாக இல்லை.

ஏதோ தேர்வு எழுதுகிற பெண்கள் கையில் பாடப் புத்தகங்கள் வேறு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment