Tuesday, February 13, 2018

இந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர் தணிகை

இந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர் தணிகை

Image result for living is sin in Tamil nadu and India


சாவதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் என்ற எண்ணக் கீற்றின் பகிர்தல் என்னுள் எழுந்த வன்மத்தை சாந்தப் படுத்தி விட்டது.

பாரதி சொன்னபடி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பதற்கேற்ப இன்பசுகத்தில் விளைந்த மணியை முத்தை கொஞ்சம் பட்டை தீட்டவே இந்த ஜீவன் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல...

திருவள்ளுவர், மகாத்மா காந்தி, இவர்கள் வரிசையில் 11 வதாக இடம் பெற்ற தமிழகத்தின் சட்டசபையின் ஓவியப்படம் நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இனி எது எதற்கோ வாக்கெடுப்பு நடத்துவது போல இது போன்ற ஒரு தீர்மானத்திற்கும் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தி வைப்பதும் கூட சரியாக இருக்குமா என்றுத் தோன்றவில்லை எனினும் ட்ரையல் அன்ட் எர்ரர் முறையில் செய்து பார்ப்பதில் தவறில்லை.

Image result for living is sin in Tamil nadu and India


உச்ச நீதிமன்றம் லாலுவுக்கு குற்றவாளி எனத் தண்டனை பெற்ற ஒருவர் கட்சித் தலைவராக இருக்க வாய்ப்பில்லை எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு குற்றவாளித் தலைவருக்கு தமிழகத்தின் சட்டசபையின் வளாகத்தில் ஒரு அங்கீகாரம் வழங்கி பெருமைப்படுத்திய நிகழ்வு தமிழகத்தின் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி எத்தகையது, அதன் மக்கள் எத்தகையராக இருக்கின்றனர் என்பதற்கான அத்தாட்சி.

இவர் அதைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கோவிலுக்கு போகிறார் என தேர்தல் பிரச்சாரம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரங்கேறி வரும் வேளையில் இங்கு குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது
Image result for living is sin in Tamil nadu and India
பாரதியின் பேர் சொன்னாலே பகலவன் போல சுட்டெரிக்கும் சிந்தனையுடனான பேர் கொண்ட பல்கலைக் கழகத்தின் தலைமையும் , அதன் செய்கைகளும் நாடே சிரிக்கிற அளவில் அரங்கேறி வருகிறது..

ஒரு 8 மாதக் கைக்குழந்தை உறவின் ஒரு மிருகத்தால் தவறான செயலுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது இராஜஸ்தானில், டில்லியில் ஒரு 6 வயது தளிர் புழை,குதம் , சதை, ஜவ்வு எல்லாம் கிழிந்து இறந்திருக்கிறது...

இப்படி இங்கு நடந்து வருகையில் , மோடியின் ஆட்சி மிகவும் வல்லமை உள்ளது காங்கிரஸ் 60 ஆண்டுக் கால ஆட்சிதான் சரியில்லை என நாட்டின் பிரதானக் கட்சிகள் ஒன்றையொன்று கத்தரிக்கோலின் இரு விளிம்பின் முனைகளாய் வெட்டிக் கொண்டிருக்கின்றன மக்களாட்சி தத்துவத்தை....

இந்தியாவுக்கு 180 வாக்குகள் பாகிஸ்தானுக்கு 1 வாக்குதான், எனவேதான் மோடி வெளியுறவுக் கொள்கையை செப்பனிடவே நாடு தங்காமல் வெளிநாடே கதி என்றிருக்கிறார்...என்கிறார்கள்...ரேணுகா சவுத்ரி வாய்விட்டு சிரித்ததில் ஒரு தவறுமே இல்லை...வேறு வாயில் சிரிக்கும்படியான ஆட்சிதான் இது. ஏழை மக்களை கேட்டுப்பார்த்தால் தாம் தெரியும் அவன் படும்பாடு பற்றி.. புராணத்தையும் இதிகாசத்தையும் சொல்லிச் சொல்லி இன்னும் மக்களை மடமைப்படுத்தி அடிமைப்படுத்தி மயக்கியே ஆட்சிக்காலத்தை நீட்டித்துக் கொள்கிறார்கள்...

மாநிலத்தில் இலட்சத்திற்கும் மேல் ஸ்கூட்டிக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பம் குவிந்திருக்கிறது, பேருந்து கட்டணத்தில் பயணம் செய்ய முடியா அளவு வாழ்க்கை சீர் குலைந்தபோதும்... பேருந்து பயணத்திலிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தின் வீச்சை இதிலும் பார்க்கலாம் அல்லது இன்னும் இலவச மோகம் அவர்களை அலைகடலில் ஆடும் படகாக ஆட்டி வருகிறது என்றும் சொல்லலாம்.
Image result for living is sin in Tamil nadu and India
ஆக மாநிலத்திலும் மத்தியிலும் நடந்து வரும் ஆட்சி முறைகள் மக்களை நெறிப்படுத்தும் வடிவத்தில் எந்த வகையிலும் செயல்படுவதாகத் தெரியவில்லை

உள்ளே உள்ள மக்களுக்கு குதத்தில் மிளகாய்ப் பொடி தடவி விட்டு, வெளி நாட்டு ஜம்பத்திற்கு ஐஸ் வைத்துக் கொண்டிருக்கும் இந்தியா, மானத்தை விற்று விட்டு, மானத்தை மறைக்கும் கோவணத்தையும் உருவி விட்டு மயிருக்கு டை அடித்துக் கொண்டிருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: