Thursday, February 15, 2018

அறிவே இல்லையாடா? இப்படி பண்ணித் தொலைக்கிறீங்களேடா? கவிஞர் தணிகை

https://youtu.be/2hG7xdo-ofs

அறிவே இல்லையாடா? இப்படி பண்ணித் தொலைக்கிறீங்களேடா? கவிஞர் தணிகை

பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் கண்டறியப்படவில்லை.
மனந்திறந்து பேசலாம் வாங்க...

பிரேம்குமார் என்ற வாகனப் பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் நேற்று கோவை சார்ந்த பகுதியில் பிப்ரவரி 14 அன்றே அதாவது காதலர் தினம் என்று சொல்லிக் கொள்ளும் தினத்திலேயே கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றன கேள்விப்படும் செய்திகள். அவரின் சொந்த ஊர் அல்லது பெற்றோர் இருக்கும் ஊர் : ஒசூர்.

அவரின் வயது சுமார் 20.

இந்த நாட்டின் முக்கியப் பிரச்சனை பெருகி வரும் மக்கள் பெருக்கமல்ல வீரியமற்ற மக்கள் பெருக்கமே. எதற்கு எப்படி போராடுவது என்பதெல்லாம் தெரியாததே.

நீலத் திமிங்கலம் ஒன்றைத் தவிர வேறு எந்த உயிருமே மனிதர் தவிர தற்கொலை செய்து கொள்வதில்லையாமே...

Image result for no suicides further more in our universe

குடி நீர்ப் பிரச்ச்னை, குடி நீர் வியாபாரம், குடி நீர் திருட்டு
மின்சாரப் பிரச்சனை, அவை சார்ந்த உற்பத்தி விநியோகம்
தகவல் தொடர்பு அவை சார்ந்த ஊடகம் மற்றும் அதன் சுரண்டல்
ஆட்சி, அரசு, கட்சிகள், அதிகாரம் அவை சார்ந்த இலஞ்சம் ஊழல்
கல்வி மருத்துவம் தனியார் மயம் அவை சார்ந்த பிரச்சனைகள்
தேர்தல் , தேர்தல் ஆணையம், அவற்றின் குளறுபடிகள்
சட்டம், நீதி, நிர்வாகம் அவை சார்ந்த சார்புடமை
போக்குவரத்து, ரயில்வே, விமானப் போக்குவரத்து அவை சார்ந்த பிரச்சனைகள், வேலை வாய்ப்பின்மை, அரசுப் பணிகளின் சேவை ஒழுங்கின்மை, சாதி மதக் கட்சிகளின் குளறுபடிகள்....
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை முன்பே சொன்ன ஊடக விளைவுகள்
இப்படி கோடிக்கணக்கான பிரச்சனைகள் நாட்டை , வீட்டை உலுக்கி எடுத்து வருகையில் இதை எல்லாம் புறம் தள்ளி விட்டு பயந்து கொண்டு போய்விட்டாயா? வெறுத்து வேரறுத்துக் கொண்டாயா? வாழ்வே போராட்டக் களம்தானே.போராடுவது ஒன்றுதானே நமக்கு எல்லாம் கிடைத்த வரம்...

எவளோ ஒருத்தி அவள் உனக்கு நீ நினைத்தபடி செயல்படவில்லை என உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவனே, நீ கொஞ்சமும் யோசனை செய்தாயா இதன் விளைவெலாம் எப்படி இருக்குமென...

பெற்றோரும் உனது பிரிவில் படிக்கும் அத்தனை மாணவர்களும் உனது பிணம் கிடக்கும் மரணப் பிரேரணை அறிக்கையை உனது உடலை கூறிட்டுப் பார்த்த பின் வாங்கக் கிடக்கிறார்கள். அரசு மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவமனைக்கும் அது மற்றொரு உடல். பேசாமல் அந்த உடலைக் கூட அந்தப் பெற்றோர் மருத்துவத் துறைக்கே தானம் தந்துவிடுவது கூட பயனுடையது...அப்படியாவது அது சமூகத்துக்கு பயன்படட்டுமே...சரி அது அவர்கள் பெற்றவர் விருப்பம்..

காவல்துறை தலைவலியுடன் கல்லூரி நிர்வாகத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. கல்லூரி நிர்வாகம் பயில வரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு காவல்காரரை 24 மணி நேரமும் அவர் கழிப்பறையில் இருக்கும்போதும் தனிமையில் ஓய்வாக  தனது அறையில் இருக்கும்போது காத்து நிற்க முடியாது..

இவன் இப்படி எல்லாம் செய்து கொள்வான் என மின்விசிறி அமைக்காமல் அறை இருக்காது, கயிறு கட்டி துணி காயவைப்பதை அனுமதிக்கமல் இருக்க முடியாது, படுக்க மாணவர்களுக்கு இரும்புக் கட்டில் தராமலும் இருக்க முடியாது...விபத்து எப்போதாவது நிகழ்கிறதே என போக்குவரத்தை, வாழ்வின் போக்கை மாற்றவும் முடியாது, நிறுத்திக் கொள்ளவும் முடியது. என்றாலும் இது ஒரு சமூக அவலம். நாட்டின் வீட்டின் நட்டம் உயிர் உள்ள ஒவ்வொருவருமே அவரவரின் மதிப்பை உணர்ந்தே ஆக வேண்டும்....அப்படி உணர்ந்து விட்டால் நீ உன்னதங்கள் செய்து காட்ட முடியும் மற்றவர்க்கும் வழி காட்ட முடியும்.

உனது உடலுடன் உனது பெற்றோர் இருப்பிடம் செல்லும் வரை அந்த 53 மாணவர்களும் சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல் உனது உடல் அடக்கம் அல்லது எரியூட்டப்படு முடிக்கும் வரை அந்த உணர்விலிருந்து வெளி வர முடியாமல் இருக்கிறார்கள்.

எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு முக்கியமான செலவு செய்ய முடியாமல் அவர்கள் பெற்றோர்  இருந்தும் கூட உனது இறுதிச் செலவுக்கு அவர்களுக்கு கொடுத்து உதவி கடன் படுகிறார்கள்

அப்படி என்னடா கண்டாய் அவளிடம்?

வெளித் தோற்றம், கர்ப்பப் பை, சூல் கொள்ளும் இடம், இவை போன்ற சில பரிமாற்றம் அன்றி பெண்களுக்கும் உனக்கும் இருக்கும் உறுப்புகளும் செயல்பாடுகளும் ஒன்றுதாம்.

இராமலிங்கர் சொல்வது போல‌

அவளுள்ளும் மலம், நிண நீர், மூத்திரம், சளி, எலும்பு, இரத்தம், கண் பீளை எல்லாம் உண்டு உனக்கிருப்பது போலவே...பெண் எனப்படுவது அதிசய பிறப்பெல்லாம் இல்லை, அதுவும் ஒரு தாயிடம் இருந்து இரு கால்வழியே மரண அவஸ்தைக்கிடையே பிறந்து மண்ணில் வீழ்வதுதான், அதற்கும் அதன் பெற்றோர்களின் ஜீன்கள் உண்டு...அவை ஏதோ வேறு கிரகத்திலிருந்தெல்லாம் வந்து வீழவும் இல்லை, யேசு காப்பியத்தில்  சொல்வது போல உயிர்த்தெழுதல் எல்லாம் இல்லை

நினைவு என்ற ஒன்றைப் பிரித்துப் பார்க்கும்போது மனம் என்ற ஒன்றே இல்லை. இரமண மஹரிசி..

அப்படி என்னடா அவசரம்?


Image result for no suicides further more in our universe

ஒரு வேளை நீ ஏமாலி படம் பார்த்தவனாய் இருப்பாயோ? அதில் கூட அந்தப் பெண் இன்னும் இரண்டு நாளில் அவனுக்கு நல்ல செய்தி சொல்வதாகத் தானே சொல்லக் கூடும் என்றுதானே சொல்லி இருக்கிறார்கள்...

ஒரே நாளில் உலக பிரபலம் அடைந்த பிரியா பிராகாஷ் வாரியரின் ஒரு ஆதர் லவ் படம் பார்த்து விட்டாயோ? அதனால் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என முடித்துக் கொண்டாயோ?

ஒரு புருவச் சுழிப்பு, ஒரு கண் அடித்தல் அவ்வளவுதானே வாழ்வு உலகெலாம்...

மதர் தெரசா இப்படி எல்லாம் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை புரிந்து செயின்ட் என்று வரலாற்றில் இடம் பிடித்திருக்க முடியாது

காந்தி இப்படி எல்லாம் நினைத்திருந்தால் மகாத்மா ஆகி இருக்க முடியாது...

நான் மானிடத்தில் அதிக பட்சம் தொட்ட இருவரை மட்டுமே தொட்டிருக்கிறேன்

போடா நீயும் உன் வாழ்வும்...
பெண்ணுக்காக சாவதிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டுமல்லவா?
இந்தச் செய்தி நான் கேள்விப்பட்ட மறு நொடி சொன்னேன் காதலா என்று இல்லை தெரியவில்லை...வகுப்பில் சோர்ந்திருந்தவனை, மாணவர்கள் ஏன் இப்படி எனக் கேட்டிருக்கிறார்கள், சற்று ஓய்வெடுக்க வேண்டும் விடுதி அறைக்கு செல்வதாகச் சொல்லி இருக்கிறான், அவனது நண்பர்களும் அவனுடன் வரக் கேட்டிருக்கிறார்கள். வேண்டாம் வேண்டாம், துறைத் தலைவர் திட்டுவார், நீங்கள் வகுப்பிலேயே இருங்கள் எனக்காக நீங்கள் ஏன் வகுப்பை விட்டு வருகிறேன் எனச் சொல்லி விட்டு, அறைக்குச் சென்று அதன் பின் அவர்களின் முக்கிய நண்பர்களுக்கு எல்லாம் சாரி  என மன்னிப்பு செய்தி அனுப்பி விட்டு மரணித்திருக்கிறான்.

இப்போது வகுப்பே நடக்காமல் அவனுடைய உடல் இறுதி வரை மாணவர்கள் எல்லாம் பின் தொடர இருக்கிறார்கள்...

எனது கோணம் எல்லாம் அவனே யாருமே வேண்டாம் எனப் புறக்கணித்துவிட்டு சென்று விட்டபோது அவனுடைய உடலுடன் ஏண்டா நீங்க எல்லாம் சென்று கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள், போங்கடா போய் வேலையைப் பாருங்கடா, இது போன்ற தவறான முன்னுதாரணத்தை எவருமே எப்போதுமே வழி மொழியாதீர், பின் தொடராதீர் என்று சொல்லியும்

அவர்கள் இவ்வளவு பழகிய பின் அதாவது 2 வருடமாகத் தெரிந்து பழகிய (உண்மையில் தெரியாமல் பழகியிருக்கிறார் என்று சொல்வதும் பொருந்தும்) நண்பனுக்கு கடைசியாக செய்யும் அஞ்சலி, கடைசி வரை இருக்க வேண்டிய சந்தர்ப்பம் என்று எல்லாம் சொல்கிறார்கள்....அவனுக்கு அவன் உடலுக்கு உயிரற்ற அந்த சடலத்துக்கு அதெல்லாம் தெரியப்போகிறதா என்னடா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment